என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- டுவிட்டரில் #Vote4INDIA எனப் பதிவிட்டதால் விமர்சனம்.
- தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம்- குஷ்பு
பா.ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு இன்று காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர். வாக்கு செலுத்திவிட்டேன் என விரலை காண்பிக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் #Vote4INDIA #VoteFor400Paar ஆகிய ஹேஸ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணி இந்தியா (INDIA Alliance) எனப் பெயர் வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இந்தியா என்று அழைக்கமாட்டார். இண்டிக் (Indic) என அழைப்பார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூறியதற்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், முதல்கட்ட வாக்குப்பதியின் போது குஷ்பு தனது பக்கத்தை மாற்றுக்கொண்டார். உண்மையான பச்சொந்தி என விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், விமர்சனங்களுடன் டிரோல் செய்யப்பட்டுள்ளது.
Why make a fool of yourself? We say Vote for India because we #BJP believe in growth of the nation. It's new to you because CONgress believes in growth of a family. And do read #Votefor400Paar and #ModiKaParivaar Or you suffer from selective blindness?? https://t.co/73vzBLfDNi
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 19, 2024
இந்த நிலையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏன் உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்?. தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் குடும்ப வளர்ச்சியில் நம்பிக்கை வைப்பதால் இது உங்களுக்குப் புதிது. #Votefor400Paar மற்றும் #ModiKaParivaar ஆகியவற்றைப் படிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்களா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
- பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.
ராம்நகர்:
கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை.
* ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை.
* கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
* பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை.
* பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
- உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம்:
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை தொகுதியில் 50.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
அங்கப்பா பள்ளி பூத் எண் 214-ல் 523 ஓட்டு மட்டுமே உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே எஞ்சியோரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுத்தார்.
- ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது.
- கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.
சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.
ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் வாக்களியுங்கள்? pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024
- நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 56.73
5. கரூர் - 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47
- தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை.
குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது- ராகுல் காந்தி.
- அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது- பினராயி விஜயன்
மத்திய அமைப்புகள் இன்னும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை அல்லது கைது செய்யவில்லை என ராகுல் காந்தி கேட்டிருந்த நிலையில், இடதுசாரி தலைவர்கள் ஜெயிலை பார்த்து பயப்படவில்லை என பதில் அளித்துள்ளார்.
"நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது. அமலாக்கத்துறை தன்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது, தன்னுடைய மக்களவை எம்.பி. பதவி, வீடுகள் பறிக்கப்பட்டது. தற்போது இரண்டு முதல் மந்திரிகள் ஜெயிலில் உள்ளனர். ஆனால் கேரள மாநில முதல்வருக்கு இது போன்று நடக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
"உங்களுடைய பாட்டி (இந்திராகாந்தி) எங்களின் பெரும்பாலானோரை ஒன்றரை வருடத்திற்கு மேல் சிறையில் அடைத்திருந்தார். அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஜெயில்கள் பற்றி எங்களுக்கு பயம் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்ற விசங்கள் மூலமாக எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை" என பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
- நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
- விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இதையடுத்து நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களிக்க வந்த விஜயால் வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதையடுத்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83
- மலிகாய்யா கட்டேதார் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
- சாரதா மோகன் ஷெட்டி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
கட்டேதார் கலபுரகி மாவட்டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா மாநில முன்னாள் மந்திரியும் ஆவார்.
கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். கார்கேயின் மருமகன் ராதாகிருஷ்ணா டோட்டாமணி கலபுரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோதரர் நிதின் வெங்கையா கட்டேதார் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதனால் மலிகய்யா கட்டேதார் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அஃப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலிகய்யா கட்டேதார் 3-வது இடம் பிடித்தார். அவரது சகோதரர் நிதின் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடம் பிடித்தார்.
மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜனதா கட்சியில் இணைந்த விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோரை விமர்சித்திருந்தார்.
கார்கேயின் மகனும், கர்நாடகா மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங்கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018-ல் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இருவரையும் வரவேற்றுள்ளனர்.
- சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது.
- பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக வாக்காளர் ஜாபிதாவில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது. தனது பெயர் மட்டும் எவ்வாறு விடுபட்டது? என கேள்வி எழுப்பினார்.
நகராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் அளித்து புதிதாக வாக்காளர் அட்டைக்கு மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.
பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
- மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.
இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
- நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.
வேலூர்:
தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.
அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.
தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.
நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.
மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.
புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






