என் மலர்
ஆன்மிகம்
- 13-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- 16-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி.
11-ந்தேதி (செவ்வாய்)
* தைப்பூசம்.
* அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை.
* வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட் பெருஞ்சோதி தரிசனம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தி லும் வண்டியூரில் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.
12-ந்தேதி (புதன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
* காஞ்சிபுரம் பெருந்தேவி, சென்னை கபாலீசுவரர் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.
* சென்னிமலை முருகன் கோவிலில் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந்தேதி (வியாழன்)
* ஆழ்வார் திருநகரியில் ஆழ்வார் கருட வாகன சேவை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
14-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் கோவிலில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
15-ந்தேதி (சனி)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
* திருவல்லிக்கேணி வரதராஜப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
16-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெரு மாள் கோவிலில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
17-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
- இன்று தைபூசம்.
- சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-29 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.50 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: பூசம் இரவு 7.31 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று தைபூசம். சுவாமிமலை முருகப் பெருமான் போராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வண்டியூர் எழுந்தருளி தெப்ப உற்சவம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திரு மஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார பூஜை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நட்பு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-உவகை
கடகம்-அன்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-உயர்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-புகழ்
தனுசு- கவனம்
மகரம்-அமைதி
கும்பம்-செலவு
மீனம்-சுபம்
- அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவிலில் இன்று, சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 370-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோவிலில் குவிந்து வருகிறார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சண்முகர் படங்களை வைத்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து கோவிலில் குவிந்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
- ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.
இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.
தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா.. ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும்.
- பக்தர்கள் வசதிக்காக 3 நாட்களுக்கு இலவச பஸ்கள் இயக்கம்.
- முடி காணிக்கை செலுத்த சிறப்பு வசதி
பழனி:
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பஸ் மற்றும் ரெயில்களிலும் வந்து குவிந்து வருவதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.
பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் இருப்பதால் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொரு குழுவாக நிறுத்தி கோவில் நிர்வாகத்தினர் சாமி தரிசனம் செய்ய அனுப்புகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சண்முக நதியில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு நகர பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவசமாக இயக்கப்படும் அரசு பஸ்களுக்கான கட்டணத்தை பழனி திருக்கோவில் நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது.
இலவச அரசு பேருந்துகள் இயக்கத்தை பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, சச்சிதானந்தம் எம்.பி., ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக பஸ்கள் இயக்கப்படுவது போலவே இன்று முதல் மூன்று நாட்களுக்கு பழனி மலைக்கோவிலில் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகிகள் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்புறம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்தே சென்று வரும். இதே போல பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் 5 தற்காலிக வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக 7 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். சாதாரண நாட்களில் காலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
தைப்பூச திருவிழா நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று முதல் வருகிற 12-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கியூ.ஆர்.கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்படும். அதனை காண்பித்து இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 நாட்களுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
- நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 5-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.
பின்னர் அதிகாலை காலை 5 மணிமுதல் 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.
வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத்துறை கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
- ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
- நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது.
வடலூர்:
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதில் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்த வகையில், 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில், சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
அதன்படி, நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணிக்கும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.
- ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது.
- நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை.
பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தை நாகராஜர் ஆலயம் என்றும், நாகரம்மன் ஆலயம் என்றும் அழைப்பார்கள். அதாவது இந்த ஆலயத்தின் மூலவர் ஆண் என்று சிலரும், பெண் என்று சிலரும் கூறுவர்.
நாகராஜர் கோவிலின் உட்கோவில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றன. அவற்றுள் தெற்கே அமைந்துள்ள பாம்பின் படத்தின் அடியில் சுற்றி வளையம் போல அமைந்த அதன் உடற்பகுதியின் மேல் ஆழ்ந்த சிந்தையில் அமர்ந்துள்ள ஓர் உருவம் உள்ளது.

