என் மலர்
ராசிபலன்

Today Rasipalan- இன்றைய ராசிபலன் 25.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை மகிழ்விக்கச் செய்யும்.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
கடகம்
யோகமான நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
கன்னி
வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
துலாம்
தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன்பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்
செல்வாக்கு உயரும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் கூடும்.
தனுசு
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள்.வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்..
மகரம்
வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.
மீனம்
சுபவிரயம் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனைமேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.






