என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன
    • தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 எலக்டோரல் வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 50 மாகாணங்களில் மொத்தம் 51.2% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். 47.4% வாக்குகளுடன் கமலா பின்தங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் [மேலவை] டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதிக்கத்தை நிறுவியுள்ளது. செனட் [மேலவை] மற்றும் பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] ஆகிய இரண்டிலும் அதிக இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன. இதில் 51 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வென்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 42 இடங்களில் உள்ளது.

    இதன்மூலம் செனட் சபையில் பெரும்பான்மை பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி, நீதிபதிகளை நியமித்தல் உள்ளிட்ட மேலவை செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, டிரம்ப் வெற்றி பெற்றால் எந்த தடங்கலும் இன்றி மேலவையில் உள்ள பெரும்பான்மையை வைத்து சுதந்திரமாக முடிவுகளை செயல்படுத்த முடியும். அதே நேரம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும், மேலவையில் டிரம்ப் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது கடினம். எனவே தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அதேபோல் 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] இடங்கள் உள்ளன. இதில் தற்போது 184 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும், 155 இடங்களில் கமலாவின் ஜனநாயக கட்சியும் வென்றுள்ளது. இதில் 218 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே பிரதிநிதிகள் சபையில் [ஹவுஸ்] பெரும்பான்மையைப் பெறும்

    • டொனால்டு டிரம்ப் 26,36,905 வாக்குகள் பெற்றார்.
    • கமலா ஹாரிஸ் 25,09,360 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஸ்விங் மாகாணங்கள் எனக் கருதப்படும் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் ஏழு மாகாணங்களில் வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.

    வடக்கு கரோலினாவில் டிரம்ப் சுமார் 3.2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.

    தொடக்கத்தில் சுமார் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார். இதனால் கடும் இழுபறி நீடித்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. இறுதியில் கமலா ஹாரிஸை விட 2.5 சதவீதம் வாக்குள் அதிகம் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    டொனால்டு டிரம்ப் 26,36,905 வாக்குகள் பெற்றார். கமலா ஹாரிஸ் 25,09,360 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 1,27,545 ஆகும். டொனால்டு டிரம்ப் 50.9 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், கமலா ஹாரிஸ் 48.4 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த வெற்றி மூலம் டொனால்டு டிரம்ப் 16 எலக்டோரல் வாக்குகளை பெற்று மொத்தம் 247 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகள் பெற்றுள்ளார்.

    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சா வளியை சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 5 பேர் தற்போது எம்.பி.யாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

    இவர் சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீசை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

    தெற்காசிய வாக்காளர்களை குறிவைத்து மேற்கொண்ட இவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்து கோவில்கள் உள்பட வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்த இவர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இல்லினாய்ஸின் பியோரியில் வளர்ந்த அவர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எந்திர என்ஜினீயரிங் பயின்றார். மேலும் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற இவர் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை குழுக்களிலும் பணியாற்றுகிறார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்த போது கவலை அடைந்த இவர் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தவதற்கு இடைக்கால வங்காளதேசம் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இவர் இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பிரியா டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    • 51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார்
    • 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரல் பிரதிநிதிகளின் வாக்காகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார்.  51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 209  எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தற்போது 47.5% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

    ஆனால் உண்மையில் வெற்றியை தீர்மானிக்கப்போகும் ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஸ்விங் மாகாணமாக வட கரோலினாவில் மொத்தம் உள்ள 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    இதைதவிர்த்து மீதமுள்ள பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் 6 ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. அரிசோனாவில் 11, நெவேடாவில் 6, விஸ்கான்சின் 10, மிச்சிகனில் 11, பென்சில்வேனியாவில் 19, ஜார்ஜியாவில் 16 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன.

    ஜார்ஜியா:  டிரம்ப் - 50.8%, கமலா - 48.5%

    அரிசோனா: டிரம்ப் - 49.8%, கமலா - 49.3%

    நெவேடா: டிரம்ப் -  52.2%, கமலா - 46.1%

    விஸ்கான்சின்: டிரம்ப் - 51.2%, கமலா - 47.3%

    பென்சில்வேனியா:  டிரம்ப் - 50.9%, கமலா - 48.1% வாக்குகள் இடைவெளியில் உள்ளனர்.

    • 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
    • தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்றார்

    அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

    அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    அந்த வகையில் பிரதானமான கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் உள்ள 54 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

    அதேபோல் தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 66 எலக்ட்ரல் வாக்குகளைக் கமலா ஹாரிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

    • டொனால்டு டிரம்ப் 26,42,585 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
    • கமலா ஹாரிஸ் 24,42,560 வாக்குகள் பெற்றுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இருந்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

    காலை 9 மணி நிலவரப்படி டொனல்டு டிரம்ப் 214 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 113 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    வெற்றி தீர்மானிக்கக் கூடியதாக ஸிவிங் என அழைக்கப்படும் ஏழு மாகாணங்கள் திகழ்கிறது. இதில் பென்சில்வேனியா மாகாணமும் ஒன்று இந்த மாகாணத்தில் முதலில் கமலா ஹாரிஸ் சுமார் 60 சதவீதம் வாக்குள் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.