வடக்கே காணப்படும் ஐந்து தலை பாம்பின் படம் மிகவும் அகலமாக உள்ளது. இது பற்றி விலங்கியல் பேராசிரியர்கள் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.
நாகப்பாம்பில் ஆண், பெண் இனம் கிடையாது என்பது தவறான கருத்து, நாகப்பாம்பில் ஆண் இனமும் உண்டு. பெண் இனமும் உண்டு. நாகப்பாம்பின் படத்தை வைத்து அதன் இனத்தை அறியலாம்.
ஆண் இனத்தின் படம் அகலம் குறைந்தும், பெண் இனத்தின் படம் அகலம் கூடியும் காணப்படும் என்பது அவர்கள் கருத்து. இந்த அடிப்படையில் நாகராஜர் கோவிலில் படமெடுத்த கோலத்தில் காணப்படும் இரண்டு பாம்பின் சிலைகளில் அகலமான படத்தை கொண்ட பாம்பு பெண் தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

இந்த இரண்டு பாம்புகளை பற்றி வழங்கப்படும் கதையும், இந்த பாம்பு சிலைகளில் வடக்கே காணப்படும் ஐந்து கற்சிலைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளும், நாகர்கோவிலில் நாகராஜரும், நாகரம்மனும் கோவில் கொண்டு அருள்புரிகின்றனர் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
படமெடுத்த கோலத்தில் காணப்படும் இந்த இரண்டு பாம்புகளில் தெற்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை தர்னேந்திரர் அதாவது நாகராஜர் என்றும், வடக்கே எழுப்பப்பட்டுள்ள சிலையை நாகராணி அதாவது பத்மாவதி என்றும் சமணர்களின் நூலான உத்தரபுராணம் மூலம் நாம் அறிய முடிகிறது.
மேலும் வடக்கே காணப்படும் பாம்பின் படத்தில் கீழே தவக்கோலத்தில் அமர்ந்திருப்பது சமண சமயத்தார் வணங்கும் இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று அந்த புராணம் கூறுகின்றது.

நூறும் பாலும் பூஜை
நாகருக்கு நடத்தப்படும் பூஜைகளில் மிகவும் முக்கியமானது நூறும் பாலும் பூஜை ஆகும். நாகராஜா ஆலயத்தில் தினமும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை எல்லாவகையான அமைதியையும் தரவல்லது. கட்டணம் செலுத்தி இந்த பூஜையை பக்தர்கள் செய்யலாம்.
இந்த பூஜையின் போது மஞ்சள், அரிசி மாவு, பால், கதலிப்பழம், கமுகு ஆகிய ஐந்தும் கலந்து நாகராஜாவுக்கு நைவேத்தியம் செய்யப்படும். கதலிப்பழம் நாகராஜாவுக்கு மிகமிக விருப்பமானதாகும். எனவே இந்த நைவேத்திய பூஜை மூலம் நாகரின் அருளை பக்தர்கள் பெறமுடியும்.
- கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
- மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது நாகர்கோவில் நாக ராஜா கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.
இங்கு வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் 'நாகர்கோவில்' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோவில் இதுவேயாகும்.
திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.
ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா கோவில் மட்டுமே ஆகும். ஆதி காலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது.

வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும் போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.
அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது.
எனவே அந்த பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
முதலில் குடிசை போட்டு சிலையை வைத்து ஆராதித்து வந்தனர். ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மன்னன் மார்த்தாண்ட வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.

இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இத்தல அர்ச்சகர்களே ஓலை கூரையை பிரித்துவிட்டு, புதிய கூரையை வேய்கிறார்கள்.
கேரள கட்டிட பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. இந்த கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார்.
இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர். இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.
கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும்.
இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

