என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றார்.
    • உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலரை அமெரிக்கா நிதியாக வழங்குகிறது என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

    ஆனாலும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வரும் உக்ரைன் அரசுக்கு அவ்வப்போது அமெரிக்கா நிதியுதவி செய்துவருகிறது.

    இதற்கிடையே, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என அதிபர் புதின் தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது.
    • எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் தெரிவிக்கினர்.

    சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் [Zhejiang] பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா [Jinhua] நகரில் உள்ள யோங்காங் டேவே Yongkang Deway பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் [Huang] என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் [Immediate restoration] முறை இம்பிளாட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் கடந்த சமூக வலைதளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிழந்தவரின் வயது வெளிப்படுத்தப்படவில்லை.

    இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட எதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலர் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். 

    • அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
    • 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் தனது கருத்தை யாரோ தவறாக புரிந்துகொண்டு தன்னை இடஒதுக்கீட்டுக்கு எதிரானவனாக சித்தரிக்க முயல்கின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இடஒதுக்கீடு நீக்கம் குறித்த தனது கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள ராகுல், நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்.நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. என்று தெரிவித்துள்ளார்.

    • ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
    • முக்கிய துறைகளில் மாற்றம் கொண்டுவர கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை.

    வங்கதேசம் நாட்டிற்கான தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ், தனது நாடு இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது, ஆனால் அது "நியாயம் மற்றும் சமத்துவத்தின்" அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    தொலைக்காட்சியில் உரையாற்றிய முகமது யூனுஸ், "யூனுஸ் நிர்வாக தலைவராக பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் அவரை வாழ்த்தினார்கள்."

    "நாங்கள் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறோம், ஆனால் அந்த உறவுகள் நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கவும் நான் முன்முயற்சி எடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார்.

    சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    வங்கதேசத்தை சீர்திருத்தும் முயற்சியில், தேர்தல் முறை உட்பட ஆறு முக்கிய துறைகளில் மாற்றங்களை கொண்டுவர ஆறு கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக யூனுஸ் கூறினார்.

    • கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
    • கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

    நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .

    இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரியந்துள்ளது.

    இதற்கிடையே, சுனிதான வில்லியம்ஸ் 2வது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

    அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    இதற்கு முன்பு, கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
    • 33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அவரது இன்ஸ்டா பதிவில், தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

    33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதை குறிக்கும் விதமாக Taylor Swift - Childless Cat Lady என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நீங்கள் வென்றுவிட்டிர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
    • மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.

    இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.

    இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.

    • கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட்- டொனால்டு டிரம்ப்.
    • டொனால்டு டிரம்ப் சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர்- கமலா ஹாரிஸ்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    இருவரும் இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். இருவரும் பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் ஆகியவற்றை பற்றி பரஸ்பர விமர்சனத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் இஸ்ரேல்- ஹமாஸ், உக்ரைன்- ரஷியா போர் குறித்தும் தங்களது பார்வையை முன்வைத்தனர். தனிப்பட்ட முறையிலும் விமர்சனங்களை முன்வைக்க தவறவில்லை.

    கமலா ஹாரிஸை மார்க்சிஸ்ட் என டொனால்டு டிரம்ப் விமர்சித்தார். அதேவேளையில் உலக நாடுகள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கின்றனர். டிரம்ப் அவமானம் என உலகத் தலைவர்கள் சொல்வதாக கமலா ஹாரிஸ் விமர்சித்தார். மேலும், சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர் என குற்றம்சாட்டினார்.

    இந்த விவாதம் முடிவடைந்த நிலையில், "இதுவரை நான் கலந்து கொண்டதில், கமலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதம்தான் என்னுடைய விவாதங்களில் சிறந்த விவாதம் என்று நினைக்கிறேன்" என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    முதல் விவாதத்தில் ஜோ பைடன் டொனால்டு டிரம்பிற்கு எதிராக திணறினார். இதனால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என டொனால்டு டிரம்ப் நினைத்தார். ஆனால் ஜனநாயக கட்சி ஜோ பைடனுக்கு பதலாக கமலா ஹாரிஸை களம் இறக்கியது. அதன்பின் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

    • பொதுவாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மெய்நிகர் ஆட்டிச குறைபாடு தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய அபாயத்தில் உள்ளனர்.
    • கவனம், மொழி மற்றும் சமூக திறன்களுக்கு பொறுப்பான மூளை பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

    துபாய்:

    அமீரகத்தில் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு மெய்நிகர் ஆட்டிச குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா? என்பதற்கு அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் எச்சரிக்கை விளக்கம் விடுத்துள்ளனர்.

    இது குறித்து அமீரகத்தின் நல்வாழ்வு பயிற்சியாளர் புஸ்ரா கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமீரகத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் ஆரம்ப வயதில் இருந்தே டேப்லெட், செல்போன் அல்லது டி.வி போன்ற திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மெய்நிகர் ஆட்டிச பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரணமாக ஆட்டிசம் என்பது மரபணுவியல் அல்லது நரம்பியல் சார்ந்த குறைபாடு ஆகும். இதில் மனவளர்ச்சி குன்றிய நிலை அல்லது வயதுக்கு ஏற்ற மனவளர்ச்சி இல்லாமல் காணப்படும்.

    மெய்நிகர் ஆட்டிசம் என்பது சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடைய பாதிப்பாகும். குறிப்பாக இது நிஜ உலக தொடர்பு இல்லாதது என கூறலாம். இது டிஜிட்டல் திரைகளில் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    பொதுவாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மெய்நிகர் ஆட்டிச குறைபாடு தொடர்பான அறிகுறிகளுடன் கூடிய அபாயத்தில் உள்ளனர். இந்த வயதுதான் மூளை வளர்ச்சியடையும் பருவமாகும். இதில்தான் சமூகம் மற்றும் மொழி சார்ந்த திறன்களை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. இந்த திறன்கள் அதிகப்படியாக டிஜிட்டல் திரையில் செலவிடும் குழந்தைகளுக்கு குறையும்.

    கவனம், மொழி மற்றும் சமூக திறன்களுக்கு பொறுப்பான மூளை பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளுக்கு பேச்சில் தாமதம், குறைவான கவனம் செலுத்துதல் மற்றும் நிஜ உலக சமூகத்தினரை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் நரம்பியல் நிபுணர் டாக்டர் அலெஸ்சாண்ட்ரே மச்சாடோ கூறியதாவது:-

    டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடத்தைகளை பொறுத்தவரையில் பேசுவதில் தாமதம் மற்றும் நிலையான கண் தொடர்பு இல்லாதது போன்றவைகள் ஏற்படுகிறது. அதிக நேரம் திரையில் செலவிட்டால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் இல்லை.

    இதற்கு மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுகிறது. ஆனால் ஆரம்ப வயது மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டால் கவனம், நினைவுத்திறன் மற்றும் சமூக திறன்களில் ஏற்படும் பாதிப்புக்கு வழி வகுக்கும். இது குறித்த அறிகுறிகளை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

    குறிப்பாக கண்பார்த்து நிலையாக பேசமுடியாமை, தாமதமான பேச்சு, மற்றவர்களிடம் தொடர்புகொள்வதில் ஆர்வமின்மை, திரும்ப திரும்ப ஒரே செயலை செய்தல், திரைகளில் செலவிட வேண்டும் என்ற பிடிவாதம், அதனை நிறுத்த கூறினால் அடம் பிடித்து அழுவது போன்ற அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். அதிலும் தனிமையாக இருப்பது, தகவல் தொடர்பில் சிரமம் போன்றவற்றை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். டிஜிட்டல் திரையில் கணிசமாக நேரத்தை செலவிடுவதை குறைப்பது குழந்தைகளின் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்து விட்டார்.
    • கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும்- டிரம்ப்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

    கமலா ஹாரிஸ் "நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவேமாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

    அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

    டொனால்டு டிரம்ப் "கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்" என்றார்.

    மேலும் "கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

    நான் வித்தியாசமான ஆள். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்" என்றார்.

    ×