என் மலர்
ஆன்மிகம்
- விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
அவினாசி அருகே மேற்குபதி அபிஷேகபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜாப்பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக இந்த விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், 108 சங்க பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், யாக பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 5 கிராமபொதுமக்கள் செய்து இருந்தனர்.
- போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
- கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.
வேளாங்கண்ணி மாதா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 3 அதிசயங்கள் முக்கியமானவை. அவை பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி அளித்தது. மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம், புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகியவை ஆகும்.
இவற்றில் மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்தது, புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகிய 2 அதிசயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம்
பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா அளித்த காட்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் 2-வது காட்சி வேளாங்கண்ணி சிற்றூரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.
தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக முகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.
அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். "மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக" என்றார். ஆனால் அந்த சிறுவனோ தான் நடக்க முடியாதவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையை பார்க்கிறான்.

அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை "மகனே எழுந்து நட" என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார். அந்த சிறுவனின் கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்த சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது. வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னான்.
அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அதற்கு முந்தைய இரவில் அந்த கத்தோலிக்க கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார். உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.
புயலில் சிக்கிய கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாள் அன்னை
கி.பி. 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் 3-வது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவில் இருந்து போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
வழியில் கடுமையான புயலில் அந்த கப்பல் சிக்கியது. அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.
நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என வேண்டினர். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோஷம் குறைய தொடங்கியது.
அவர்கள் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் கரை வந்து சேர்ந்ததற்காக கன்னி மரியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்கள்.
போர்த்துக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அங்கு வந்து அன்னையை வணங்கி செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டிய ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப்பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.
அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்ைக நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.
அவை வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவா காவியங்களாக வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தில் இன்றும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
அன்னை ஆரோக்கிய மாதா நிகழ்த்தி காட்டிய அதிசயங்களால் வேளாங்கண்ணி ஆலயம் உலகம் போற்றும் பேராலயமாக விளங்குகிறது.
- ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள்.
- நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள்.
இன்று மகாளய பட்ச அமாவாசைக்கான 14 நாள் தொடங்குகிறது. இந்த அமாவாசை தினத்துக்கு முன்பு வரும் 14 நாட்களும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.
நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய பட்ச அமாவாசை.
ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.
மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும். இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாளயத்தை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் அடுத்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவறவிட மாட்டார்கள்.
இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.
மகாளயபட்ச நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் குடும்ப பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.
நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.
அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.
மகாளய பட்ச வழிபாடு தரும் மிகப்பெரிய பலன் இது. எனவே இன்று மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தொடங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.
ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.
அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.
இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.
தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.
அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.
அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.
ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.
உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.
உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் தான். நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?
அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 14 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.
அதற்கு நாம் மகாளய பட்ச 14 நாட்களும் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனைகள் அகலும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்மந்தமாக முக்கியப்புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கடகம்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.
கன்னி
கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மண், மனை வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடர்பாக எடுத்த முடிவிற்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர்.
தனுசு
பொன்னான நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல காரியம் நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதரர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
மகரம்
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.
கும்பம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மீனம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-23 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை இரவு 10.52 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.20 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று மகாளயபட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷபப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வியாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-உதவி
மிதுனம்-உண்மை
கடகம்-உவகை
சிம்மம்-ஈகை
கன்னி-நன்மை
துலாம்- நிறைவு
விருச்சிகம்-பாசம்
தனுசு- சாந்தம்
மகரம்-கீர்த்தி
கும்பம்-விருத்தி
மீனம்-அனுகூலம்
- திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
- இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இதனால் இன்று கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றிக்காக பக்தர்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் இன்று கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ரிஷபம் பொருளாதார தேவைகள் நிறைவேறும் வாரம்.
- கடகம் புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம்.
மேஷம்
கனவுகள் நனவாகும் வாரம். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் முடிந்த உடன் கேதுவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். குடும்பத்தை வழி நடத்தக் கூடிய திறமை, துணிச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த மாற்றங்கள் உருவாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகி அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட இழப்புகள் குறைய துவங்கும். உற்றார் உறவினர்கள் உங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவார்கள். தடைபட்ட முன்னோர்களின் சொத்துக்கள் தேடி வரும். திருமணம் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும்.
புதிய நிலம் வாங்குவது வீடு கட்டுவது போன்ற புண்ணிய பலன்கள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அவப்பெயர்கள் விலகும். புண்ணிய காரியங்கள் செய்து மகிழக்கூடிய நேரம் உள்ளது. சின்னத்திரை பெரிய திரை கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிக்க நன்மைகள் கூடும்.
