என் மலர்tooltip icon

    சீனா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.
    • வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது.

    சராசரி உயரத்தைவிட அதிக உயரம் கொண்டவர்கள் மற்றவர்களால் அதிகம் கவனிக்கப்படுவார்கள். அந்த வகையில் சீனாவை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் 7.3 அடி உயரத்துடன் கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஜாங்ஜியு என்ற பெயர் கொண்ட அந்த வீராங்கனை சீன தேசிய அணிக்கான 18 வயதிற்குட்பட்டோருக்கான பிபா மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் அறிமுகம் ஆனார். 7 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் மற்ற வீராங்கனைகளை விட கூடைப்பந்தாட்டத்தில் அசத்திய காட்சிகள் வீடியோவில் உள்ளது.

    அந்த வீராங்கனையின் உயரம் காரணமாக அவர் பந்தை எளிதில் பிடிப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் உள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது.
    • கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும்.

    பீஜிங்:

    நிலவின் தென்துருவத்தில் இருந்து மண்-பாறை மாதிரிகளை கொண்டு வருவதற்காக சாங் இ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 2-ந்தேதி நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் தரை இறங்கிய விண்கலம், இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவி மூலம் நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரித்தது.

    மேலும் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. பின்னர் அந்த மாதிரிகள் நிலவை சுற்றி வந்த லேண்டருக்கு மாற்றப்பட்டு பூமிக்கு புறப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது. சுமார் இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, இப்பணி நிறைவடைந்துள்ளது என்று சீனா தெரிவித்தது. விண்கலத்தில் இருந்த நிலவின் மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என்றனர். இந்த திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • ஏஐ தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது.
    • செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

    அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.

    இந்த ஏஐ தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது. அவ்வகையில் செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

    செக்ஸ் பொம்மைகளை பேச வைக்கவும் பயன்படுத்துவர்களிடம் உரையாடுவதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    சீன விஞ்ஞானிகள் chatGPT மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செக்ஸ் ரோபோட்களை பேச வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    அவ்வகையில் பயனாளர்களிடம் பேசவும் உடல்ரீதியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் வடிவிலான இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கனமழையால் நேற்று மட்டும் சீனாவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நூற்றுக்கணக்கான பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிரமான மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

    சீனாவில் ஃபுஜ்ஜியான் மாகாணத்தில் மழைக்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை காணவில்லை. மீட்புக்குழு அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த கோவில் மண்ணில் புதைந்ததை கண்டுபிடித்தினர். அந்த கோவில் இடிபாட்டிற்குள் ஆறுபேர் உடல் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

    கனமழை காரணமாக வீட்டில் இருந்து உயரமான பகுதியில் இருந்து கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக கோவில் மண்ணில் புதைந்தபோது இவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    நேற்று குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக 47 பேர் உயிரிழந்தனர். கனமழை காரமாக 100-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளைநிலைங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. புறநகர் டவுன்பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    • உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதற்கான சோதனை ஓட்டம் துபாயில் கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    பீஜிங்:

    பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் நெரிசல் அதிகரித்து பயணத்தை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் பயணத்தையும் சலிப்படைய செய்கிறது.

    எனவே, பயணத்தை எளிதாக்கும் வகையில் பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங், உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றி பெற்றது.

    கடந்த ஞாயிறன்று சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக காட்சியில் இந்தப் பறக்கும் கார் பீஜிங்கின் டேக்சிங் விமான நிலையத்தில் முதல் முறையாக தனது பயணத்தை மேற்கொண்டது.

    ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் பறக்கும் இந்தக் காருக்கு எக்ஸ்பெங் நிறுவனம் எக்ஸ் 2 என பெயரிட்டுள்ளது. அதிகபட்சம் 170 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ரோபோக்களின் சேவை பல துறைகளிலும் கால்பதித்து வருகிறது. உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரிய ஓட்டல்களில் ரூம் சர்வீஸ் செய்வதற்கும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் உணவகம் ஒன்றில் ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பணிப்பெண் ரோபோவை போன்றே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.

    பார்ப்பதற்கு உண்மையான ரோபோ பரிமாறுவது போன்று வாடிக்கையாளர்கள் கருதும் வகையில் அந்த பெண்ணின் அசைவுகள் அனைத்தும் துல்லியமாக ரோபோவை போன்று இருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • லீயை திருமணம் செய்து கொள்வதற்காக ஜியாபாங்க் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
    • ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்தார். இருவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களாகினர். இறுதியில் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    ஜியாபாங்க் குடும்பத்தினர் அவரது உறவை ஏற்கவில்லை என்ற போதிலும், லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.

    சமீபத்தில் லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

    இந்த ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

    முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். லீயுடன் எதுவும் சாத்தியம் என்று அவர் கூறி உள்ளார்.

    லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

    • அருவியில் இயற்கையாக நீர்வரத்து இல்லாத நிலையில் அருவியின் மேற்பகுதியில் ஒரு பெரிய பைப் மூலமாக தண்ணீர் கொட்டப்படுவது போன்ற வீடியோ வெளியானது.
    • 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த வீடியோ சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது.

    சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற யுண்டாய் மலையில் உள்ள அருவியில் குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்படுவது போன்று காட்சி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 314 மீட்டர் உயரம் உள்ள யுண்டாய் அருவி பிரசித்தி பெற்ற யுண்டாய் மலையின் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதிக்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் செல்வது வழக்கம். வழக்கமாக இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக இங்கு செல்வார்கள்.

    இந்நிலையில் இந்த அருவியில் இயற்கையாக நீர்வரத்து இல்லாத நிலையில் அருவியின் மேற்பகுதியில் ஒரு பெரிய பைப் மூலமாக தண்ணீர் கொட்டப்படுவது போன்ற வீடியோ வெளியானது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த இந்த வீடியோ சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. யுண்டாய் அருவி சில குழாய்களில் உற்பத்தியாகிறது என கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதோடு, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வறட்சி காலங்களில் பார்வையாளர்கள் தங்கள் பயணத்தை பயனுள்ளதாக உணர வேண்டும் என்பதற்காக குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்பட்டதாக பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் பயனர்கள் பலரும் அருவியில் கூடவா டூப்ளிகேட் செய்வது என விமர்சித்து வருகின்றனர்.

    • வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்- தைவான் அதிபர்.
    • சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது- சீனா

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    3-வது முறையாக பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தைவானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக லாய் சின்-டே தேர்ந்தெடுங்கப்பட்டார்.

    அவர் பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். லால் சின்-டே தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு விரிவுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் அமைதி உள்ளிட்ட விவகாரத்தில் மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார். அதில் "உங்களுடைய அன்பார்ந்த தகவலுக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:-

    சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இந்த உலகத்தில் ஒரே சீனாதான். சீனாவில் ஒருங்கிணைந்த பகுதியாக தைவான் உள்ளது. ஒரே சீனாவின் கொள்கை என்பது சர்வதேச உறவுகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை மற்றும் சர்வதேச சமூகத்தில் நிலவும் ஒருமித்த கருத்து. இந்தியா இதில் தீவிர அரசியல் ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. இதற்கு சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • மன அழுத்தம் போக செய்ய பல யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.
    • சிலர் இவற்றுடன் நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

    பணிச்சுமை அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்களை கையாண்டு வருவது இயல்பாகிவிட்டது. ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் சூழலுக்கு ஏற்ப மன அழுத்தம் போக செய்ய பல யுத்திகளை பணியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

    எனினும், உலகளவில் பணிச்சுமை அல்லது லேசான மன அழுத்தம் ஏற்படும் போது, பணியில் இருந்து சிறு ஓய்வுக்காக பலர் டீ, காஃபி உள்ளிட்டவைகளை பருகுவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் இவற்றுடன் நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

     அந்த வகையில், நவீன சமூக வலைதள காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாள துவங்கியுள்ளனர். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப் உள்ளிட்டவைகளை கடந்து சீனர்கள் தற்போது வாழை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.


     

    மேலும், இவ்வாறு செய்வது அந்நாட்டில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த டிரெண்ட்-இன் படி பணியாளர்கள் தங்களது அலுவலகத்தில் அவரவர் பணியாற்றும் மேஜையில், வாழை செடி ஒன்றை வாங்கி வந்து வளர்க்கினர். வழக்கமான வாழை சாகுபடி போன்றில்லாமல், இவர்கள் பச்சை நிறத்தில் உள்ள வாழை தார் ஒன்றை நீர் ஊற்றும் வசதி கொண்ட தொட்டியில் வைக்கின்றனர்.

    பிறகு, ஒருவார காலத்திற்கு அவ்வப்போது பராமரிக்கும் போது, பச்சை நிற தாரில் இருந்து வாழை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது. முதலில் பச்சை நிறத்தில் துவங்கி இறுதியில் இளம் மஞ்சள் நிறத்திற்கு வாழை பழமாக மாறுகிறது. இந்த வழிமுறைகளை பார்க்கும் போது ஒவ்வொரு தருணமும் அளவில்லா மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் அளிப்பதாக டிரெண்ட்-இல் பங்கேற்றவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கின்றனர்.

    இந்த வழக்கம் சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற தளமாக செயல்பட்டு வரும் ஷாங்ஷூவில் வைரலாகி உள்ளது. இது தொடர்பான பதிவுகள் அதிக லைக்குகளை வாரி குவிக்கின்றன. அந்த வகையில், மன அழுத்தம் கொண்டவர்களுக்கு நிம்மதியையும், சமூக வலைதளத்தில் லைக்குகளை குவிக்கவும் இந்த டிரெண்ட் தற்போது உதவுகிறது.

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
    • வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பீஜிங்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

    இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.

    பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.

    பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:

    இந்தியாவின் பொதுத்தேர்தல் முடிவுகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

    இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. இருதரப்பு உறவுகளை நிலையான பாதையில் முன்னேற்றி கொண்டு செல்வதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    பீஜிங்:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    ×