நாகராஜர் சன்னதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும்.
அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
இத்தல காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷமானவை. இந்த இரு தினங்களிலும் காசி விஸ்வ நாதர் மற்றும் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் இன்பம் பெருகும்.
ஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாசலை 'மகாமேரு மாளிகை' என்று அழைக்கிறார்கள். கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னதி, பாலமுருகன் சன்னதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னதி முதலியவை உள்ளன.
மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. இந்த கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னதிக்கு எதிரிலேயே கொடி மரம் இருக்கிறது.
தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடை பெறும்.
பெருமாள் கோவில்களில் கொடிமரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னதியின் கொடிமரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை 'தீர்த்த துர்க்கை' என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமையன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
'ஓடவள்ளி' என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.
வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான்.
அரசன் தொடங்கிய இந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.
இவ்வாலயத்தில் தினமும் காலை 10 மணிக்கு மூலவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
நடைதிறப்பு நேரம்-பூஜைகள் விவரம்:
காலை 4 மணி: நடை திறப்பு
காலை 4.30 மணி: அபிஷேகம்
காலை 5 மணி: உஷபூஜை
காலை 10 மணி: அபிஷேகம்
பகல் 11.30 மணி: உச்சபூஜை
பகல் 12 மணி: நடை அடைப்பு
மாலை 5 மணி: நடை திறப்பு
மாலை 6.30 மணி: சாயரட்சை
இரவு 7.45 மணி: அர்த்தஜாம பூஜை
இரவு 8 மணி: நடை அடைப்பு
ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அன்று பகலிலும், இரவிலும் நடை அடைக்கும் நேரம் மாறுபடும்.
- இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம்.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-28 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 8.08 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 7.12 மணி வரை பிறகு பூசம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் கவுரித் திருமஞ்சனம், தண்டியலில் சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கல்யாணம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சுபம்
கடகம்-நட்பு
சிம்மம்-உயர்வு
கன்னி-புகழ்
துலாம்- உவகை
விருச்சிகம்-போட்டி
தனுசு- ஆதரவு
மகரம்-பொறுமை
கும்பம்-பொறுப்பு
மீனம்-கடமை
- அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
- அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
கீர்த்தி சோழன் என்னும் அரசர் புன்னை நல்லூர் மாரியம்மன் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.
அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கோஜி மகாராஜா 1680- ல் திருத்தல யாத்திரை செய்யும் போது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடுமாறு கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் கோவிலுக்கு வழங்கினார்.

1728-1735-ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது.
மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலில் இருந்து சற்று தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகாராஜா.
சுயம்பு அம்மன் -மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.
விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
அச்சமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் உக்ரம் அதிகமாகும். அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
அம்மை நோயானது 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் என பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும், இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
இதர வாகனங்களை காட்டிலும், இறைவனோ, இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்று.
தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும்தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்சவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்சவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பல்லக்கு மிகப் பிரமாண்டமானதாகும்.
இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

மாரியம்மன் கோவிலின் முக்கிய குறிப்புகள்
* அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
* சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
* அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
* உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.
* அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோருக்கு குணமாகி விடுகிறது.
* கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது ஓவியங்கள் நிறைந்த வெளிமண்டபம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.
* இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் பாடகச்சேரி தவத்திரு ராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.
* ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
* ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது.
* புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோவி லுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவது வழக்கம்.
* புன்னைநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாசி முதல் பங்குனி மாதம் வரை அணி, அணியாகவும், அமைப்புக்கள் சார்பாகவும் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து இங்குள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துகிறார்கள்.
* சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில் இக்கோவிலுக்கு மகா மண்டபமும் 2-வது பெரிய பிரகாரத்திற்கு சுற்றுச்சுவரும்கட்டிக்கொடுத்தார்.
- தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்.
1950-ம் ஆண்டு...இத்தலத்தில் கண்கொடுக்கும் காரிகையாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய், அம்மை நோயை போக்கி அருளும் அம்பாளாய், புண் போக்கும் பொற்புடை தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள்செய்யும் பேரன்னையாய் அருள்பாலிக்கிறாள் அம்பிகை மாரியம்மன்.

தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
முன்னதாக இக்கோவிலுக்கு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆசியோடு, ராஜாராம் ராஜா சஹேப் கடந்த 1950-ம் ஆண்டு, தன் முன்னோர்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 1987-ம் ஆண்டு சுப்பிரமணியன் செட்டியார் உறுதுணையோடு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. பின்னர், கடந்த 27.6.2004-ம் ஆண்டில் தற்போதைய பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே பெருமுயற்சியால், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

அதன்படி, கடந்த 3-ந்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4-ந்தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5-ந்தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், முறையே 6-ந்தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், 7-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து சனிக்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
முறையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.






