என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
    • அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு  அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.

    இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



     


    • ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.
    • வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதம்.

    ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.

    வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபர்யாப் மாகாணத்தில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனால், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாக மாகாண தகவல் இயக்குனர் ஷம்சுதீன் முகமதி கூறினார்.

    இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மாகாணமான கோரில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
    • தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது

    ஐபிஎல் ஃபீவரில் இந்திய ரசிகர்கள் உள்ள நிலையில் விரைவில் டி20 உலகக் கோப்பையும் வர உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐபிஎல்- க்கு பின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டி-20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பொறுபேற்று நடத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதையும் தாண்டி பணம் கொழிக்கும் முக்கிய வணிக வியாபாரமாக உருவெடுத்துள்ளது. இந்த தலைமுறை இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொண்டுள்ள அதீத ஆர்வமே இந்த வணிகத்தின் பிரதான முதலீடு ஆகும்.

    ஐபிஎல் ஆகினும் உலகக்கோப்பை போட்டிகள் ஆகினும் பல்வேறு நிறுவனங்கள் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ள இதை சரியான களமாக பயன்படுத்திக் கொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டி20 போட்டிகளை ஒளிபரப்பும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு விளம்பரங்கள் மூலமும் அதனுடன் தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் மொத்தமாக ரூ.1600 முதல் ரூ.1800 வரை வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாயின் அளவுக்கு டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பரங்களுக்கு 40 சதவீதம் வர்த்தக இடத்தை ஒதுக்கியுள்ள டிஸ்னி ஸ்டார்க்கு கேமிங் மற்றும் இதர ஒளிபரப்ப்பு தொடர்புடைய வர்த்தகங்கள் மூலமும் இந்த அளவு வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

     

    டி20 உலகக்கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் , ஜஸ்பிரித் பும்ரா, முகமட். சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
    • 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த வகையில், 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    எத்தியோப்பியாவில் வசிக்கும் பன்னா என்ற பழங்குடியின மக்கள் இந்த சவாலான திறமையை தங்கள் அன்றாட வாழ்க்கையில் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பழக்கமானது வரலாற்று ரீதியாக ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபெற்று வருகிறது.

    நச்சு பாம்புகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள பன்னா பழங்குடியினரால் எடுக்கப்பட்ட 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வெறும் நடைபயணத்துக்கு அப்பால், பன்னா மக்கள் ஸ்டில்ட் நடை பயணத்தை ஒரு கலை வடிவமாகவே உயர்த்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அக்‌ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர் பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதி. கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், அக்ஷதா மூர்த்தியின் தந்தை [நாராயண மூர்த்தி]-யின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனின் பணக்கார குடும்பங்களின் வருடாந்திரத் தொகுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 37.196 மில்லியனை எட்டியுள்ளது.

    • சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.
    • வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பாகிஸ்தானில் சில பிரபலங்கள் புலிகள், பாம்புகள், முதலை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கூட அனுமதி பெற்று வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் வீடுகளில் ஏராளமான விலங்குகளை வளர்த்து அவற்றுடன் விளையாடுவது போன்று எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனவர் நவுமன்ஹாசன்.

    இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் சிறுத்தை ஒன்று திடீரென அவரை கீறும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோவில் நவுமன் மற்றொரு நபருடன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறார்.

    அவர்களுக்கு அருகில் நவுமன் வளர்த்து வரும் செல்ல சிறுத்தை செல்கிறது. அப்போது சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரை கீறுவது போன்று காட்சி உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
    • 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விஷேச ஆடைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நகைகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகின்றன.

    அந்த வகையில் விழாவில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பேஷன் பிரபலமான நான்சிதியாகி 20 கிலோ எடை கொண்ட கவுன் அணிந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

    'கனவு நனவாகும்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் ஒரு அறிமுகமாக காலடி எடுத்து வைத்ததை மிக எதார்த்தமாக உணர்கிறேன். இந்த விழாவுக்காக 20 கிலோவுக்கும் மேல எடை கொண்ட இளம் சிவப்பு கவுனை உருவாக்க ஆயிரம் மீட்டர் துணி பயன்படுத்தப்பட்டது. இந்த கவுனை தானே தைத்ததாகவும் கூறி உள்ளார்.

    • வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
    • மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பிஷ்கேக்:

    கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்து மாணவர்களுக்கிடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. இதற்கிடையே வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

    விடுதிக்குள் புகுந்த கும்பல், பாகிஸ்தான் மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

    இதையடுத்து கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தால் கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் தவித்து வருகிறார்கள். சிலர் பயத்தில் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு பதுங்கி இருந்துள்ளனர்.

    மேலும் வெளியில் சென்றால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சாப்பிட செல்லாமல் இருந்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படிக்கும் தெலுங்கானா மாணவி ஒருவர் கூறும்போது, `தாக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து, தலைநகரில் உள்ள தனியார் விடுதியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு மாற்றப்பட்டோம்.

    பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இருந்தாலும், பிஷ்கெக்கில் நடக்கும் வெறுப்புணர்வு காரணமாக நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. இது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் ஊடகங்களை கிர்கிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, வெளிநாட்டு ஊடகங்கள், சமூக வலைப்பின்னல்கள், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள சிலர் கிர்கிஸ்தானில் உள்ள நிலைமை குறித்து உண்மைக்கு புறம்பான,முற்றிலும் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • பிரதமர் நேதன்யாகுவுக்கு ஜூன் 8-ந்தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
    • காண்ட்சின் இறுதி எச்சரிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு இஸ்ரேலின் அமைச்சரவை மந்திரி பென்னி காண்ட்ஸ் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    காசாவின் ஹமாசுக்கு எதிரான போர் திட்டத்திற்கு பிரதமர் நேதன்யாகு வகுத்த இறுதி எச்சரிக்கை இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ள பென்னி காண்ட்ஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் போருக்குப் பிந்தைய திட்டத்தை உருவாக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு ஜூன் 8-ந்தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். இதற்கிடையே காண்ட்சின் இறுதி எச்சரிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

    • இந்தோனேசியாவில் டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க உள்ளார்.
    • இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.

    உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க உள்ளார்.

    இதற்காக அவர் இன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார். பாலியின் மாகாணத் தலைநகரான டென்பசாரில் உள்ள பொது சுகாதார மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோவுடன் இணைந்து மஸ்க் இந்த சேவையைத் தொடங்க உள்ளார்.

    மேலும் இந்தோனேசியாவின் சுகாதாரம், கல்வித் துறைகளில் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்.

    • மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(வயது 27) டான்ட்ரே புல்லக் (வயது 18)கார்சியா டிக்சன் ஜூனியர் (வயது 26) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சந்தேக நபர்கள் யாரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    ×