என் மலர்
ஆன்மிகம்
- மகாளய என்றால் கூட்டாக வருதல் என்பது பொருள்.
- மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.
பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இந்த 14 நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
- தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும்.
- சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.
1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.
4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.
5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.
6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.
7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச்செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.
8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.
9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.
10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...திருப்யத...திருப்யத என்று முடியும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படலாம். நண்பர்களிடம் நாசூக்காகப்பேசி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.
ரிஷபம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.
மிதுனம்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். மாற்று இனத்தவரால் தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.
கடகம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
சிம்மம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டம் தீட்டுவீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களின்போது விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். திட்டமிட்டபடியே சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
மகரம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நகை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். வருமானம் திருப்தி தரும்.
கும்பம்
சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
- திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-26 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி மாலை 4.25 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.09 மணி வரை பிறகு பரணி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-பரிசு
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-புகழ்
சிம்மம்-உறுதி
கன்னி-நலம்
துலாம்- யோகம்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- லாபம்
மகரம்-ஜெயம்
கும்பம்-உழைப்பு
மீனம்-கனிவு
- நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் நடை சாத்தப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். சந்திர கிரகணம் முடிந்து கோவில் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.
ரிஷபம்
விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
நன்மைகள் நடைபெறும் நாள். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். வியாபார விரோதம் விலகும்.
கடகம்
மங்கலத் தகவல் மனை தேடி வரும் நாள். வீட்டு பராமரிப்புச் செலவு கூடும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள்.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். புதுமனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கும்பம்
பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
மீனம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. விரயங்களை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-25 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை மாலை 6.44 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.42 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-வரவு
கடகம்-உதவி
சிம்மம்-உண்மை
கன்னி-தாமதம்
துலாம்- சிரமம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- நற்செயல்
மகரம்-சிந்தனை
கும்பம்-பாராட்டு
மீனம்-நம்பிக்கை
- மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது.
- திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தியாவில் ஆண்டுக்கு குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் கொட்டியூர் சிவன் கோவில். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது, கொட்டியூர் என்னும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் வருடத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டிற்காக திறக்கப்படுகிறது.
தல வரலாறு
பார்வதி தேவியின் தந்தை தட்சன். இவன், சிவபெருமானை அழைக்காமலேயே இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தினான். அவ்வாறு மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' எனும் வேள்வியை நடத்த முடிவு செய்தான். அதில் கலந்து கொள்ள சிவபெருமானை தவிர தேவர்கள் என மற்ற அனைவரையும் அழைத்திருந்தான். தன் தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில் தன்னுடைய கணவரான சிவபெருமானை அழைக்கவில்லையே என்று மிகவும் வருந்தினார், பார்வதி தேவி.
அதேநேரம், அந்த வேள்வியில் கணவருடன் கலந்து கொள்ளவும் விரும்பினார். பார்வதி தேவி, தன் எண்ணத்தை சிவபெருமானிடம் கூறினார். அதற்கு சிவபெருமான், ''நாம் அங்கு செல்ல வேண்டாம். அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே கிடைக்கும்'' என்றார். ஆனால் பார்வதி தேவி வேள்வியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சிவபெருமான் சொன்னதை கேட்காமல் தனியாகவே வேள்வி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
மகிழ்ச்சியோடு சென்ற பார்வதி தேவிக்கு அவமானமே மிஞ்சியது. தட்சன், பார்வதியையும், சிவபெருமானையும் அவமதித்து பேசினான். இதனால் மிகவும் மனம் வருந்திய பார்வதி தேவி, தனது உயிரை அங்கேயே மாய்த்துக் கொண்டார். இதை அறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு வேள்வி நடத்திக் கொண்டிருந்த தட்சனின் தலையை துண்டாக வெட்டி வீசினார். தட்சனின் தலையை வெட்டிய பிறகும் சிவபெருமானின் கோபம் அடங்கவில்லை. பின்பு கோபம் தணிந்து, சிவபெருமான் ஓரிடத்தில் சுயம்புவாக தோன்றினார். அந்த இடம்தான் கேரளாவில் இருக்கும் கொட்டியூர் என்கிறது தல புராணம். இந்த தலத்திற்கு திருசேருமன்னா என்ற பெயரும் உண்டு.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த இடம் என்பதால் 'கூடியூர்' என அழைக்கப்பட்டு, பிறகு 'கொட்டியூர்' என்று மாறிப்போனது. கொட்டியூர் மட்டுமல்ல அதனை சுற்றி உள்ள பல ஊர்களும் தட்சன் நடத்திய யாகத்துடன் தொடர்புடையவை என சொல்லப்படுகின்றன. தட்சனின் யாகத்திற்கு வந்த பார்வதி தேவி, யாகம் நடந்த இடத்தை தூரத்தில் இருந்து கண்டதால் அவ்விடம் 'நீண்டு நோக்கி' என்றும், தட்சனின் யாகத்தை காண நடந்து வந்த பார்வதி தேவியின் நடை வேகம் குறைந்த இடம் என்பதால் 'மந்தன்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு
கொட்டியூரில் மாவேலிப்புழை எனப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. இதன் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்துள்ளன. ஆற்றின் இக்கரையில் அமைந்துள்ள கோவிலை 'இக்கரை கொட்டியூர்' என்றும், அடுத்த கரையில் அமைந்துள்ள கோவிலை 'அக்கரைக் கொட்டியூர்' என்றும் அழைக்கின்றனர். இவற்றில் அக்கரை கொட்டியூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடத்திற்கு 28 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசிப்பதற்காக திறக்கப்படுகிறது. அதாவது வைகாசி மாதத்தில் நடைபெறும் மகோற்சவ காலத்தின்போது மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது.
