என் மலர்
வழிபாடு
- மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதி உள்ளது.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேற்கே வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
2 நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.

இந்த 2 நதிகளுக்கு இடையேதான் தோரண மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.
வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

சுனை
மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.
அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி, சிவபெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அரச மரத்தடியில் வீற்றிருக்கும் சப்த கன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால் வேண்டுதல் நிறைவேறுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும்.

துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பாவம் போக்கும் புண்ணியமலை, யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு ஏழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.
பல சித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள்.
இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண் டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள தாகவும் கூறுகிறார்கள். நலம் தரும் தோரணமலை தைப்பூச நாயகனை வணங்கி அருள் பெறலாம்.
- நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
- பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 4-ம் திருநாளான 26-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். காலை 4.45 மணி முதல் காலை 5.30 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக காலை 9.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (1-ந்தேதி) சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 2-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், வழிபாடு செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலை வாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை தைப்பூச திருவிழாவில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலாவும் நடக்கிறது.
- முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும்.
- லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் தைப்பூசத் திருநாள் ஒன்று. தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம்.
தைப்பூச நாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து நீராடிவிட்டு, திருநீறு அணிந்து விரதத்தை தொடங்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஓம் சரவணபவ' எனும் ஆறெழுத்து திருமந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது நல்லது.
காலை மற்றும் மதியம் இரு வேளைகளிலும் உணவு உண்ணாமல், பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. முருகப்பெருமானை மனதார நினைத்து, அவன் அருள் வேண்டி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
தைப்பூச விரதத்தை 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது அன்று ஒரு நாள் மட்டும் என அவரவர் விருப்பத்திற்கேற்பவும், உடல்நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளலாம். சிலர், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக சென்றும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தீராத நோயால் அவதிபடுபவர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத்தன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.
தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள்.
- சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை, தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா என உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறப்பிக்கப்படுகிறது.
தைப்பூசத் திருநாளுக்கு பல்வேறு புராணக் காரணங்கள் சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது. இதில் தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள், தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருந்திய தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். இதையடுத்து, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான். இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களை அழித்து, தேவர்களை காத்தார். இதனைப் போற்றும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
ஞானப் பழம் வேண்டி, முருகனுக்கும் விநாயகருக்கும் போட்டி ஏற்பட்டது. அதில் சிவன் - பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார். அந்த தினமே 'தைப்பூசம்' என்றும் கூறப்படுகிறது. மேலும், அன்னை பராசக்தி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு ஞானவேல் கொடுத்த தினமே 'தைப் பூசம்' என்ற கருத்தும் உள்ளது.

சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய திருநாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிவபெருமான், சிதம்பரத்தில் அரங்கேற்றினார். இந்த நடனத்தை ரசித்து பார்த்த பார்வதி தேவிக்கும், அதே போன்று நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அதன்படி, பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் 'தைப்பூசம்' என்கிறார்கள். சிதம்பரத்தில் சிவன் - பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த தைப்பூசம் திருநாளில் தான் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த நாள், சிவன் மற்றும் அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாளாக உள்ளது. அன்றைய தினம் சிவாலயங்களில் சிவபெருமானுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இந்த உலகத்தில் முதன்முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. அதன்பின்பு, அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. அவ்வாறு, உலகம் உருவாகத் (நீர் உருவாக) தொடங்கிய தினமே 'தைப்பூசம்' என்பது நமது முன்னோர்களின் கருத்து. இதன் நினைவாக தான், பல சிவாலயங்களில் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததும், வள்ளி தேவியை மண முடித்ததும் இந்த தைப்பூச நாளில் தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், தை மாதம் 18-ந்தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