ரிஷபம்
பொருளாதார தேவைகள் நிறைவேறும் வாரம். தனம், வாக்கு ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் கூடும். வீண் வாக்குவாதத்தால் பிரிந்த குடும்ப உறவுகள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள். சுய ஜாதக ரீதியான வாக்கு தோஷம் அகலும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, லாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.
புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆசைகள் தேவைகள் நிறைவேறுவதால் குதூகலமாய் இருப்பீர்கள். பெண்களுக்கு மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும்.
தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள். சிலருக்கு எதிர்பாராத தலைமைப்பதவி கிடைக்கலாம். திருமண ஏற்பாடுகள் துரிதமாகும். குடும்பத்திற்கு மருமகள், மருமகன் வரும் நேரமிது. ஆரோக்கிய குறைபாடு அகலும். தினமும் லலிதா சகஸ்கர நாமம் படித்து மகா லட்சுமியை வழிபடவும்.
மிதுனம்
சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் சூரியன், புதன், கேது சேர்க்கை. விரும்பிய மாற்றங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் செயலாக்கம் பெறும். மன பாரம் குறைந்து நிம்மதியும் தன் நம்பிக்கையும் அதிகரிக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் நடக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாகும்.
சகோதர சகோரிகளின் திருமணம் ஆடம்பரமாக நடந்து முடியும். தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான மாற்றுக் கருத்துகள் மத்தியஸ்தர்களால் சுமூகமாகும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு வேலையாட்களால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைக்கும். திருமண முயற்சியில் தடை, தாமதம் நிலவும். வாக்குகள் பலிதமாகும். தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருப்பார்கள். தினமும் விஷ்ணு சகஸ்கர நாமம் படித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
கடகம்
புத்திசாலித்தனத்தால் சாதனை படைக்கும் வாரம். ராசியில் 4,11-ம் அதிபதி சுக்ரன். வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக் தகுந்த சூழ்நிலை வந்து சேரும். பணவரத்து அதிகமாகி, சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ஆன்லைன் வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். புதிய வீடு கட்ட திட்டம் போடுவார்கள். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துகள் சேரும். சிலருக்கு சொத்துக்கள் மதிப்பு உயரும். விவசாயம், கால்நடை வளர்ப்பு , பண்ணையாளர்களின் வருமானம் அதிகமாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
மாமனாரால் ஏற்பட்ட மனச்சங்கடம் மறையும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் உண்டாகும். 8.9.2025 அன்று மதியம் 2.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள். ராசிக்கு 8-ம் இடத்தில் 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடப்பதால் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கவும்.
சிம்மம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு 7-ல் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்கள் நண்பர்களால் பண இழப்பு ஏற்பட்டு மன நிம்மதி குறையும். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். வார்த்தைகளால் உறவுகளை காயப்படுத்தக்கூடாது.
திருமண முயற்சிகள் காலதாமதமாகும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். பிள்ளைகளின் நடவடிக்கையை நன்றாக கண்காணிக்க வேண்டும்.
8.9.2025 அன்று மதியம் 2.29 மணி முதல் 10.9.2025 அன்று மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நியாயமற்ற பிரச்சினை என்றாலும் நிதானமாகப் பேசுங்கள். சிலருக்கு வாக்கு வாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தினமும் சிவபுராணம் படிக்கவும்.
கன்னி
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் பகவான் வார இறுதியில் இரண்டாம் இடத்தை நோக்கி செல்கிறார். ராசிக்கு சனி செவ்வாய் சம்மந்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். பல கால முயற்சிகள் வெற்றி பெறும். ராசிக்கு 6-ம் இடத்தில் கிரகணம் நடப்பதால் வாரத்தின் ஆரம்பத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் நடந்தாலும் வார இறுதியில் நிலைமைகள் அனைத்தும் சீராகிவிடும்.
முக்கிய குடும்ப பிரச்சினைகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மானியத்துடன் கடன் கிடைக்கும். வீண் செலவால் மனசஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள்.
10.9.2025 அன்று மாலை 4.03 மணி முதல் 12.9.2025 அன்று மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முக்கிய பணிகளை ஒத்திப்போடும் போது மன சஞ்சலமின்றி நிம்மதியாக செயல்பட முடியும். எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். தினமும் சக்தி கவசம் படித்து அம்பிகையை வழிபடவும்.
துலாம்
ஆரவாரம் மிகுந்த வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். பங்குச்சந்தை லாபம் மற்றும் உழைக்காத வருமானம் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். ராசிக்கு 5ல் சந்திர கிரகணம் நடக்க உள்ளது.
எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். 12.9.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும்.தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படித்து அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
விருச்சிகம்
சாதகமும் பாதகமும் நிறைந்த வாரம். ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கியாதிபதி சந்திரன் ராகுவால் கிரகணப்படுத்தப்படுகிறார். உலவுகின்ற கிரக நிலை ஓரளவு சுமாராக உள்ளது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் துணிச்சலும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். கடுமையான உழைப்பால் சமாளிப்பீர்கள்.
