search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள்.
    • செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடந்து வரும் போரில் ஹமாசுக்கு பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக வரும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.

    அதன் படி கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் நாட்டு தொழில் அதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை அவர்கள் நடுக்கடலில் வழிமறித்து கடத்தி சென்றனர். இந்த நிலையில் செங்கடல் மற்றும் பாப்-அல் மண்டப் கடற்பகுதிகள் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.

    நேற்று இஸ்ரேல் நோக்கி பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அந்த டிரோன்களை பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் இடைமறித்து தாக்கி வீழ்த்தியது. இதனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த டிரோன்கள் ஏமன் நாட்டு கடற்பகுதியில் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால் செங்கடல் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்தார்.
    • போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில், இந்திய வம்சாவழியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்துள்ளார்.

    ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் புதன் கிழமை நடைபெற்றது. காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

     


    "ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது. அந்த வகையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்," என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உள்பட 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காசா பகுதி முற்றிலும் நிர்மூலமாகி விட்டது.

    இதற்கிடையே காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபா அருகே தாக்குதல் நடக்கிறது. ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாகவும், ஆஸ்பத்திரியின் கீழே ஹமாசின் சுரங்கங்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசாவில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. அல்-புரேஜ் அகதி முகாம், ரபா, காசா சிட்டி மற்றும் பிற பகுதிகளில் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது.

    வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசியன் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதுபோல் மற்ற ஆஸ்பத்திரிகள் பகுதிகளிலும் தாக்குதல் நடக்கிறது.

    இதனால் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், தஞ்சம் அடைந்த பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள்.

    போதுமான எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குறை பிரசவத்தில் பிறந்த 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காசா ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் குழந்தைகள் ஏற்றப்பட்டு ரபா எல்லை வழியாக எகிப்துக்கு சென்றடைந்தன.

    பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்து இருக்கிறது. செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில், துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமானது.

    அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் "நியாயமான இலக்கு. அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்" என்று ஹவுதி அமைப்பின் ராணுவ அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    தற்போது கடத்தப்பட்டு இருக்கும் கேலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது. எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துருக்கியில் இருந்து சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்தது.
    • ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது

    செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமாகி விட்டது.

    அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும், ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த கப்பல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது ஆகும்.

    கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.

    காசா:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 45- வது நாளை எட்டி உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது முதலில் வான்வெளி வழியாக குண்டுகளை வீசிய இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    காசாவில் மிகப்பெரிய மருத்துவ மனையாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது போர்களமாக பயன்படுத்தி வருவதாகவும், உள்ளே ஏராளமான சுரங்க பாதைகள் அமைத்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. ஆனால் இதனை ஹமாஸ் மறுத்து வருகிறது.

    இதையடுத்து அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கிருந்து பெரும்பாலான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் வெளியேறி விட்டனர். ஆஸ்பத்திரி முழுவதும் இஸ்ரேல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்குள் மிகப்பெரிய அளவில் 10 மீட்டர் ஆழத்தில் 55மீட்டர் நீளத்துக்கு சுரங்கபாதைகள் இருப்பதை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்தனர். இந்த சுரங்க பாதையை ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வீடியோவினை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதே போல பல பதுங்குகுழிகளை கண்டுபிடித்து அழித்து விட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து ஆஸ்பத்திரி முழுவதும் சுரங்கபாதைகள், பதுங்கு குழிகள், பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 நாட்களில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்து உள்ளது. இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவும் இதனை மறுத்து இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் காரணமாக காசா பகுதியில் அமைந்து இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனையில் கண்கலங்க செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போர் காரணமாக கடந்த 72 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எந்த விதமான அத்தியாவசிய சேவையும் கிடைக்காமல் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அத்தியாவசிய வசதிகள் இல்லாத காரணத்தால், அல் ஷிஃபா மருத்துவமனையின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழந்த சடலங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அடக்கம் செய்வதற்கான வசதிகள் இல்லாத அவல நிலை உருவாகி இருக்கிறது.

    இதன் காரணமாக 179 சடலங்கள் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மொத்தமாக புதைக்கப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் முகமது அபு சல்மியா அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார். வேறு வழியில்லாமல் சடலங்களை மொத்தமாக புதைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    மருத்துவமனை வளாகம் முழுக்க சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செய்தியாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், இங்குள்ள சூழல் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதோடு மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு என எதுவுமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்த காரணத்தால், வெளியுலகத்துடனான தொடர்பை இழந்துள்ளது. மருத்துவமனைகளின் அடிதளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களையும் சமீபத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹமாஸ் மற்றும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக மறுத்துள்ளனர்.

    இது குறித்து ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அறிக்கையின் படி, அல் ஷிஃபா மருத்துவமனையினுள் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடிமக்கள் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. கடுமையான மோதல் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.
    • பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். தரைப்படையினர் காசாவின் மையப் பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.

    காசா நகர் மீது இஸ்ரேல் படையினர் மும்முனை தாக்குதல் நடத்தி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களை குறி வைத்து சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதில் ஹமாசின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருவதால் போர் ஒரு மாதத்தையும் கடந்து தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் மனிதாபிமான உதவிகள் அளிக்கும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியது. ஆனாலும் இஸ்ரேல் அதனை நிராகரித்தது. ஹமாஸ் பிடியில் இருக்கும் 239 பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வருதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது.


    அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜோபைடன் காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தினமும் 4 மணி நேரம் காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது.

    அதன்படி காசாவில் 4 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து போர் நடந்து வரும் வடக்கு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தெற்கு பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். நடந்தும், கழுதை வண்டிகள் மூலமாகவும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் சில மணி நேரங்களில் சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். மனிதாபிமான உதவிகளை நாங்கள் ஊக்குவித்து அதை செயல்படுத்தி வருகிறோம். இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் காசவை ஆள முயலவில்லை. பாலஸ்தீன பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க திட்டம் எதுவும் இல்லை. சிறந்த எதிர்காலத்தை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் காசாவில் உள்ள 3 பெரிய ஆஸ்பத்திரிகள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவில் நடைபெற்று வரும் சண்டை, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் ஓட்டம்.
    • காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரை சுற்றி வளைத்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் காசாவை வடக்கு, தெற்கு பகுதிகள் எனப் பிரித்தது. பின்னர் வடக்கு காசாவில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டது. தொடர்ந்து முன்னோக்கி சென்று வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதைகளை வெடிவைத்து தகர்த்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்கள் வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக அறிவித்தது.

    நேற்று காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நெருக்கிப்பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சண்டை நடைபெற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவை அடையும் வகையில் ஓட்டம் பிடித்துள்ளனர். பல மைல் தூரம் நடந்து சென்று தெற்கு காசாவை அடைந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர்களின் டாங்கிகள், வாகனங்களை அழித்தோம் என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

    வடக்கு காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜபாலியா நிவாரண முகாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo