என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- நாஷிக் மாவட்டத்திற்கு ஏக்நாத் ஷிண்டே ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.
- அவர் கொண்டு வந்த லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
மகாராஷ்டிர மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இவர் இன்று நாஷிக் மாவட்டம் பஞ்சாவதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் அவருடைய இரண்டு லக்கேஜ் பேக் (சூட்கேஸ், பேக்) இருந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஏக்நாத் ஷிண்டேயின் லக்கேஜ்களை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்கு ஏக்நாத் ஷிண்டே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அதிகாரிகள் சென்றதும் ஏக் நாத் ஷிண்டே புறப்பட்டுச் சென்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 5-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
- நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, பின்னர் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தினார். அரை நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தார். என்றபோதிலும் மத்திய அரசு இவரது தலைமையிலான போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
இருந்தபோதிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பினார்.
வாரணாசி தொகுதிக்கு வருகிற 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நேற்று (மே 14-ந்தேதி) ஆகும்.
கடைசி நாளில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அய்யாக்கண்ணு கடந்த 10-ந்தேதி வாரணாசி செல்லும் ரெயில் பயணம் செய்தார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ரெயிலில் இருந்து இறக்கிவிட்டதாக தெரிகிறது.
இதனால் தன்னால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை நீட்டிக்க வலுயுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ரம் நாத் மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகிய நீதிபதிகள் "இந்த மனு சுயநலத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இந்த மனுவை வாபஸ பெற எங்களால் அனுமதிக்க முடியும். நாங்கள் டிஸ்மிஸ் செய்ய நீங்கள் விரும்பினால், எங்களால் டிஸ்மிஸ் செய்ய முடியும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், அய்யாக்கண்ணு ஏன் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார்? என இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மனு விளம்பரத்தை பெறுவதற்கானது என பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் அய்யாக்கண்ணு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
- காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன்.
- புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.
பிரதமர் நரேந்திர மோடி மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
அரசு அமைந்த பிறகு முதல் 100 நாட்களில் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும், என்னென்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகும் தொடரும்... நேற்று காசியில் இருந்தபோது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல இளைஞர்களைச் சந்தித்தேன். நாட்டு இளைஞர்களிடம் புதிய கற்பனை, புதிய சிந்தனைகள் இருப்பதைக் கண்டேன்.
இளைஞர்களை சந்தித்த இந்த நாட்கள் எனக்கு மிகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆகவே, இன்னும் 25 நாட்களை இணைத்துள்ளேன். நாட்டின் இளைஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
- மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
- உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
ஜூன் 4-ந்தேதி தென்இந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளை இணைத்தால் பா.ஜனதா தனியாக மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்.
மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- 2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
- 5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 81.86 சதவீத வாக்குகள் பதிவானதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
EVMs மூலமாக 80.66 சதவீத வாக்குகளும், தபால் வாக்குகள் மூலம் 1.2 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி மீனா தெரிவித்துள்ளார்.
வாக்களிக்க 4.13 கோடி பேர் தகுதியானவர்கள் என்ற நிலையில், 3.33 கோடி பேர் (3,33,40,560) 25 மக்களவை இடங்களுக்கும், 3,33,40,333 பேர் 175 சட்டமனற இடங்களுக்கும் வாக்களித்துள்ளனர்.
நான்காவது கட்டமாக நடைபெற்ற தேர்தலில் நட்டிலேயே அதிகமாக ஆந்திராவில்தான் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வாக்குப்பதிவு இதுவாகும் என மீனா தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக (ஆந்திரா + தெலுங்கானா) இருந்தபோது கூட இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவாகவில்லை.
மக்கள் வாக்களிக்க ஆர்வம் கட்டினர். வெளிநாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என அதிகாரி தெரிவித்தார். காலை நேரத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. 4 மணிக்குப் பிறகு அதிக அளவிலான மக்கள் திரணடு வந்து வாக்களித்தனர்.
5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர். 3,500 வாக்கு மையங்களில் நேரம் நீட்டிக்கப்பட்டது. ஒரு மையத்தில் கடைசி வாக்கு புதன்கிழமை (இன்று) அதிகாலை 2 மணிக்கு பதிவானது.
33 இடங்களில் 350 அறைகளில் வாக்கு எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மறு வாக்குப்பதிவு தொடர்பாக பரிந்துரை வரவில்லை. ஜூன் 4-ந்தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.
- இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.
இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது.
- ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் செரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம். முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) கோஷத்தை இங்கே கேட்டோம். தற்போது அதே கோஷத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரில் நடைபெறுகிறது.
மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம் எடுத்துக் கொள்வோம் என்பத நான் சொல்கிறேன்.
ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏ-விற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியர்வர்கள ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
- 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதேபோல், ஆந்திராவில் 40.26 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில், 3 மணி நேர நிலவரப்படி 52.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஆந்திரா- 55.49 சதவீதம், பீகார்- 45.23 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 29.93 சதவீதம், ஜார்கண்ட் 56.42 சதவீதம், மத்திய பிரதேசம் 59.63 சதவீதம், மகாராஷ்டிரா 42.35 சதவீதம், ஒடிசா 52.91 சதவீதம், தெலங்கானா 52.34 சதவீதம், உத்தர பிரதசேம் 48.61 சதவீதம், மேற்குவங்கம் 66.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மணி நேர விலவரப்படி 55.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு.
- பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் கடவுள் ராமர் கூட தனது "தீவிர பக்தன்" வெற்றி பெற விரும்புகிறார் என்று அவர் கூறினார்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், "மோடி அலை தற்போது சுனாமியாக மாறியுள்ளது" என்று இங்குள்ள ஹைதர்கரில் பாஜக வேட்பாளர் ராஜ்ராணி ராவத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் யோகி ஆதித்யநாத் கூறினார்.