கடன், ஆரோக்கியம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு மனம் குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம். வியாபாரத்தில் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். விரும்பிய அரசு உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உரிய வழிபாடு செய்து பித்ருக்களை வழிபட்டால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
தனுசு
புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 3-ம்மிடமான வெற்றி ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்தில் சந்திரன், ராகு சேர்க்கை ஏற்பட்டு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. இதற்கு குருப்பார்வை இருப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை மன மகிழ்ச்சி கூட்டும். பல புண்ணியத் ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். தினமும் குரு கவசம் படித்து தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். ராசிக்கு சுக்கிரன் பார்வை உள்ளது. இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம், அழகிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.
சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சுய ஜாதக ரீதியான தோஷங்களால் ஏற்பட்ட திருமண தடை விலகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். தினமும் சிவபுராணம் படித்து நவகிரகங்களை வழிபடுவது சிறப்பாகும்.
கும்பம்
மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய வாரம். ராசியில் ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார். இது சந்திர கிரகண தோஷ அமைப்பாகும். இதற்கு தன லாபாதிபதி குருவின் பார்வை இருப்பது ஓரளவு சாதகமான பலனை தரும். எனினும் மனசுக்குள் பய உணர்வு மிகுதியாக இருக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விட்டால் பாதிப்புகள் சற்று குறைந்து விடும். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அலைச்சல், அலுப்புகள் அதிகமாகும்.
பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும். தாய், தாய் வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய வாரம்.
மீனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் பார்வையால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சினைகள் தாமாக சீராகும். இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும்.
ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். நிலம், வீடு, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தாய் வழியில் திரண்ட சொத்துக்கள் நகைகள் பணம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். ஜாதகர் மற்றும் தாயின் உடல்நிலையை சீராக பராமரிக்க வேண்டும்.
வம்பு, வழக்கை ஒத்தி வைக்கவும். யாருக்கும் ஜாமின் போடக்கூடாது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். எதிர்பாராத வரவு உண்டு. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அலைச்சல்கள் உண்டு.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.
கடகம்
யோகங்கள் ஏற்படயோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சஞ்சலங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்ற மனக்குழப்பம் ஏற்படும்.
சிம்மம்
எடுத்த முயற்சி பலன் தரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வருங்காலக் கனவுகளை நனவாக்கப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மகரம்
மனக்கலக்கம் அகலும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். நேற்று மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
மீனம்
அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பக்குமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
- சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-22 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நள்ளிரவு 12.32 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : சதயம் இரவு 11.13 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய முழு சந்திர கிரகணம், காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம்
இன்று ராகு கிரஸ்த முழு சந்திர கிரகணம். தொடக்கம் இரவு மணி 9.51 மத்யமம் (நடு)இரவு மணி 11.42. முடிவு பின்னிரவு 2.25 மணி வரை சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம் இந்த நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-கடமை
மிதுனம்-பாராட்டு
கடகம்-நிறைவு
சிம்மம்-பரிசு
கன்னி-வரவு
துலாம்- சாதனை
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பக்தி
மகரம்-சாந்தம்
கும்பம்-உவகை
மீனம்-ஈகை
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம்.
- திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில்.
திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில், திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில், மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ராமபிரான், தனது கையில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கி காட்சியளிக்கிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் இருக்கிறது. இங்குள்ள பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சென்னையை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட பெருமாளை வழிபாடு செய்யலாம். இங்குள்ள மூலவரான நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.
திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன், பத்மாசனத்தில் அமர்ந்தபடி, கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியபடி காட்சியளிக்கிறார், கண்ணபுரத்தான்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். இங்குள்ள பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு 'வேதநாராயணன்' என்று பெயர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார்.
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு குடைபிடித்தபடி இருக்கும் ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருக்கின்றன.
திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.

பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோவிலில் பெருமாள், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையைச் செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
ரிஷபம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழிலில் ஒப்பந்தங்கள் வரலாம்.
மிதுனம்
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலைமதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கடகம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. உறவினர்களால் பிரச்சனைகள் வீடு தேடி வரலாம்.
சிம்மம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.
கன்னி
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
துலாம்
சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
விருச்சிகம்
செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மகரம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-21 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி நள்ளிரவு 1.48 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 11.43 மணி வரை பிறகு சதயம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் விருஷப தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-வரவு
கடகம்-விருத்தி
சிம்மம்-நட்பு
கன்னி-உழைப்பு
துலாம்- நன்மை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- போட்டி
மகரம்-செலவு
கும்பம்-பொறுமை
மீனம்-வெற்றி






