என் மலர்tooltip icon

    ராசிபலன் - Rasi Palan

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி கூடும் நாள்
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் 29.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி கூடும் நாள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

    ரிஷபம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    விரயங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

    சிம்மம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கன்னி

    தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

    துலாம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    விருச்சிகம்

    அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.

    தனுசு

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

    மகரம்

    மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    கும்பம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    மீனம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    Next Story
    ×