என் மலர்
அமெரிக்கா
- பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்ப்-விடம் தோல்வியை தழுவினார். பலராலும் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் செனட்டர் டெப் பிஷ்ஷரின் கணவர் கமலா ஹாரிசுக்கு கை குலுக்க மறுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க செனட்டர்களின் பதவியேற்பு விழாவில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் பங்கேற்று இருந்தார். அப்போது, டெப் பிஷ்ஷர் அருகில் அவரது கணவர் பிஷ்ஷர் ஒரு கையில் கைத்தடியும் மற்றொரு கையில் பைபிளுடன் நிற்கிறார்.
அப்போது கமலா ஹாரிஸ் பக்கத்தில் நிற்பதற்கு தயங்குகிறார் பிஷ்ஷர். பின்னர் பதவியேற்பு முடிந்தவுடன் டெப் பிஷ்ஷர்-க்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் கமலா ஹாரிஸ் பின்னர் பிஷ்ஷரிடம் கை கொடுக்குகிறார். ஆனால் அவர் கை குலுக்க மறுக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரிசின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாா்மி டேனியல்ஸ், டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
- கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்டு டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில், குற்ற வழக்கில் டொனால்டு டிரம்ப்புக்கான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
எனினும், அதனை எதிா்த்து டிரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும், இதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
- அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
- உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
இதில் கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.
இதனை காண்பதற்காக அவருடைய தாயார் நேரில் சென்றார். இதுபற்றி சுப்ரமணியம் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். இது நிச்சயம் கடைசி அல்ல. இதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன் என சுப்ரமணியம் கூறினார்.
- ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
- இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து, ஜப்பானின் சோனி தயாரிக்கும் அஃபீலா ஏ1 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்தமுன்பதிவு கலிபோர்னியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளது. இது 2026 முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
இது ஹோண்டா மற்றும் சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த காரின் தொடக்க விலையாக 77 லட்ச ரூபாயும், ப்ரீமியம் ரக கார் 88 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரில் 482 bhp ஆற்றலை வழங்கும் இரட்டை மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 91kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியில் 150kW வேகத்தில் வேகமாக சார்ஜ் செய்யலாம். இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை செல்லலாம்.
- தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
- ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார்
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.
கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.
இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை டிரம்ப் முன்வைத்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிக தொற்று தன்மை கொண்ட எச்5.என்1. ரக வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர் தவிர, அமெரிக்காவில் வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என்று லூசியானா மாகாண சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதாக லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்துள்ளது.
- வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.
- கடும் பனிபொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிப்பு.
நியூயார்க்:
புவி வெப்பமயமாதல் தாக்கத்தின் மறுவடிவமாக மாறிவரும் பருவநிலை வளர்ந்த நாடு, ஏழை நாடு என பார்க்காமல் எல்லா நாடுகளையும் கடுமையாக பாதித்து வருகிறது.

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன. கான்சாஸ், இண்டியானா, மிசோரி, கென்டக்கி, லுயிஸ்வில்லி உள்ளிட்ட 7 மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.
கான்சாஸ் மற்றும் இண்டியானா மாகாணங்களில் 7.7 அங்குலங்கள் (19.5 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கென்டக்கியின் லெக்சிங்டன், பனிப்பொழிவில் சாதனையை படைத்துள்ளது. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியில் புதைந்துள்ளன.

வர்ஜீனியா, இண்டியானா, கன்சாஸ் மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் பனிப் பொழிவால் நூற்றுக்கணக்கான கார்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடகிழக்கு கன்சாஸில் உள்ள நெடுஞ்சாலைகள் நடக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 60 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேகமாக வெப்பமடையும் ஆர்க்டிக் துருவச் சுழலின் அதிகரிப்பு காரணமாக பனிப்பொழிவு அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறியுள்ளது.
- ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது.
- ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.
கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.
- அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு பரிசளித்தார்
- இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளில் விலை உயர்ந்தது பிரதமர் மோடி அளித்த பரிசுதான் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.

உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்த வைரைத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6,232 டாலர் மதிப்புள்ள 'தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும் மோடி பரிசாக அளித்தார்.


மொத்தத்தில், அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

- 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.
- கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது.
சிறிய ரக விமானம் ஒன்று வர்த்தக கட்டிடத்தில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் காவல் துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
- புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.
- காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜிம்மி. மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் யூடியூபில் வீடியோ பதிவிட்டு வருகிறார். யூடியூப் பிரபலமான இவர் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டு சாதனை படைத்துள்ளார். சாகச விளையாட்டு அல்லது ஒரு கடினமான பணியை மேற்கொள்ளும் விதமாக இவருடைய வீடியோக்கள் அமைந்திருக்கும்.
ஒரு வீடியோவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து மிஸ்டர் பீஸ்ட் ஆடம்பரம் காட்டுவார். இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தியா பூய்சன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் புத்தாண்டு தினத்தன்று இருவீட்டார் முன்னிலையில் மிஸ்டர் பீஸ்ட் தன்னுடைய நீண்டநாள் காதலியிடம் தனது காதலை தெரிவித்தார்.
அனைத்திலும் பிரமாண்டம் காட்டும் மிஸ்டர் பீஸ்ட், ஆரவாரம் எதுவுமின்றி காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பதிவு இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.
- 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது.
- உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.
உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்றன.
இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி 2024 டிசம்பர் 31 மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பிறந்தது.
இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. உலகளாவிய நேர மண்டலம் (Global Time Zone) தான் இதற்கு காரணமாகும்.






