search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் பூங்காவில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
    X

    அமெரிக்காவில் பூங்காவில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி

    • மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேர் காயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்கள் 27 வயதான மலாச்சி பீ(வயது 27) டான்ட்ரே புல்லக் (வயது 18)கார்சியா டிக்சன் ஜூனியர் (வயது 26) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சந்தேக நபர்கள் யாரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    Next Story
    ×