என் மலர்tooltip icon

    வழிபாடு

    சனிக்கிழமையில்  சனிபகவான் வழிபாடு
    X

    சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு

    • சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும்,பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு.
    • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும், பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை இவர்களை வழிபட்டால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் எள் தீபம் ஏற்றுவது, விரதம் இருப்பது, மற்றும் குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது என பக்தர்கள் சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

    அந்தவகையில் சனிக்கிழமை வழிபாட்டில் கூடுதலாக என்னென்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    * சனிக்கிழமை சனி பகவானின் அருளைப் பெற சாதம் வடிக்கும் போது அதில் சிறிதளவு கருப்பு எள், கெட்டித்தயிர் சேர்த்து பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கி பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை.

    * இப்படி 21 சனிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து தீங்கும் அகன்று வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

    * சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி, நெய் விளக்கு ஏற்றிவர நினைத்த காரியம் நடக்கும்.

    * அதேபோல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.

    * சனிக்கிழமையன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும். எதிரிகள் மீதான பயம் விலகும்.

    Next Story
    ×