அப்போது யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், சாதி, சமூகம் என்ற வேறுபாடின்றி அனைவரும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்துள்ளோம்.
எங்கள் அன்புக்குரிய பகவான் ராமரும் தனது தீவிர பக்தர் (பிரதமர் மோடி) மீண்டும் நாட்டின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு. இவர்கள் பெரிய கூற்றுக்களை கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் காலத்தில் மக்கள் பசியால் இறந்தனர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இளைஞர்கள் இடம்பெயர்ந்தனர்.
ஆனால், பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சிகள். கடந்த 4 ஆண்டுகளாக 80 கோடி பேர் இலவச ரேஷன், 12 கோடி விவசாயிகள் கிசான் சம்மான் நிதி மூலம் பலன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோடை வெயில் காரணமாக வாக்காளர்கள் காலையில் அதிக அளவில் வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்தனர்.
- பாரதிய ஜனதா கூடுதல் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.
4-வது கட்டத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) 96 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 96 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
96 தொகுதிகளும் ஆந்திரா (25), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மராட்டியம் (11), மேற்கு வங்காளம், மத்தியப்பிர தேசம் (தலா 8), பீகார் (5), ஒடிசா, ஜார்க்கண்ட் (தலா 4), ஆகிய 9 மாநிலங்களிலும் மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதியும் இடம் பெற்றுள்ளன.
கோடை வெயில் காரணமாக வாக்காளர்கள் காலையில் அதிக அளவில் வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்தனர். இதனால் ஓட்டுப்பதிவின் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. சில தொகுதிகளில் மக்கள் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் ஓட்டுச்சா வடிக்கு வந்து வரிசையில் நின்று விட்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பு அதிகரித்தது. முதல் 2 மணி நேரங்களில் சராசரியாக 9 மாநிலங்களிலும் 10.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11.78 சதவீத வாக்குகளை மக்கள் பதிவு செய்து இருந்தனர்.
காலை 9 மணி நிலவரபடி உத்தரபிரதேசத்தில் 11.67, பீகாரில் 10.18, தெலுங்கானாவில் 9.51, ஒடிசாவில் 9.23, ஆந்திராவில் 9.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மராட்டியத்தில் 6.45 சதவீதம், காஷ்மீரில் 5.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த தேர்தலை விட இந்த தடவை தொடக்கத்தில் ஓட்டுப்பதிவு சற்று மந்தமாக இருந்தது.

11 மணி நிலவரபடி 24.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
96 தொகுதிகளிலும் 17.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 8.97 கோடி பேர். பெண்கள்-8.73 கோடி பேர். இவர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக 96 தொகுதிகளிலும் ஒரு லட்சத்துக்கு 92ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
96 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சுமார் 20 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தபால் வாக்கு மூலம் தங்களது வாக்குகளை ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர்.
4-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 170 பேர் பெண் வேட்பாளர்கள். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 10 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1717 வேட்பாளர்களில் 476 பேர் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள். 360 வேட்பாளர்கள் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. சுமார் 1000 வேட்பாளர்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள் என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இன்று ஓட்டுப்பதிவு நடந்து 96 தொகுதிகளில் 223 கட்சிகள் தங்களது 902 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. 815 வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். அரசிய்ல கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி அதிகபட்சமாக 92 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 19 தொகுதிகளிலும், தெலுங்குதேசம், பாரத் ராஷ்ட்டீரிய சமிதி கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், பார்வர்டு பிளாக் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
96 தொகுதிகளில் 64 தொகுதிகள் புது தொகுதிகளாகும். 32 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.
96 தொகுதிகளிலும் சுமார் 19 லட்சம் தேர்தல் பணியாளர்கள் இன்று ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
நக்சைலட்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் 6 தொகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது. 5 தொகுதிகளில் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
மற்ற தொகுகிகளில் மாலை 6 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் சில இடங்களில் வாக்காளர்களின் வருகை தாமதம் காரணமாக கூடுதல் அவகாசம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 96 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளில் 49 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. மற்ற கட்சிகளுக்கு 31 இடங்கள் கிடைத்திருந்தது. இந்த தடவை, பாரதிய ஜனதா கூடுதல் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.
இன்று மாலை தேர்தல் நிறைவு பெற்றதும் 22 மாநிலங்களில் உள்ள 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 70 சதவீதம் தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
மீதமுள்ள 164 தொகுதிகளுக்கு வருகிற 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
- மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன.
- பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில், அன்னையர் தின பரிசாக பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியுடன் இருக்கும் உருவப்படத்தை தொண்டர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தாய் ஹீராபென் மோடியின் உருவப்படத்தை பரிசாகப் பெற்றார்.
பரிசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன, ஆனால் இந்தியாவில் நாங்கள் ஆண்டு முழுவதும் தாய், காளி, துர்கா மற்றும் தாய் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டில் டிசம்பர் 30ம் தேதி அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்தில், 3ம்கட்ட தேர்தலில் அகமதாபாத் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்த பின்னர், தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.
2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது தாயார் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஆந்திராவில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- ஏழு அட்டை பெட்டிகள் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த வாகனம் கவிழ்ந்து டிரைவர் காயம் அடைந்தார். அந்த பகுதி மக்கள் காயம் அடைந்த அவரை மீட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த ஏழு பெரிய பெட்டியில் பணம் இருப்பதாக சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது ஏழு பெட்டிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டனர்.
உடனே அதிகாரிகளை வரவழைத்து பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது பெரிய அட்டை பெட்டிகளில் ஏழு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்து. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காயம் அடைந்த டிரைவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். பணம் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் (15-ந்தேதி) 25 மக்களவை தொகுதிகளுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.






