என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
    • இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு பல புகழ்பெற்ற மலைக்கோவில்கள் உள்ளன. அந்த வகையில் மிகவும் பழமையும், வரலாற்று சிறப்பும் வாய்ந்த கோவில்தான் பதிமலை முருகன் கோவில். பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக திகழும் பதிமலை, கோவை மாவட்டம் குமிட்டிபதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    கோவில், சிறிய மலைக் குன்றின் மீது சிறிய அளவில் அமைந்துள்ளது. குன்றின்மீது ஏறும் முன் சிறிய அலங்கார நுழைவுவாசல் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. சுமார் 350 படிகள் கொண்ட இந்த சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். மலைக் கற்களைக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவர் வலது கையில் வேல் ஏந்தி, பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே பலி பீடமும், மயில் வாகனமும் காட்சி தருகின்றன. கருவறை வாசலின் இடதுப்பக்கம் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குகின்றார்.

    இக்கோவிலின் இடது பக்கத்தில் அன்னை சக்தி தேவி தனிச் சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிம்ம வாகனமும், நடப்பட்ட சூலங்களும், கொடி மரமும் காட்சி தருகின்றன. இக்குன்றின் மேற்பகுதியில் வற்றாத கிணறு ஒன்று அமையப்பெற்றுள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள நீரில் தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    குகை ஓவியம்

    கோவில் இருக்கும் மலைக்குன்றின் மேல் இருந்து சற்று கீழே வந்தால் மிகவும் பழமைவாய்ந்த மலைக் குகைகள் காணப்படுகின்றன. இங்கு ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல சான்றுகள் உள்ளன. இங்குள்ள குகை ஓவியங்கள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த கோவிலும் மிகமிகப் பழமையானது என்றே கூறப்படுகிறது.

    பழங்காலத்தில் இப்பகுதியில் யானை வளர்ப்பு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யானைச் சந்தையும் நடைபெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேர- சோழ போர்களின் போது இம்மலை போர்வீரர்களுக்கு கண்காணிப்பு கோபுரம் போல் பயன்பட்டதாகவும், ஆதித் தமிழர்கள் வழிபட்ட முருகன் கோவில் இது என்றும் கூறப்படுகிறது.

    வழிபாடு

    இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும் என்கிறார்கள். திருமணத் தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இந்த முருகப்பெருமானை வழிபட்டால் பிடித்தமான வேலை, சொந்த வீடு யோகம் போன்றவை கிட்டும் என்று பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

    கோவிலில் முருகனுக்கு உரிய கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

    இக்கோவிலுக்குச் செல்ல இரண்டு படி வழிகள் உள்ளன. ஒன்று அந்தக் காலத்தில் இக்கோவிலுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட படிகள் போன்று மலையிலேயே செதுக்கப்பட்ட கரடு முரடான பாதை. மற்றொன்று தற்போது பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட எளிதாக ஏறிச் செல்லக்கூடிய படிப் பாதையாகும்.

    கோவில், காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த குமிட்டிபதி மலைக்கோவில் அமைந்துள்ளது.

    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
    • ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.40 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : புனர்பூசம் மாலை 5.43 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் பவனி. குரங்கனி ஸ்ரீ மாரியம்மன் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.

    ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-ஆசை

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-உதவி

    தனுசு- பண்பு

    மகரம்-பக்தி

    கும்பம்-லாபம்

    மீனம்-வெற்றி

    • சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.
    • திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

    உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம காலம். பொதுவாக சந்திராஷ்டம நாள் தோஷமான நாளாகத்தான் கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த நாட்களில் பயணம் செய்ய மாட்டார்கள், தேவையில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள், அதிலும் சிலர் வாயைத் திறந்து பேசக் கூட மாட்டார்கள்.

    ஏனென்றால் இந்த நாட்களில் தேவையில்லாமல் மனம் அலைபாயும், நினைத்த காரியங்கள் கைகூடாமல் போகும், அதனால் மன உளைச்சல் கூட ஏற்படலாம் என நம்புகின்றனர். அதனால் இந்த நாட்களில் அமைதியாக இருப்பதே நல்லது என நினைத்து அதிகம் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.

    அதிலும் செவ்வாய்கிழமையில் சந்திராஷ்டமம் வந்துவிட்டால் அவ்வளவு தான். சிலர் அந்த நாளில் எந்தவொரு முக்கியமான வேலையையும் தொடங்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாந்திராஷ்டம நாளிலும் பார்த்து பார்த்து அந்த நாளை கடக்க வேண்டும் என்றில்லை. பின்வருபவற்றை பின்பற்றினாலே போதும். அன்றைய நாளில் மன அமைதியாய் நிறைவாய் இருக்கலாம்.

    * சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.

    * சந்திராஷ்டம நாட்களில் தங்களால் முடிந்தவர்கள் குல தெய்வத்தை நேரில் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் மனதார நினைத்துக்கொள்ளலாம்.

    * உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவில் அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.




    * தங்களால் முடிந்தவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.

    * தெய்வ வழிபாடு செய்யும்போதே முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முதலானவற்றை மனதார செய்துவிட்டு அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.

    * முக்கியமாக அன்றைய தினம் தேவையில்லாமல் மற்றவர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதமும் செய்யக்கூடாது.

    * திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

    * எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும்.

    இன்று சந்திராஷ்டம நாள் விபரீதமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று எப்போதும் எதிர்மறையாக யோசித்துக்கொண்டே இருக்காமல் இறைவுணர்வோடு, நேர்மறை எண்ணங்களோடு அன்றைய நாளை கடக்க வேண்டும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    • திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-27 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி மாலை 6.18 மணி வரை பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : திருவாதிரை மாலை 6.39 மணி வரை பிறகு புனர்பூசம்.

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புறப்பாடு கண்டருளல். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

    திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. நத்தம் வரகுணவல்லித்தாயார் சமேத ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீபூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-புகழ்

    கடகம்-ஊக்கம்

    சிம்மம்-விருத்தி

    கன்னி-ஆதரவு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-ஆசை

    தனுசு- நன்மை

    மகரம்-நற்சிந்தனை

    கும்பம்-வரவு

    மீனம்-ஆக்கம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது.

    கன்னி

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    துலாம்

    இடம் சம்பந்தமான பிரச்சனைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும் நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு குறையும்.

    தனுசு

    யோகமான நாள். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-26 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி இரவு 8.14 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 7.51 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், புன்னைநல்லூர் உள்பட அம்மன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று தேய்பிறை சஷ்டி விரதம். பாபநாசம் சிவபெருமான் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்கார கருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை, ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-ஊக்கம்

    கடகம்-நற்சொல்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-பாராட்டு

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- சாதனை

    மகரம்-தனம்

    கும்பம்-பயணம்

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.

    ரிஷபம்

    துணிச்சலோடு செயல்படும் நாள். செய்தொழில் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    நம்பிக்கைக்கு உரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

    கடகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    சிம்மம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். தொழில் தொடர்பாக தொலை தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    கன்னி

    தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சிகம்

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.

    தனுசு

    விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் திருப்தி தரும் தகவல் வரலாம்.

    மகரம்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.

    கும்பம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    மீனம்

    முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். வரவு உண்டு.

    • மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
    • வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.

    சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.

    * மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.

    * நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    * கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட  வேண்டும்.

    * விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

    * சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.

    * சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.



    குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.

    இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும். 

    • ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது.
    • வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது.

