என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இரண்டு மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
    • குடியரசு கட்சிக்கு சாதகமான வெர்மொன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

    தொடக்க சுற்றுகள் முடிவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

    இண்டியானா மாகாணாத்தில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் 11 எல்க்டரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இது டிரம்பிற்கு முழுமையாக வந்து சேரும். இண்டியானா மாகாணம் குடியரசு கட்சிக்கு சாதகமானதாகும்.

    அதேபோல் கென்டக்கி மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 3-வது முறையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இங்கு 8 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் உள்ளது.

     வெர்மொன்ட் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில்  இதற்கு முன்னதாக குடியரசு கட்சிக்கு சார்பாக வாக்களித்து வந்தது. தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

    மேலும் 4 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் ஒரு மாகாணத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

    • மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.
    • எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.

    அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.

    இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதைதொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  வெல்லப்போவது டிரம்பா..? கமலா ஹாரிஸா? என்பது இன்று பிற்பகவில் தெரியவரும்.


    • வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.
    • பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார்.

    அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.

    அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (6.11.2024) அதிகாலை 5.30 மணியளவில் தேர்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 2 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.

    இதுபற்றி அவர் பேசும்போது, மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு தேசிய அளவில் தடை விதிக்கும் திட்டம் உள்ளது.

    குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி குறைப்பு மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக முன்பணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் உள்ளன என்று கூறியுள்ளார்.

    இதேபோன்று, குடியுரிமை திட்ட நடைமுறையில் உள்ள குறைகளை சரி செய்வதற்கான தேவையும் உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசு என இரண்டு அரசுகளின் நிர்வாகத்தின் கீழும் அது நீண்டகாலம் வரை சரிவர செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதனை சரி செய்ய போகிறேன் என்றார்.

    அதனுடன், அமெரிக்க தொழிற்சாலை, அமெரிக்க தொழிலாளர்கள் என இவற்றில் முதலீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும். 21-ம் நூற்றாண்டில் உலகளவில் போட்டியாளராக அமெரிக்கா இருக்கும் என உறுதி செய்யப்படும். வெளிப்படையாக கூறுவதென்றால், 21-ம் நூற்றாண்டில் சீனாவுடனான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம். இவையே என்னுடைய முன்னுரிமையான விஷயங்கள் ஆகும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    குடியேற்ற விவகாரத்தில், எல்லையில் ஏஜெண்டுகளை அதிகரிப்பது, மனித கடத்தலை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்காக மசோதா ஒன்றை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் விஷயங்களை மேற்கொள்ளும் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

    • நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது.
    • பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.

    புளோரிடா:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (5.11.2024) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்

    முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.

    இதேபோன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தங்களுடைய வீட்டின் அருகே உள்ள பாம் பீச் பகுதியில் அமைந்த வாக்கு மையத்திற்கு மனைவி மெலனியா டிரம்புடன், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகை தந்து, வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

    அவர் கூறும்போது, நான் அதிக நம்பிக்கையாக உணர்கிறேன். நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.

    அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பென்சில்வேனியா மாகாணத்தில் அரசியல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, கடின உழைப்பை தரும் தேசப்பற்றாளர்கள் நாட்டை பாதுகாக்க போகிறார்கள் என்றார். என்னுடைய தலைமையின் கீழ், பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.

    அமெரிக்காவை வளம் கொழிக்கும் நாடாக மீண்டும் உருவாக்குவோம். ஆனால், அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நாம் அனைவரும் இதற்காக காத்திருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.

    • அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது.
    • இதைப் பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.

    அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    13 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர் பதவிகள் மற்றும் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.

    அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும்.

    நாளை காலை அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரியவரும்.

    • 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
    • அமெரிக்காவில் மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளைச் செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.

    பிரதிநிதிகள் 

    அமெரிக்க தேர்தலில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. "Electoral College" எனப்படும் முறை மூலம் அதிபர் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அங்கு இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரல் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களையன்றி மாநில அளவில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளை தான் தேர்வு செய்வார்கள்.

     அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அனைத்தையும் சேர்ந்து மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களின் வாக்கு Electoral College ஆகும். இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். 

    எனவே இந்த 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் வாக்குகளில் 270 க்கு மேல் யாருக்கு வருகிறதோ அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து Electoral College வாக்குகளும் அளிக்கப்படும். உதாரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர்  50.1%  வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 எலக்ட்ரல் வாக்குகளும் மொத்தமாக வழங்கப்படும்.

    • 1980 முதல் குடியரசுக் கட்சியினர் சிவப்பு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
    • 7 முக்கிய மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ்  மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப்  ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

     இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா சொற்ப வித்தியாசத்தில் டிரம்ப்பை விட முன்னிலையில் உள்ளார். எனவே இழுபறி ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

    50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.50 மாகாணங்களில் உண்மையில் கடுமையான போட்டி நிலவும் 7 முக்கிய மாகாணங்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ஸ்விங் ஸ்டேட்டஸ்

    அமெரிக்க அரசியலில் ஸ்விங் ஸ்டேட்டஸ் [Swing states] என்ற வார்த்தை பிரயோகம் உண்டு. அதாவது, ஜனநாயக கட்சிக்கு பாரம்பரியமாக இருக்கும் வாக்காளர்கள் உள்ள மாகாணங்கள்  நீல ஸ்டேட்ஸ் என்றும் குடியரசு கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மாகாணங்களில் சிவப்பு ஸ்டேட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை.