    ஆனால் நேரம் செல்ல செல்ல டொனால்டு டிரம்ப் அவரை முந்தினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 26,42,585 (51.3 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 24,42,560 (47.8 சதவீதம்) வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

    73 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த மாகாணத்தில் 19 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.

    • 40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
    • கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை டிரம்ப் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

    அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது சர்வ சக்திவாய்ந்தது. தற்போதைய ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறும்.

    அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிகாலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஆயத்த பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது.

    ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகளிலும் யாரை யார் முந்துகிறார்கள் என்பதும் கணித்து கூறமுடியாத அளவுக்கு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

    அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 198 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.

    முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெறுவார் எனக் கூறப்பட்டது. நாடு முழுவதும் 48 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் 44 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர்.

    ஜனநாயகம், பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய ஐந்து விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்டு டிரம்ப் அதிக இடங்களில் முன்னணி பெற்று வருகிறார். இதன்மூலம் கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

    காலை 9 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 52.சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    • ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
    • ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 11 வயது சிறுமி செல்லமாக ஒரு ஆட்டை வளர்த்து வந்தாள். அதை கண்காட்சிகளில் பங்கேற்க வைக்க வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது.

    குழந்தைகளுக்கு விவசாய, சமூக திறன்களை கற்றுக்கொடுப்பதற்காக ஒரு திட்டத்தின் கீழ் அந்த ஆடு சிறுமிக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பிட்ட நாள் வந்ததும் அந்த ஆட்டை திட்ட அதிகாரிகள் பெற்றுச் சென்றுவிடுவார்கள். ஆடுகள் ஏலத்தில் விடப்பட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும்.

    செல்லமாக வளர்த்த ஆட்டை ஏலத்திற்கு கொடுக்க சிறுமிக்கு மனம் வரவில்லை. ஆனால் திட்ட அதிகாரிகள் ஒப்பந்தப்படி ஆட்டை அழைத்துச் சென்று ஏலத்தில் விட்டு விற்றுவிட்டனர். ஆனால் அன்றைய தினம், சிறுமி மேஜைக்கு அடியில் படுத்து அழுதுபுரண்டாள். அவளை பெற்றோரால் சமாதானப்படுத்த முடியவில்லை.

    ஏலத் தொகையை தாங்களே செலுத்தி, ஆட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முயன்றபோதும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. ஏலமிடப்பட்ட ஆடு பலியிடப்பட்டது.

    இதையடுத்து சிறுமியின் தாய், ஏல நிறுவனம் மீது கோர்ட்டில் முறையிட்டாள். 2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. பலியான ஆட்டிற்காக 3 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2½ கோடி) சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.

    • டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்) வாக்குகள் பெற்றார்.
    • கமலா ஹாரிஸ் 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதிக எலக்டோரல் வாக்குகள் கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்), 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகளும் பெற்றனர். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 178 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.

    • பென்சில்வேனியாவில் 68 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை.
    • மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்புதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்விங் மாகாணமான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழும்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

    இதில் ஜார்ஜியாவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதேவேளையில் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் முன்னிலை பெற்று வருகிறார். பென்சில்வேனியாவில் 19 எலக்டோரல் காலேஜ் (Electoral College) வாக்குகள் உள்ளன. மிச்சிகனில் 15 வாக்குகள் உள்ளன. இதில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ்க்கு 34 வாக்குகள் கிடைக்கும்.

    பென்சில்வேனியாவில் இதுவரை 68 சதவீத வாக்குகளும், மிச்சிகனில் 55.7 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளார்.

    • டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்) பெற்றுள்ளார்.
    • கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகள் பெற்றுள்ளனர்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிகமான மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

    அமெரிக்காவில் பல மாகாணங்கள் குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் ரெட் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும். அதேபோல் பல மாகாணங்கள் ஜனநாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும். இவைகள் க்ரீன் ஸ்டேட்ஸ் (States) என அழைக்கப்படும்.

    அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் இந்த ஏழு மாகாணங்கள் மாறிமாறி வாக்களிக்கும். இதனால் ஸ்விங் ஸ்டேட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இங்கு அதிக வாக்குகள் பெறுவர்கள்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். 47 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதில் டொனால்டு டிரம்ப் 14,16,193 வாக்குகள் (55.3 சதவீதம்), கமலா ஹாரிஸ் 1,128,043 (44.1 சதவீதம்) வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    • இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ×