என் மலர்
சீனா
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்சென் நகரில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, கொரிய ஜோடியுடன் மோதியது.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடைபெற்றது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் கிம் வொன் ஹோ - சியோ ஷெங் ஜே ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த போட்டி 45 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஏற்கனவே, ஹாங்காங் ஓபன் தொடரிலும் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி 2-வது இடம் பிடிததது என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்சென் நகரில் நடைபெறுகிறது.
- இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங்-ஜுனைத் ஆரிப் ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் - சிராக் ஜோடி 22-22, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி 42 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- ஓட்டல் நிர்வாகம் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது.
- ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
பீஜிங்:
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர்.
தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகப் பரவியது.
விசாரணையில், அந்தச் சிறுவர்கள் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஹாய்டிலோ இழப்பீடு வழங்கியது.
இதற்கிடையே, ஓட்டல் சார்பில் ஷாங்காய் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாங்காய் நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதால் உணவகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இளைஞர்களின் பெற்றோர் உணவகத்திற்கு 2.71 கோடி ரூபாய் நஷட் ஈடு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், பிரான்சின் தோமா பாப்போவ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் வீரர் 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் லக்ஷ்யா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவால் ஜாகோப்சென் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-4, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டி 27 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- இந்த பசை 'Bone-02' என அழைக்கப்படுகிறது.
- 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- 11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது.
- சூப்பர் 4 சுற்றின் முடிவில் சீனா, இந்தியா ஆகியவை முதல் இரு இடங்களைப் பிடித்தன.
ஹாங்சோவ்:
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் சீனா, இந்தியா ஆகியவை முதல் இரு இடங்களைப் பிடித்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனா மற்றும் இந்தியா மோதின
தொடக்க முதலே அதிரடியாக ஆடிய சீனா 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது
- நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும்
- வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:-
சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடு. அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிறந்த சாதனையைக் கொண்ட நாடு ஆகும். போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக தான் மாற்றும். சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. அமைதிப் பேச்சு வார்த்தைகளை ஊக்குவிப்பதும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண்பதும் சீனாவின் நோக்கமாகும் என்றார்.
- ஷாங்காய் உச்சிமாநாடு மற்றும் 2 ஆம் உலகப்போர் நினைவு அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
- சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 10 நாள் பயணமாக நேற்று சீனா சென்றார்.
செச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் விமானத்தில் வந்திறங்கிய அவரை சீன இணை வெளியுறவு அமைச்சர் சுன் வெயிடோங் அவரை வரவேற்றார்.
வரும் 21 ஆம் தேதி வரை அங்கிருக்கும் அவர், 2025 கோல்டன் பாண்டா சர்வதேச கலாச்சார மன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
செச்சுவான், ஷாங்காய், சின்ஜியாங் உகோர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்வார்.
இந்த பயணத்திபோது சீன உயர்மட்ட தலைவர்களுடன் பாகிஸ்தான் - சீனா உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
முன்னதாக சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாடு மற்றும் 2 ஆம் உலகப்போர் நினைவு அணிவகுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கடந்த ஆகஸ்ட் 20 முதல் 22 ஆகிய 2 நாட்கள் பாகிஸ்தானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
- இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என டிரம்ப் விமர்சித்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்தாண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் எனவும் நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
- பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.
பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது பேசிய ஜி ஜின்பிங், "இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம். சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான இரண்டு நாடுகள். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். நண்பர்களாகவும், நல்ல அண்டை வீட்டாராகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம்" என்று பேசினார்.
அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், இந்தியா - சீனா உறவு குறித்து இந்தியாவுக்கான சீன தூதர் சு ஃபிஹோங் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். சீனாவும் இந்தியாவும் சேர்ந்து தெற்குலகின் குரலை வலுப்படுத்த வேண்டும். சீனாவில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம். இருநாடுகளும் இணைந்து ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.






