என் மலர்
ஆன்மிகம்
- வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.
சனி-ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.
துலாம்-சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
- இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
- ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையைப்போல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசலை திறந்து வைக்க, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு முடிவு செய்தது. அப்போது பல பீடாதிபதிகள், மடாதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அளித்தனர். அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.
ஆனால், இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்றும், 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், டோக்கன்களுக்காக பக்தர்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள் ஆகியோருடன் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சொர்க்கவாசல் தரிசனம் குறித்த இறுதி முடிவு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார்.
- ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தல வரலாறு
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கவுரவர்கள் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வன வாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஆசனம் அமைக்கப்பட்டது. அதன் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.
அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர்.
மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ் ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.
அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெரு மாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

கோவில் தோற்றம், கொடிமரம், பலிபீடம்
கோவில் அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படு கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவ தூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.
மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது. பெருமாளை குனிந்து வணங்கும்போது மெய் சிலிர்ப்பதை உணர முடிகிறது.
இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.
இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருவிழாக்கள்
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்கநாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக் தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-30 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 5.08 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் பவனி. திருவெம்பல் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உறுதி
மிதுனம்-அன்பு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-லாபம்
கன்னி-முயற்சி
துலாம்- வெற்றி
விருச்சிகம்-புகழ்
தனுசு- உற்சாகம்
மகரம்-நிம்மதி
கும்பம்-சுகம்
மீனம்-இன்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
கடகம்
யோகமான நாள். வருங்கால முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
சிம்மம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. உடன் இருப்பவர்களின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
கன்னி
சோர்வுகள் அகலும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்துசேரும். நண்பர்கள் நல்ல தவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிகம்
மன உறுதியோடு செயல்படும் நாள். உத்தியோகம் சம்பந்தமான எடுத்த புது முயற்சி கைகூடும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.
தனுசு
மகிழ்ச்சி குறையாதிருக்க மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்
புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். புதியவர்களி டம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றம் பற்றி சொல்ல வேண்டாம்.
மிதுனம்
எதிரிகள் விலகும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய தகவல் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கடகம்
ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
சிம்மம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வரவு திருப்தி தரும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.
துலாம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு.
தனுசு
கூடயிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடலாம்.
மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் வளர்ச்சிக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-29 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி பிற்பகல் 3.24 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : பூசம் மாலை 5.11 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வீதியுலா. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உவகை
மிதுனம்-ஈகை
கடகம்-செலவு
சிம்மம்-நற்செயல்
கன்னி-அமைதி
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- உதவி
மகரம்-வெற்றி
கும்பம்-சுகம்
மீனம்-ஆதரவு
- திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம்.
- பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாக பார்க்கப்படுகிறது.
பைரவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், மற்றும் பலவகையான பழச்சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்திருப்போம். ஆனால், கன்னிகைப்பேர் என்ற ஊரிலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோவில் பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பைரவருக்கு எதற்காக மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதாகவும் அதனால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாகவும் பார்க்கப்படுகிறது.
யார் யாரெல்லாம் இந்த அபிஷேகம் செய்யலாம் :
* பணம் மற்றும் தங்கம் முதலானவற்றை தொலைத்தவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை மேற்கொள்ளலாம்.
* திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை செய்யும் போது, திருடியவர்கள் சட்டத்தின் முன் வந்து நிற்பார்கள் என்றும் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பால் அபிஷேகம் செய்து பைரவரை குளிர்வித்து, பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.
சென்னை - பெரியபாளையம் சாலையில், 36 கி.மீ., துாரத்தில் உள்ளது, கன்னிகைப்பேர் என்ற கிராமம். இங்கிருந்து, 4 கி.மீ., தொலைவில் சிவாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது . திருவள்ளூரில் இருந்தும் பெரியபாளையம் வழியாகவும் இக்கோவிலுக்கு செல்லலாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நாளில் பைரவரை வழிபட வேண்டும்:
* சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், கடக ராசிக்காரர்கள் திங்கட் கிழமையிலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்யலாம்.
* மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமையிலும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையிலும், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.
* மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்ய நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
- பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
- தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.
தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா நீராடல் செய்த பிறகு, பூஜை அறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.
லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.
பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.
தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடுல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை உடலில் பூசியும், வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், சிவந்த சடைமுடியும், நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாக நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர், பொன்னும், மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் விரும்புவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
- சனிப்பிரதோஷம்.
இந்த வார விசேஷங்கள்
14-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* பத்ராசலம் ராமபிரான் பவனி வரும் காட்சி.
* குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* குற்றாலம் திருக்குற்றாலநாதர் திருவீதி உலா.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவெம்பல் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (வெள்ளி)
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (சனி)
* சனிப்பிரதோஷம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
* குற்றாலம், பாபநாசம், திருவெம்பல் தலங்களில் சிவபெருமான் விசு உற்சவ தீர்த்தவாரி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
19-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
* மேல்நோக்கு நாள்.
20-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* தீபாவளி பண்டிகை.
* அங்கமங்கலம் அன்னபூரணி அம்பாள் லட்டு அலங்காரம்.
* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.
* சமநோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். ஏற்ற இறக்கநிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த வரவு உண்டு.
ரிஷபம்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.
மிதுனம்
தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
கடகம்
யோகமான நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கன்னி
பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தேக நலன் கருதி சிறு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோக ரீதியாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.
துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரப் போட்டிகள் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
விருச்சிகம்
விட்டுக் கொடுத்துச்செல்ல வேண்டிய நாள். வரவும், செலவும் சமமாகும். தொழிலில் பணியாளர்களின் தொல்லை உண்டு. மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்கும். பயணத்தால் தொல்லையுண்டு.
மகரம்
வரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.
கும்பம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடும்.
மீனம்
சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.