    1980 முதல் குடியரசுக் கட்சியினர் சிவப்பு மாகாணங்களிலும் , 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் நீல மாகாணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை. இவற்றை தவிர்த்து சில மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வாக்களிக்கும். எனவே இழுபறி நிலவும் இந்த மாகாணங்களை ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று அழைப்பது வழக்கம்.

    இங்கு இரு கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும். கடைசி நேரம் வரை வாக்குகள் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் சூழல் இங்கு காணப்படுகிறது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 ஸ்விங் ஸ்டேட்டஸ் மாகாணங்கள் தேர்தல் களத்தில் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

     

    இங்கு உள்ள வாக்காளர்களே அமெரிக்காவின் விதியை தீர்மானிக்க உள்ளனர். குறிப்பாக  கடந்த 2020 அதிபர் தேர்தலில், ஸ்விங் ஸ்டேட்டான அரிசோனாவில் அதிபர் ஜோ பைடன்  வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றிருந்தார். எனவே எந்நேரமும் மாறக்கூடிய இந்த  இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கமலா ஹாரிஸும், ட்ரம்பும் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

    டிரம்ப் முன்னிலை

    கடைசியாக நடந்த அட்லஸ் இன்டெல் போல் கருத்துக்கணிப்பின்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.

    • சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் உள்ளது.
    • நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியானது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் [78 வயது] ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகள் 

    இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இழுபறி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    அட்லஸ் இன்டெல் போல்

    குறிப்பாக முந்தைய கருத்துக்கணிப்புகளை போலல்லாது அட்லஸ் இன்டெல் போல் நிறுவனம் சார்பில் கடந்த நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப் 49 சதவீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 47.2 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். எனவே இருவருக்கும் இடையே 1.8 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.

    ராய்ட்டர்ஸ் / இப்சோஸ்

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

    கடந்த வாரம் அக்டோபர் 29 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கடைசியாக வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 1 சதவீத வித்தியாசத்தில் டிரம்பை விட முன்னிலையில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு சற்றே குறைந்துள்ளதையும் பார்க்க வேண்டி உள்ளது.

    நியூயார்க் டைம்ஸ்

    நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் உள்ளதாக தெரியவருகிறது. அரிசோனாவில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

     7 கோடி பேர் 

     50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். அதன்படி 7 மாநிலங்களிலும் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.

    அவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேசமயம் டிரம்ப்க்கு வாக்களிக்பவர்கள் அதிகம் பேர் இன்றைய தினம் நடக்கும் நேரடி வாக்குப்பதிவிலேயே தங்களது வாக்குகளை செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    இருவருக்கும் இடை சொற்ப சதவீதங்களே வாக்கு வித்தியாசம் உள்ளதால் கடைசி நேரத்தில் நிலைமை யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    • அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்து.

    வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யார் எவ்வளவு முன்னிலையில் உள்ளனர் என்று அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸை விட ஏழு மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக அட்லஸ் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும். இந்த மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    இதற்கு முன்னதாக, அயோவா மாகாணத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார்.

    2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி 2017 இல் எப்.பி.ஐக்கு கை கொடுத்தது.
    • 61 வயதான ஷீலா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    கணவனின் முன்னாள் மனைவியைக் கோமாளி வேசம் போட்டு கொலை செய்த அமெரிக்கப் பெண்மணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த புளோரிடா கில்லர் கிளவுன் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    கில்லர் கிளவுன் கொலை 

    மைக்கல் வாரன் என்பவரது மனைவி மார்லன் வாரன் என்ற பெண்மணியில் வீட்டின் காலிங் பெல்லை கிளவுன்[ கோமாளி] வேஷம் போட்ட ஒருவர் அழுத்தினார். கதவை திறந்த மார்லனிடம், கையில் வைத்திருந்த பலூன்களை அந்த கோமாளி கொடுத்தது. பலூங்களை வாங்கிக்கொண்டு How nice என்று மார்லன் சொல்லி முடிக்கும் முன்னர் அந்த கோமாளி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மார்லன் முகத்திலேயே சுட்டது. மார்லன் உயிரிழக்க கோமாளி வேடம் போட்டவர் அங்கிருந்து தப்பினார்.

     

     ஷீலா

    இந்த கொலை வழக்கில் எந்த விதமாக துப்பும் கிடைக்காமல் எப்.பி.ஐ. திணறி வந்தது. மைக்கல் வாரன் ஷீலா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி  2017 இல் எப்.பி.ஐக்கு  கை கொடுத்தது. அதன்படி மைக்கல் வாரனின் இரண்டாவது மனைவி ஷீலா கீன் வாரன் தான் அந்த கொலையாளி என்ற முடிவுக்கு எப்.பி.ஐ.வந்தது.

