என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 அக்டோபர் 2025: கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-10 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி மறுநாள் விடியற்காலை 4.35 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : மூலம் காலை 11.30 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா, சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று சுபமுகூர்த்த தினம். சஷ்டி விரதம். சகல சுப்பிரமணியசாமி கோவில்களிலும் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-பக்தி
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-ஓய்வு
துலாம்- அன்பு
விருச்சிகம்-பரிவு
தனுசு- லாபம்
மகரம்-செலவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-புகழ்






