என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.
    • வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகே உள்ள வங்காள விரிகுடா கடல், பக்தர்களால் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.

    பாவங்கள் போகும்

    இந்த கடல் பகுதியில் நீராடுவதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய் வாழ்வில் நல்வழி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மேலும் இந்த கடலின் நீர் புனிதமானதாக கருதப்படுவதால் பலர் அதை அருந்தி, தங்கள் நோய்கள் நீங்கி குணமடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், கடலோரத்தில் அமைந்துள்ளதால், கடலும் புனிதத்தன்மையுடன் கருதப்படுகிறது.

    புதிய அனுபவம்

    இந்த கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள். அதனை கண்கூடாகவே கண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலின் அருகே அமர்ந்து, அன்னை ஆரோக்கிய மாதாவை மனதார பிரார்த்தனை செய்து வழிபடுவது ஒரு புதிய அனுபவமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடலின் அமைதியான சூழல், பக்தர்களுக்கு ஒரு நிம்மதியான அனுபவத்தை தருகிறது.

    • இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது.
    • உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.

    வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது.

    இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது. சென்னையில் இருந்து 350 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    17-ம் நூற்றாண்டின்...

    17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.

    அதிசய சக்திகள்

    இங்குள்ள புனித ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் இத்தலத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

    பிரச்சினைகள் தீரும்

    கல்வி, செல்வம், திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தீராத மன கஷ்டம் மற்றும் நோய்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு வந்து அன்னையை மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர் அருள்பாலித்து தீர்த்து வைக்கிறார் என்பது காலம் கடந்த நம்பிக்கை ஆகும். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அன்னையை தரிசித்துவிட்டு வீடு திரும்புங்கள். உங்கள் கவலை அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிறையும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அலைபேசி அழைப்புகள் ஆச்சரியமளிக்கும்.

    மிதுனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள்.

    கடகம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணவரவு திருப்தி தரும். புதிய வேலை திருப்தியளிக்காமல் பழைய வேலைக்கு மாறலாமா என்று சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவு பெறும். திருமணத்தடை அகலும்.

    துலாம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும்.

    தனுசு

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது, வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். எளிதில் முடிக்க நினைத்த காரியம் தாமதப்படும்.

    கும்பம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எதிரிகள் விலகுவர். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    மீனம்

    வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வாய்ப்பு கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகலாம்.

    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-20 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி பின்னிரவு 2.38 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம் : திருவோணம் இரவு 11.48 மணி வரை. பிறகு அவிட்டம்.

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    இன்று ஓணம் பண்டிகை. திருவோண விரதம். பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆராய்ச்சி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-புகழ்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-செலவு

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- மாற்றம்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பொறுப்பு

    மீனம்-துணிவு

    • விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

    புதுவை காந்திவீதியில் சின்னமணிக் கூண்டு அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் (வியாழக்கிழமை) நடைபெற்றது.

    முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி (திங்கட்கிழமை) விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்ற வந்தன. இன்று காலை 5 மணிக்கு சாமிக்கு ரக்ஷாபந்தனம் மற்றும் தேவதா பூர்ணா ஹுதி மற்றும் தத்வார்ச்சனையும், 8 மணிக்கு தீபாராதனை மற்றும் கலச புறப்பாடும் நடந்தது.

    9 மணிக்கு கோவிலில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவகுமார், புதுவை பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் சக்தி.கிருஷ்ணராஜ், விஷகா ஜீவல்லரி உரிமையாளர் ஆனந்த், நியூ மெடிக்கல் சென்டர் செயல் இயக்குனர் அர்ஜூன் சுந்தரம், இயக்குனர் தாயுமான சுந்தரம், நிர்வாக இயக்குனர் நளினி சுந்தரம், அட்லாண்டா டிராவல்ஸ் உரிமையாளர் பிரவீன், என்.பி. ஆனந்தா நகை மாளிகை ஸ்தாபகர் பெருமாள் பிள்ளை உரிமையாளர் நாராயணன், என்.பி. ராஜராம் ஜூவல்லர் ஸ்தாபகர் பெருமாள் யாதவ், செல்வம் பேக்கரி மணிகண்டன் மற்றும் வியாபார பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

    • ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
    • பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.

    படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது.

    ரிஷபம்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அரசு வழிச்சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டு.

    மிதுனம்

    தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு.

    கடகம்

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    சச்சரவுகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கன்னி

    எடுத்த காரியத்தில் இனிதே வெற்றி காணும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    துலாம்

    பணியில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    விருச்சிகம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.

    தனுசு

    கொடுத்த பணம் குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படுத்தும்.

    மகரம்

    இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும் நாள். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

    கும்பம்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

    மீனம்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-19 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி பின்னிரவு 3 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : உத்திராடம் இரவு 11.24 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், இன்று சுபமுகூர்த்த தினம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் விறகு விற்றருளிய காட்சி. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரதவல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-புகழ்

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-பயணம்

    தனுசு- நற்செயல்

    மகரம்-நிம்மதி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-நட்பு

    • முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
    • இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 27-ந்தேதி நாரைக்கு முக்தி அருளிய திருவிளையாடலும், 28-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 29-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 30-ந் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 31-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற்றது.

    1-ந்தேதி வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று (2-ந்தேதி) நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடைபெற்றது.

    ஆவணி மூல திருவிழாவின் முத்தாய்ப்பாக 9-ம் நாளான இன்று மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி சிறப்பு அலங்காரமாக பிட்டுக்கு மண் சுமந்த திருக்கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

    முன்னதாக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோவில் உள்பட பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு மதியம் 1.35 மணிக்கு மேல் 1.55 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், அப்போது பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உற்சவம், மண் சாற்றுதல் லீலையும் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் முருகன், திருவாதவூர் மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக புட்டுத்தோப்புக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் புறப்பாடை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை அவர்கள் கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவிழாவின் 10-ம் நாளான நாளை (4-ந்தேதி) விறகு விற்ற லீலை திருவிளையாடல் நிகழ்வும், 5-ந்தேதி இரவு 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் சட்டத்தேரில் வீதி உலா நிகழ்வு நடக்கிறது. 6-ந்தேதி 12-ம் நாள் தீர்த்த வாரியுடன் ஆவணி மூலத்திருவிழா நிறைவு பெறுகிறது.

    முன்பொரு காலத்தில் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாண்டிய மன்னன் அமைச்சர்களை கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில் வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகை கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    மதுரையில் வசித்து வந்த 'வந்தி' என்னும் மூதாட்டி. இவள் பிட்டு சுடும் தொழில் செய்பவள். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்து விட்டுப் பின்னர்தான் விற்பனை செய்து வந்தாள். வைகை கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர்.

    வந்தி, 'தனக்கு யாரும் இல்லையே' என்று சோமசுந்தரக் கடவுளை நினைத்துக் கண்ணீர் மல்க வேண்டினாள். அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி ஆளாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.

    வைகைக் கரைக்கு வந்த இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாட்டைத் தொடங்கினார். இதைக் கவனித்த காவலர்கள், 'இவனுக்குப் பித்துப் பிடித்துவிட்டதோ?' என நினைத்தனர். உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

    வைகை நதிக்கு வந்த மன்னன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கப் பிரம்பால் அடித்தார். முதுகில் ஓங்கி அடித்தான். இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டு வைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.

    அதன் பிறகு மறைந்து போன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும் மக்களும் இறைவனைத் தொழுதனர் என்பது வரலாறு. இறைவனை மனிதனாக அவதரித்து அடியார்களுக்கு உதவி பிரம்படி பட்ட திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் பிட்டுத் திருவிழா இன்று நடைபெற்றது.

    சுவாமி தங்க கூடையில் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேறெங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு

    கடகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    சிம்மம்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

    கன்னி

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் நலம் சீராகும். உத்தியோக உயர்வு உண்டு.

    தனுசு

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    கும்பம்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    மீனம்

    சச்சரவுகள் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-18 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பின்னிரவு 2.50 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூராடம் இரவு 10.28 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீசோமசுந்தரர் புட்டுத் திருவிழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்கடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

    கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-இன்சொல்

    கடகம்-பரிசு

    சிம்மம்-உறுதி

    கன்னி-நற்சொல்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    ×