     மரண தண்டனை

    ஷீலா கோமாளி துணி வாங்கியது, குறிப்பிட்ட அந்த பலூன்களை வாங்கியது என்று ஆதாரங்களைச் சேகரித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஷீலாவை எப்.பி.ஐ. கைது செய்தது. 7 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது, ஆனால் தனது குற்றத்தை ஷீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வந்து ஒப்புக்கொண்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

     

    ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் தற்போது நன்னடத்தை காரணமாக ஷீலா முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நவம்பர் 2 அன்று சிறையில் இருந்து 61 வயதான ஷீலா வெளியே வந்தார்.

    குற்றம்

    கொலைசெய்யப்பட்ட மார்லனின் கணவர் மைக்கல் ஒரு கார் டீலராக இருந்துள்ளார். ஷீலா இவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். மைக்கிலும் ஷீலாவும் காதல் உறவில் இருந்ததாக அவர்களது சகாக்கள் கூறுகின்றனர். மார்லன் கொல்லப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொண்ட மைக்கல் மற்றும் ஷீலா கைது செய்யப்படும்வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

     

    அமெரிக்காவின் கில்லர் கிளவுன் 

    ஆனால் தற்போது மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காகவே ஷீலா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கொலை செய்யவில்லை என்றும் அவரது வக்கீல் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1970 களில் 33 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் ஜான் வெயின் கேசி. கிளவுன் வேடமைந்த இவர் அமெரிக்காவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார். அதே பாணியில் ஷீலா புளோரிடாவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார்.  

    • மிச்சிகன் மாகாணத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டார்
    • மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகளின் செலவினமும் குறிக்கப்படும்.

    உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. களத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

    பாலஸ்தீன - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷிய போர் ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் களம் பரபரப்பில் உள்ள நிலையில் இந்த அதிபர் தேர்தலில் அதன் தாக்கம் கண்கூடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாலஸ்தீன போர் குறித்து கமலா ஹார்ஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் தாக்குதலில் நடத்தி 251 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போரை நிறுத்த விரும்பாத இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலை ஏற்காமல் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.

     

    இந்நிலையில் நேற்றைய தினம் மிச்சிகன் மாகாணத்தில் நடந்த தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், இந்த வருடம் மிகவும் கடுமையானது. காசாவில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது. காசா மற்றும் மற்றும் லெபனானில் அதிகபடியான இடப்பெயர்வு நடந்துள்ளது. ஒரு அதிபராக நான் எனது அதிகாரத்தை பயன்படுத்தி காசா போரை முடிவுக்கு கொண்டுவர போராடுவேன்.

    பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். இஸ்ரேலின் பாதுகாப்பையும், பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் உறுதி செய்வேன். இஸ்ரேல்- லெபனான் பிரச்சனையிலும் சுமூக தீர்வை ஏற்படுத்த பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அமெரிக்காவில் சாமானிய மக்களுக்கான மருத்துவ செலவீனங்களை குறைத்து அனைவராலும் எளிதில் பெறக்கூடிய குறைந்த செலவின ஹெல்த்கேர் சேவைகள் வழங்கப்படும். மருத்துவம் அனைவரின் அடிப்படை உரிமையில் சேரும். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகளின் செலவினமும் குறிக்கப்படும்.

    உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள், சிறு-குறு தொழில்கள் பாதிக்காத வண்ணம் வரிவிதிப்பு குறைக்கப்படும், குழந்தைப்பேறு, கருக்கலைப்பு சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

    இதற்கிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்குப்பதிவில் மோசடி நடக்கும் சூழல் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வாக்காளர் அட்டை கட்டாயமாக்கப்பட்டாலொழிய இந்த மோசடிகளைத் தடுக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

    • மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
    • சாமானிய மக்களும் முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. களத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனல்டு டிரம்ப் [78 வயது] போட்டியிடுகின்றனர்.

     

    மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 7 கோடிக்கும் அதிகமானோர் தபால் வாக்கு, வாக்குப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் மூலம் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

    இந்தியாவில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே தேர்தல் நாளுக்கு முன்பு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அமெரிக்காவில் சாமானிய மக்களும் முன்கூட்டியே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கை செலுத்தும் வசதி உள்ளது.

    வேலை, உடல்நல பிரச்சினைகள், பயணம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நாளில் வாக்களிப்பதில் சிரமத்தை எதிர்கொள்பவர்கள் இந்த நடைமுறை பயன்படுத்துகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வாக்களிக்கும் நடைமுறை தொடங்கியது. பெரும்பாலான மாகாணங்களில் மக்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அதன்படி இதுவரை கிட்டத்தட்ட 7  கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எஞ்சியவர்கள் 50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.   இழுபறி ஏற்படாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

     

    தேர்தல் களத்தை பொறுத்தவரை  சமீபத்திய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்க்கு அவருக்கு 47 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×