என் மலர்
நீங்கள் தேடியது "ஜார்ஜ் சொரோஸ்"
- இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.
- அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும்.
வாஷிங்டன்:
அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ் ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜார்ஜ் சொரோஸ் இந்தியா, பிரதமர் மோடி, அதானி குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், இந்தியா சுவாரசியமான நாடு. இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆனால், மிகவும் தள்ளுபடி விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி அதில் அதிக பணம் சம்பாதிக்கிறது.
மோடியும், தொழிலதிபர் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் விதி பின்னிப்பிணைந்துள்ளது. அதானி நிறுவனம் பங்குச்சந்தை மூலம் நிதி பெற முயற்சித்து தோல்வியடைந்தது. பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அதானி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவரின் பங்குகள் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக உள்ளார். ஆனால், பாராளுமன்றத்திலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.
அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும். மேலும், இது கட்டாயம் தேவைப்படும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான கதவுகளை உந்தி தள்ளும். நான் அனுபவமில்லாதவனாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்' என்றார். இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சொரோஸ் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கூறுகையில், தனது மோசமான செயல்களை வெற்றிபெற செய்ய வளைந்துகொடுக்கும் அரசு வேண்டுமென்று ஜார்ஜ் சொரோஸ் நினைக்கிறார். அவரது பேச்சில் இருந்தே பிரதமர் மோடி போன்ற தலைவர்களை குறிவைக்க 1 மில்லியன் டாலர்களை நிதி உதவி வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஜார்ஜ் சொரோஸ் இந்திய ஜனநாயகத்தை அழித்து அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலம் அரசை நடத்த முயற்சிக்கிறார். நாம் வெளிநாட்டு சக்திகளை கடந்த காலங்களில் முறியடித்துள்ளோம்... மீண்டும் முறியடிப்போம் என்றார்.
- ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள்தான் ஒளிபரப்பு செய்தனர்
- காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஜார்ஜ் சோரோஸ் என்னுடைய பழைய நண்பர் என கூறியிருகிறார்
ஹங்கேரி-அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடைய நிதி அளிக்கும் அமைப்புகளுடன் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் செய்யாமல் நான் எழுப்ப விரும்பும் முக்கியமான பிரச்சனை இது. சோனியா காந்திக்கும், ஜார்ஜ் சோர்ஸ் நிதி அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு தீவிரமானது. அதை அரசியல் ரீதியாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை,
ஆனால் காஷ்மீரை தனிநாடு என கூறும் சக்திகளோடு காங்கிரஸ் இணைந்திருக்கிறது. ஆசிய பசிஃபிக் ஜனநாயக தலைவர்களின் கூட்டமைப்பில் சோனியா காந்தி இணை தலைவராக இருக்கிறார். இந்த அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.

இந்த அமைப்புடன் சோனியா காந்தி தொடர்பில் இருப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு அரசியல் தலையீடு சான்றாகும். நம் நாட்டில் பொருளாதாரத்தின் மீது இவர்கள் தாக்குதல் நடத்த கூடும்.
ராகுல் காந்தி அதானிக்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரோஸிடம் நிதியுதவி பெறும் ஊடகங்கள்தான் ஒளிபரப்பு செய்தனர் என்று தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்த முழக்கங்களுடன் 5 வது நாளாக பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய கிரண் ரிஜிஜூ,
நாங்கள் பாராளுமன்றத்தை நடத்த விரும்புகிறோம். சில பிரச்சனைகள் அரசியல் ரீதியானவை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ஆனால் இந்தியாவிற்கு வெளியே உள்ள சக்திகள் இந்தியாவை மீறி இந்தியாவிற்கு எதிராக போராட முயல்கின்றன என்பது கவலை அளிக்கிறது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஜார்ஜ் சோரோஸ் என்னுடைய பழைய நண்பர் என கூறியிருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு மீது அமெரிக்க தூதரகம் அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிலடி
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இவை அனைத்தும் பாஜகவின் கற்பனையான பொய்கள் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்காக இருக்கிறோம். நாங்கள் தேசபக்தர்கள், நாங்கள் தேசியவாதிகள், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான எதையும் நாங்கள் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், இது பாஜகவின் வழக்கமான தந்திரம். பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அவர்களின் குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றுவரை உண்மையாக மாறவில்லை என்று தெரிவித்தார்.
- வருகிற 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
- பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதகுரு ஜாக்கி வாசுதேவ்,
உலகிற்கு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க நாம் விரும்பும் போது, இந்திய பாராளுமன்றத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது.
இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள், வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடாது.

முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் அதற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாடக்கூடாது.
மிக முக்கியமாக, இந்திய வணிகங்கள் செழிக்க வேண்டும்.பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்என்று தெரிவித்துள்ளார்.
- ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது.
- ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

மேலும் அமெரிக்க அரசியல் கட்சியால் அதிபர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ஜார்ஜ் சொரோஸ், இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். அவர் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தெரிவித்தது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இணைத் தலைவராக உள்ள தொண்டு நிறுவனத்திற்கு, ஜார்ஜ் சொரோசின் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இவ்விவகாரத்தில் பாராளுமன்றத்திலும் பா.ஜ.க. குரல் எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் சொரோசுக்கு விருது வழங்கப்பட்டதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, சொரோசுக்கு விருது வழங்கப்பட்டது கேலிக்குரியது. அவர் அடிப்படையில் மனிதகுலத்தை வெறுக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.
கால்பந்து வீரர் மெஸ்சி, போட்டிகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள முடிய வில்லை.