    அஹீந்த்ரன் என்றால் ஆதிசேஷன் என்று பொருள். இந்த ஊர் ஆதிசேஷனால் நிர்மானிக்கப்பட்டது ஆகும். அருகிலுள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாசலம் என்றும், ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட அவுசத மலையின் ஒரு பாகம் இதில் சேர்ந்திருப்பதால் அவுசதாசலமென்றும் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட நதி பக்கத்தில் ஓடுகிறது. இந்த நதி கரும் நதியென்று பெயர் பெற்றது. ஆதி சேஷனால் நிர்மானிக் கப்பட்டது என்றும் கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிலில் உள்ள பிரதானமூர்த்தி தேவ நாதன். இவர் அச்சுதன், ஸ்திரமோதில், அநக ஜோதிஸ், மேவு ஜோதி, மூவராகிய மூர்த்தி, அடியவர்க்கு மெய்யன், தெய்வநாயகன், தாசஸத் தியன் போன்ற பல பெயர்களில் உள்ளவர், பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர், ததிசி முனிவர் போன்ற பலரும் தவம்புரிந்து தரிசித்து வரம் பெற்ற தலமிது.

    கோவிலில் பிரதானமாகிய தாயார்-அம்புருகவாசினி. இவர் ஹேமாப்ஜநாயகி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலநாயகி போன்ற பல திருநாமங்கள் அமையப்பெற்றவள்.

    பெருமாளும், தாயாரும் மகாவரப்பிரசாதி. பாடல் பெற்ற 108 வைணவதலங்களில் முக்கியமானது இத்தலம். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. வேதாந்த தேசிகன் இங்குள்ள அவுசதாசலத்தில் தவம்புரிந்து ஸ்ரீ ஹயக்ரீவனையும், கருடனையும் பிரத்யக்ஷமாகக் கண்டு வரம் பெற்றார்.

    ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது. ஸ்ரீதேசிகன் இந்த ஊரில் சுமார் 40 ஆண்டு காலம் வசித்து வந்தார், அநேக நூல்களை இவ்வூரில் இயற்றினார். அவர் எழுந்தருளியிருந்த இடம் ஸ்ரீதேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு விளங்குகிறது. இக்கோவிலுக்குள் இருக்கும்ஸ்ரீ தேசிகன் திவ்ய மங்கள விக்ரகம் ஸ்ரீ தேசிகன் தன் திருக்கரங்களாலேயே செய்யப்பட்டதாகும். ஸ்ரீதேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணறு இன்றும் ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் உள்ளது.

    வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. வேதபாராயண அத்தியாயம் (திவ்யபிரபந்த) கோஷ்டிகள் இத்திவ்ய தேசத்தில் ஒரு கவுரவ கைங்கர்யமாகவே இன்றும் நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஸ்ரீ பெருமாளுக்கும், புரட்டாசி மாதம் ஸ்ரீ தேசிகனுக்கும் மிகவும் விமரிசையாக பிரம் மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    இந்த திருத்தலம்தமிழ் நாட்டில் கடலூர் திருப்பா திரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரம் மேற்கில் அமைந்துள்ளது. வருடத்தில் 12 மாதங்களிலும், உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் திரளான பக்தர்கள் வந்து சேவித்து பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பு : உற்சவ கைங்கர்யதாரர்கள் உற்சவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திருக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து உற்சவத்திற்கான திட்டத்தினைபெற்றுச் செல்வதுடன், உற்சவ கைங்கர்யத்தினை காலத்தே வந்திருந்து நடத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கைகட்டி வணங்கும் கருடன்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி முன்பு உள்ள கருடன் தேவநாதசுவாமிக்கு அதிக மரியாதை கொடுக்கும் விதமாக கை கட்டி நின்ற நிலையில் உள்ளார். பெரும்பாலான கோவில்களில் கருடன் கை கூப்பிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இந்த கோவிலின் ஒரு மிக சிறப்புவாய்ந்த அம்சமாகும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவுசெய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    ரிஷபம்

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    கடகம்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.

    கன்னி

    வரவைவிட செலவு கூடும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும்.

    துலாம்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது.

    விருச்சிகம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    தனுசு

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம்.

    மகரம்

    அலைச்சல் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் ரீதியாக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கும்பம்

    மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் திடீரென சாதகமாகி விடும். கல்யாண முயற்சி கைகூடும்.

    மீனம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். பணவரவு திருப்தி தரும். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம்.

    • 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.

    பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
    • 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.

    தல வரலாறு

    முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.

    இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.

    இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.

    திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

    700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.

    இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.

    ×