என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிகிறது.

    3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

    இதற்கிடையே இன்று உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷிய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது இன்று உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

    • இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
    • இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.

    ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் டிரோன் மூலம் தாக்கப்பட்டது. இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    ரோஸ்டோவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் யூரி ஸ்லியுசர், சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.

    ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஆகஸ்ட் மாதத்திலிருந்து நோவோகுய்பிஷெவ்ஸ்க், சிஸ்ரான், ரியாசான் மற்றும் வோல்கோகிராட் உள்ளிட்ட பல ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.   

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
    • மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.

    மாஸ்கோ:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புதின்-ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கிரெம்ளினில் அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

    முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
    • அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கும் நவகாலனித்துவ சக்திகளைப் போல நடந்து கொள்கிறார்கள்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்த வரி வரும் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில் ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    ரஷிய உயர்மட்ட அதிகாரி ரோமன் பாபுஷ்கின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதை உறுதிப்படுத்தினார்.

    அப்போது, இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் என்ன செய்வீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பாபுஷ்கின், "இந்தியா ரஷிய எண்ணெயை மறுத்தால், அது பொதுவாக மேற்கு நாடுகளுடன் சமமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்காது.

    ஏனெனில் அது மேற்கத்திய இயல்பில் இல்லை. இது சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கும் நவகாலனித்துவ சக்திகளைப் போல நடந்து கொள்கிறார்கள். இந்த அழுத்தம் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது.

    மேற்கு நாடுகள் உங்களை விமர்சித்தால், நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    இந்தியாவுக்கான சவாலான சூழ்நிலைகள் பற்றி எங்களுக்குத் தெரியும். என்ன நடந்தாலும், சவால்களின் போது கூட, எந்தவொரு பிரச்சினையையும் நீக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார். 

    • ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும்போது இந்தியா எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • உக்ரைன் போருக்கு முன்பு வெறும் 0.2 சதவீதமாக இருந்த ரஷிய எண்ணெய் இறக்குமதி 2023 ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதத்தை எட்டியுள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்த வரி வரும் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த வரிகள் ஜவுளி, கடல் பொருட்கள் மற்றும் தோல் போன்ற முக்கிய துறைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    ரஷிய தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின் பேசுகையில், "ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும்போது இந்தியா எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தகம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆண்டுதோறும் 10 சதவீதம் வளரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.

    மேலும், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டால், ரஷிய சந்தை இந்தியாவிற்கு எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

    கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான எண்ணெய் வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போருக்கு முன்பு வெறும் 0.2 சதவீதமாக இருந்த ரஷிய எண்ணெய் இறக்குமதி 2023 ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதத்தை எட்டியுள்ளது.

    தற்போது, இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் சுமார் 35 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியா சுமார் 13 பில்லியன் டாலர்களை சேமிக்க முடிந்தது. 

    • புவியியல் ரீதியாக இந்தப் பகுதிகள் உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
    • நாளை (திங்களன்று) ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருவது தெரிந்ததே.

    இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.

    ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

    போர் நிறுத்தத்திற்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனையை அவர் ஜெலன்ஸ்கியிடம் விளக்கினார்.

    சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, உக்ரைன் மற்றும் ரஷியாவின் எல்லையில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதியை ரஷியாவிடம் விட்டுவிட வேண்டும் என்றும் அவை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும் புதின் நிபந்தனை விதித்தாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிபந்தனையை டிரம்ப் உக்ரைன் அதிபரிடம் விளக்கியபோது, ஜெலென்ஸ்கி தனது பிரதேசத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. நாளை (திங்களன்று) ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார்.

    டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் இயற்கை வளங்கள் மற்றும் தொழில்துறை நிறைந்தவை. இங்கு எஃகு மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றன.

    புவியியல் ரீதியாக இந்தப் பகுதிகள் உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தற்போது ரஷியாவல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் 30 சதவீதப் பகுதி மட்டுமே உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது புதின் இந்தப் பகுதியையும் தங்களுடன் இணைக்க வேண்டும் என்று கோருகிறார்.  

    • நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    மாஸ்கோ:

    இந்தியா முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

    அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ: இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுவது இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

    ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உக்ரைன், நேபாளம், இலங்கை நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

    • அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் இந்தியாவின் நகர்வுகள் மாறி வருகின்றன.

    ரஷியா - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்புகள் மற்றும் வருகைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றிருந்தார்.

    இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே மற்றொரு முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளது.

    இந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாஸ்கோவில் இருவரும் சந்திப்பார்கள். இதை ரஷிய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

    அறிக்கையில், இரு தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் ஜூலை 15 அன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் மாஸ்கோவிற்கு விஜயம் செய்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் புதின் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வர இருக்கிறார். 

    • குரில் தீவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

    மாஸ்கோ:

    ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ளது குரில் தீவுகள். இந்த தீவின் கடல் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    • உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றார்.
    • ரஷியாவுக்கு விதித்த 50 நாட்கள் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

    இதற்கிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். இதனை ரஷிய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது.

    இந்தச் சந்திப்பின்போது கச்சா எண்ணெய் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என தெரிகிறது. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார் டிரம்ப்.
    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.

    இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். அவரின் இந்தப் பயணம் இந்தியா-ரஷியா உறவை வலுப்படுத்துவதற்கானது என கூறப்படுகிறது.

    அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளால் இந்தப் பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் இந்த மாத இறுதியில் ரஷியா செல்ல உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார்.
    • இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்தியா மீதது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியை அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

    இதற்கிடையே இந்தியா தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.

    ரஷிய அரசு செய்தி நிறுவனமான 'டாஸ்'க்கு அளித்த பேட்டியில், "இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை அவர்கள் கவனித்து வருவதாகவும், ஆனால் அவற்றை முறையானதாகக் கருதவில்லை என்றும் கூறினார். 

    ×