என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanda Sashti Kavasam"

    • முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர்.
    • சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது.

    பாலன் தேவராயன் என்ற கவிஞரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பெரும்புகழ் பெற்றது. பல கோடி முருக பக்தர்கள் இந்தத் தோத்திரத்தை நாள்தோறும் ஓதிப் பலன் பெற்று வருகிறார்கள். அளவற்ற சக்தியுடைய மந்திரச் சொற்கள் இந்நூலில் கலந்துள்ளன.

    நாராயணீயம், சுந்தர காண்டம் போன்ற சில நூல்களை மட்டும் அதிகம்பேர் பாராயணம் செய்வதன் காரணம் என்ன? விஷ்ணு சகஸ்ரநாமம், ஆதித்ய ஹ்ருதயம், கோளறு திருப்பதிகம் போன்றவை மட்டும் பலராலும் ஓதப்படுவதன் பின்னணி என்ன?

    பாலன் தேவராயனே பல கவசங்களை அருளியிருந்தாலும் அவர் அருளிய கந்த சஷ்டி கவசம் மட்டும் ஏன் இத்தனை புகழோடு திகழ்கிறது?

    காரணம், இவற்றை எண்ணற்ற அடியவர்கள் நம்பிக்கையோடு ஓதி ஓதி, அவற்றின் சக்திக்கு அதிக வலிமை சேர்த்திருக்கிறார்கள். இன்று அந்த நூல்கள் இறையருளை எளிதில் வாரி வழங்கும் தன்மை பெற்றிருக்கியர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.

    முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.

    `செககண செககண செககண செகென

    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென

    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

    ரரரர ரரரர ரரரர ரரர

    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

    இந்தச் சொற்களெல்லாம் அளவற்ற மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.

    சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது. எண்ணிய எண்ணியாங்கு எய்த இந்தக் கவசம் துணை நிற்கிறது.

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டுமானால் மனத்தை மாசு தாக்காதவாறு அதற்கு ஒரு கவசம் பூட்ட வேண்டியது அவசியமல்லவா? அத்தகைய மனக் கவசமாக நிற்கும் வல்லமை படைத்தது சஷ்டி கவசமே.

    *முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.

    `மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'

    என்பது தொல்காப்பிய நூற்பா.

    திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அவன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.

    *எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார், முருகனைத்தான் போற்றுகிறார்.

    `தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத்தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!`

    தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது இந்தப் பாடலின் பொருள்.

    *பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் எழுதப்பட்டது.

    முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப் படுத்துவதே இந்த நூலின் போக்கு.

    *சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. `திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்` என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார்.

    அண்மைக் காலத்தில் ஆண்டவன் பிச்சி சென்னை காளிகாம்பாள் கோயில் முருகன் சன்னிதியில் அருளிய பாடல் `உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே` என்ற பாடல். டிஎம் செளந்தரராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்ற பாடல் இது.

    கண்ணதாசன், வாலி, உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் போன்ற அண்மைக்காலக் கவிஞர்கள் பலரும் முருகனைப் பற்றிய தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

    கந்த சஷ்டியன்று முருகன் தோத்திரங்களை ஓதியும் முருகன் பாடல்களைப் பாடியும் கேட்டும் முருகனை வழிபட்டு அவன் அருளைப் பெறுவோம்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார்.
    • வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

    வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

    இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும். பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×