மற்ற நாட்களில், பக்தர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக அமைக்கப்பட்ட கோவில் தான், இக்கரைக் கொட்டியூர் சிவன் கோவில். இக்கோவில் சற்று உயரத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல பல படிகளை ஏறி செல்ல வேண்டும். அங்கு இடப்பக்கம் பார்வதி தேவி சிலையும், வலப்பக்கம் சிவன் சிலையும் உள்ளன.
அக்கரை கோவில், 'திருவஞ்சிற' எனும் சிறு குளத்தின் மீது கருங்கல்லால் ஆன மேடைகளுடன் அமைந்துள்ளது. இந்த இடம் தட்சன் நடத்திய வேள்வி குண்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு 'மணித்துறை' எனும் மேடையில் சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருள்கிறார். சற்று தூரத்தில் பார்வதி தேவி அக்னிப்பிரவேசம் செய்த மேடை ஒன்று உள்ளது. அதற்கு 'அம்மாறக்கல்' என்று பெயர்.
கோவிலுக்கு சொந்தமான நகைகள், கரிம்பனக்கல் கோபுரம் என்னும் இடத்தில் உள்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பெட்டகத்தின் நான்கு சாவிகள் நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரிடமும் இருக்கும். இவர்கள் ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பெட்டகத்தை திறக்க முடியும். இந்த பெட்டகத்தை பாம்புகள் பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது.
திருவிழா சமயங்களில் மட்டும் 64 கலசங்களில் இந்த ஆபரணங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த கலசங்களுக்கு 'பண்ணாரம்' என்றும், இந்த உற்சவத்திற்கு 'பண்ணாரம் எழுந் நலத்து வைபவம்' என்றும் பெயர். இந்த வைபவத்தை நடத்துபவர்கள் 'குடிபதிகள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அக்கரை கொட்டியூர் கோவில்
வைகாசி மகோற்சவ விழா
அக்கரை கொட்டியூரில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளன்று தொடங்கி ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் வரை 28 நாட்கள் வைகாசி மகோற்சவம் நடைபெறும். இதில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். திருவிழா சமயங்களில் மட்டும் அக்கரை கொட்டியூரில் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானை சுற்றிலும் குடில் அமைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறந்த வெளியிலேயே ஈசன் வாசம் செய்கிறார். பக்தர்கள் சிவனை வழிபடும் இடத்திற்கு 'திருவஞ்சரா' என்று பெயர். இந்த இடத்தை எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர் 'தட்சனின் ரத்தம்' என கருதப்படுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், தலச்சேரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கொட்டியூர் இருக்கிறது.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- பரணி மகாளயம்.
இந்த வார விசேஷங்கள் (9-9-2025 முதல் 15-9-2025 வரை)
9-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* சங்கடஹர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* பரணி மகாளயம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* கார்த்திகை விரதம்.
* திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி விழா தொடக்கம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை இரவு 8.54 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.07 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சாந்தம்
கடகம்-களிப்பு
சிம்மம்-மாற்றம்
கன்னி-தேர்ச்சி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- கடமை
மகரம்-முயற்சி
கும்பம்-ஓய்வு
மீனம்-பரிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். இனிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினர்களுடன் குதூகலப் பயணம் உண்டு. திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வீடு மாற்றம், வரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிகப்பொறுப்புகளை வழங்குவர்.
மிதுனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வரலாம்.
கன்னி
வெற்றிச்செய்திகள் வீடு வந்துசேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
துலாம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
விருச்சிகம்
யோகமான நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றிதரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
தனுசு
வியக்கும் தகவல் வீடு வந்துசேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மகரம்
பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன்வருவீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத் தகவல் உண்டு.
கும்பம்
முன்னேற்றம் கூட முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
மீனம்
நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும். பணவரவு உண்டு.
- ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
- பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3.தர்ப்பணம் என்று 3 வழிகளில் செய்யலாம்.
1. பார்வணம் என்பது 6 பிராமணர்களை (பித்ருக்களாக) நினைத்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து சாப்பாடு போடுவது.
2. ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
3. தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள் மகா பரணி (12-ந்தேதி வெள்ளி), மத்யாஷ்டமி (14-ந்தேதி ஞாயிறு), மகாதிவ்ய தீபாதம் (15-ந்தேதி திங்கள்), கஜச்சாயா (19-ந்தேதி வெள்ளி) ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.
சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 18-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும், விபத்துகளால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு 20-ந்தேதி (சனி) அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் செய்யும் மகாளயத்தை 21-ந்தேதி (ஞாயிறு) அமாவாசை அன்றும் செய்யலாம்.
மகாளய பட்சத்தில் தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாள் அன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.
இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த கிருஷ்ண பட்சத்தில் அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் செய்யலாம்.