தைப்பூசத் நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளிலும் பழனியில் தான் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
- பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.பி. பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சரவணன் தெரிவிக்கையில், பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி பழனி இடும்பன்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இடும்பன்குளத்தில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்றனர். அதேபோல் மலைக்கோவில், அடிவாரம் என 12 இடங்களில் மீட்பு பணி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருகின்றனர்.
- வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது.
- பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
மார்ச் மாதம் 3-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அன்று நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது. பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
அதன்படி, மார்ச் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
அதன்பிறகு புனித சடங்குகள் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தால் மார்ச் 3-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
பக்தர்கள் மேற்கண்ட தகவல்களை கவனத்தில் கொண்டு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு தங்கள் திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, தை - 17 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 8.02 வரை பிறகு சதுர்த்தசி நாளை காலை 4.40 வரை பிறகு பெளர்ணமி
நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.53 வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகு காலம் : காலை 9.00 - 10.30 மணி.
எமகண்டம்: நண்பகல் 1.30-3.00 மணி.
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7-8 மணி வரை. மாலை 5-6 மணி வரை
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். பழனி ஸ்ரீ ஆண்டவர் காலை ஸ்ரீ தெய்வானை திருமணம், இரவு ஸ்ரீ வள்ளித் திருமணக் காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன், திருவாடனை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மேன்மை
ரிஷபம் - நலம்
மிதுனம் - சிறப்பு
கடகம் - வரவு
சிம்மம் - இரக்கம்
கன்னி - ஆரோக்கியம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - பணிவு
மகரம் - கீர்த்தி
கும்பம் - பெருமை
மீனம் - பொறுப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும்.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். வியாபார விருத்திக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காண வேண்டிய நாள். உத்தியோகத்தில் இயந்திர பணியில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படவும்.
கடகம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். புதிய வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும்.
சிம்மம்
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வசதிகள் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரலாம்.
துலாம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
விருச்சிகம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றும்.
தனுசு
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொது நலத்தில் ஈடுபடும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. திட்டமிட்ட பயணம் தாமதப்படும்.
மகரம்
வருமானம் உயரும் நாள். வாழ்க்கை தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம்
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பணம் பல வழிகளிலும் வந்து சேரலாம்.
மீனம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
- அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார்.
- வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது முருகப்பெருமான், வெற்றி வேலாயுதசுவாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்ட தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் என பல சிறப்புகளை இக்கோவில் பெற்றுள்ளது.
தல வரலாறு
முருகப்பெருமான் மீது அதிக பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, ஒரு சமயம் அகத்தியர் முருகனை தரிசிக்க சென்றார். உடன் நாரதர் மற்றும் தேவர்கள் இருந்தனர். ஓரிடம் வந்ததும், அகத்தியர் முருகனுக்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு நைவேத்தியம் செய்ய நீர் கிடைக்கவில்லை. மேலும், அவருக்கும் மிகுந்த தாகம் எடுத்தது.
இதனால் அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகளை முடித்து, தன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகனால் தோன்றுவிக்கப்பட்ட ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீரை கொடுத்து வருகிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் இப்பகுதி 'ஊத்துக்குளி' என அழைக்கப்பட்டது. பின்னர், இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
கோவில், மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரு அழகிய மண்டபத்தில் முருகப் பெருமான் தனியாக அருள்பாலிக்கிறார். வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர். இதற்கு காரணமும் கூறப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தனிமையில் இருந்தார். அப்போது முருகப்பெருமானை மணம் முடிக்க விரும்பிய இரு பெண்கள், இம்மலைக்கு வந்து தங்களை ஆட்கொள்ளும்படி வேண்டினர். இதையடுத்து, முருகப் பெருமானும் அருளாசி வழங்கினார். அதன்படி, இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இங்குள்ள முருகப்பெருமான், திருமணத்துக்கு முந்தைய நிலையில் எழுந்தருளி இருப்பதால் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர்.
மற்றொரு காரணமாக, வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது. இவை மூன்றும் ஆசை, செயல், அறிவு ஆகிய மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரபிரம்மாவாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான கோவில்களில் இச்சாசக்தியும், கிரியா சக்தியும் முருகனுக்கு இருபுறமும் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படுகிறது. இம்மூன்றில் மிக முக்கியமான ஞான சக்தியை, இச்சையும், கிரியையும் இருந்தால் தான் பெற முடியும். இருப்பினும் இவ்வாலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், இவ்விரண்டும் இல்லாமலேயே ஞான சக்தி பெற்றவர் என்பதை இது குறிக்கிறது.
கோவிலில் இடும்பனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலுக்கு கீழே தென்கிழக்கில் சுப்பராயர் சன்னிதி எனும் பாம்பு புற்றுக்கு தனிக் கோவில் உள்ளது. வள்ளி, தெய்வானை சன்னிதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் சுக்குமலையான் சன்னிதி காணப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுக்குமலையானை வழிபட்டு செல்கிறார்கள்.

கோவில் தோற்றம்
வழிபாடு
திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச விழாவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் கதித்த மலை முருகன் கோவில் உள்ளது.
- இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
- பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது.
பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விரதம் இருந்து பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.
விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.
அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமையும் கூட. அதனால்தான் இந்த விரதம் சுக்கிரவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வளர்பிறையில் வரும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன்படி, இன்றைய பூஜையின் முழு மனதுடன் உங்களின் வேண்டுதலை சிவனுக்கு சில பொருட்களை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் நிறைவேறும். அதாவது உங்களுக்கு ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் இதனை செய்யலாம்.
இன்றைய பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் இந்த நாளில் சிவ பெருமானுக்கு என்ன பிரசாதம் செய்வது பொருத்தமானது என்று பார்ப்போம்...
இன்று சுக்கிரவார பிரதோஷ விரதத்தை வழிபடுவதற்கு உகந்த நேரம்:
இன்றைய பிரதோஷ காலம் மாலை 5:01 மணிக்கு தொடங்கி 6:45 மணி வரை. வழிபாட்டிற்கான நல்ல நேரம் மாலை 5:59 மணி முதல் இரவு 8:37 மணி வரை. தோராயமாக இரண்டரை மணி நேரம் கொண்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மனதார சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால், உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.
சிவ பெருமானுக்கு உகந்தவை:
உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தாலோ அல்லது சில வேலைகள் பாதியில் நின்றாலோ இன்று இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சுக்கிர வார பிரதோஷ விரதத்தில், சிவபெருமான் சிவலிங்கத்தில் சில சிறப்புப் பொருட்களை படைத்தால் மகிழ்வார். அதாவது, சிவ பெருமானுக்கு பச்சைப் பால் மற்றும் குங்குமப்பூ படைத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன், காதல் வாழ்க்கையில் உள்ள தடைகளும் குறையும். இது தவிர, நீங்கள் மற்றொரு எளிய பரிகாரத்தையும் முயற்சி செய்யலாம். வில்வத்தில் சிறிது தேன் தடவி சிவ பெருமானுக்கு சமர்ப்பித்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும்.
பிரதோஷத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:
இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. இன்று, தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், இந்த நாளில் ஒருவர் தனது பேச்சின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். மேலும், பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது. மேலும், சிவபெருமானுககு உடைந்த எந்தப் பொருளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குங்குமப்பூவை படைத்தால், அதன் இழைகள் உடைக்கப்படக்கூடாது.
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-16 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி காலை 10.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 3.04 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி, அரிவாட்ட நாயனார் குரு பூஜை, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப் சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த் தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஐப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
திருவிடைமருதூர்ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு, லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஹிமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்ன சேவை, பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செய்தி
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-தெளிவு
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-உதவி
கன்னி-கடமை
துலாம்- உண்மை
விருச்சிகம்-உதவி
தனுசு- முயற்சி
மகரம்-போட்டி
கும்பம்-சுகம்
மீனம்-சுபம்






