என் மலர்tooltip icon

    உலகம்

    • வெனிசுலா எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும்.
    • அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.

    வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே வெனி சுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அந்நாட்டு எண்ணெய் வளத்தை கையாளுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்சுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் வெனிசுலாவில் இருந்து 5 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை அமெரிக்கா வாங்கும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 மில்லியன் (3 கோடி) முதல் 50 மில்லியன் (5 கோடி) பேரல்கள் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். அந்த பணம் என்னால் கட்டுப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த எண்ணெய் வெனிசுலா சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு அமெரிக்கா கப்பல்துறைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்ற டிரம்ப் நினைக்கிறார் என்றும் இதனால் தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என்றும் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொலம்பியாவை ஆளும் பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது.
    • பலத்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

    வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்றதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியாவையும் குறிவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "வெனிசுலா முடிந்துவிட்டது, அடுத்து கொலம்பியா தான். அங்கிருந்துதான் அமெரிக்காவிற்கு அதிகளவில் கொக்கைன் கடத்தப்படுகிறது. கொலம்பியாவை ஆளும் பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    மேலும் கொலம்பியா மீது ராணுவ தாக்குதலும் சரியான விஷயம் தான் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார். 

    டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்குச் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெட்ரோ, "வெனிசுலாவில் நடத்தியது போன்ற தாக்குதலைக் கொலம்பியாவில் நடத்த முயன்றால், அதற்குப் பலத்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

    இனி ஒருபோதும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று நான் உறுதி ஏற்றிருந்தேன்.

    ஆனால், எனது தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்த நான் தயங்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னாள் கொரில்லா போராளியான பெட்ரோ, கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் ஆவார். 

    • அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயார்.
    • மச்சாடோவுக்கு வெனிசுலா நாட்டுக்குள் போதிய மரியாதையோ ஆதரவோ இல்லை

    வெனிசுலா மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.

    வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

    அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் மதுரோவுக்கு நேர்ந்ததை விட மோசமான முடிவு டெல்சிக்கு ஏற்படும் என எச்சரித்த டிரம்ப், மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இதற்கிடையே இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்த டெல்சி, வெனிசுலா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

    நிலைமை இப்படி இருக்க, வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ தனது விருதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

    வெனிசுலா அதிபர் மதுரோவைப் பிடிப்பதற்காக ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் பாராட்டிய மச்சாடோ, "நீதி சர்வாதிகாரத்தை வென்ற நாள் இது. இந்தச் சாதனையைச் செய்த டிரம்புக்கு எனது நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன், அவருடன் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு தான் ஆட்சியைக் கைப்பற்றலாம் என மச்சாடோ எதிர்பார்த்தார். ஆனால், டிரம்ப் அவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.

    பேட்டி ஒன்றில் பேசிய டிரம்ப், "மச்சாடோவுக்கு வெனிசுலா நாட்டுக்குள் போதிய மரியாதையோ ஆதரவோ இல்லை" என்று வெளிப்படையாகக் கூறி மச்சாடோவை ஓரங்கட்டியுள்ளார்.

    இந்தியா பாகிஸ்தான் உட்பட 6 போர்களை நிறுத்தியதற்காக தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறி வந்த நிலையில் மச்சோடாவுக்கு வழங்கப்பட்டது தான் டிரம்ப் தற்போது அவரை ஓரங்கட்ட காரணம் என வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

    ஆனால் மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கும், அவரைப் புறக்கணித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    அதே சமயம், மச்சாடோ நோபல் பரிசு வென்றிருக்கவே கூடாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
    • போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி.

    காசா பகுதியில் தொடரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.

    காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அங்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.

    எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவு மற்றும் மருந்துகளுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஐநாவின் அகதிகள் தூதராக நீண்ட காலம் பணியாற்றிய ஆஞ்சலினா ஜோலி, ரஃபா எல்லைக்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டார்.

    இதுகுறித்து பேசிய ஏஞ்சலினா, "இங்கு நடப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. பசியாலும் போரினாலும் வாடும் குழந்தைகளுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே ஆஸ்கர் விரித்து வென்ற ஸ்பெயினைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர் ஜேவியர் பார்டெம், "உதவிகளைத் தடுப்பது என்பது பொதுமக்கள் மீதான நேரடித் தாக்குதல்.

    இது போர்க்குற்றத்திற்குச் சமமானது. போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
    • மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    வெனிசுலா மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.

    வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

    அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் மதுரோவுக்கு நேர்ந்ததை விட மோசமான முடிவு டெல்சிக்கு ஏற்படும் என எச்சரித்த டிரம்ப், மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    இந்நிலையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரடி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

    அந்த டிரோன்களை வெனிசுலா பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தலைநகரில் நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் வெனிசுலா அரசு விளக்கம் அளித்துள்ளது.

    வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

    • ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்று பந்தயம் காட்டினார்
    • வெறும் 96 டாலருக்கு ஒப்பந்தங்களை வாங்கினார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்று ஆன்லைனில் பந்தயம் கட்டிய மர்ம நபர் ஒருவர், ஒரே நாளில் 4,10,000 டாலர் (சுமார் 3.4 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.

    Polymarket என்ற பிரபல ஆன்லைன் பந்தய தளத்தில், கடந்த டிசம்பர் 27 அன்று, ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்ற பந்தயத்தின் அடிப்படையில் வெறும் 96 டாலருக்கு பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் ஒப்பந்தங்களை வாங்கினார்.

    மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்த செய்தி வெளியானவுடன், அந்த நபர் கட்டிய பந்தயத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது. மதுரோவின் வீழ்ச்சி உறுதி செய்யப்பட்டவுடன், அந்த நபரின் லாபம் 4.10 லட்சம் டாலராக எகிறியது.

    அமெரிக்காவின் ராணுவத் திட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்த யாரோ ஒருவர்தான் இப்படிப் பந்தயம் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.   

    • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
    • பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று.

    பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

    மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது.

    விழாவில் பேசிய பாலஸ்தீனத் தூதர் ஹுசாம் சோம்லோட், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.

    காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை என எங்கு இருந்தாலும், பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று" என்று தெரிவித்தார்.

    காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகப் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இப்போது முழு அளவிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டுள்ளன.  

    • விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளார்
    • தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது

    தான் சொன்ன ஜோசியத்தை உண்மை என நிரூபிக்க பெண்ணின் ஃபோனை திருடிய ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

    தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் 38 வயதான உடோம்சாப் முயாங்கேவ் என்ற ஜோசியர் புத்தாண்டு அன்று, 19 வயதான பிம் என்ற இளம்பெண்ணிற்கு சீட்டுப் பார்த்து பலன் கூறியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், அவர் ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்றும் கணித்துக் கூறியுள்ளார்.

    பின்னர் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க ஒரு சடங்கு செய்ய வேண்டும். அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் சடங்கு வேண்டாம் என்று தவிர்த்து அப்பெண் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தனது ஐபோன் காணாமல் போனதை பிம் அறிந்தார். ஜோசியம் பார்க்கும்போது ஃபோனை தனது அருகில் வைத்ததை நினைவுக்கூர்ந்த பிம், மீண்டும் அங்கு சென்று ஜோசியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

    அதற்கு, தனது வார்த்தைகள் பலித்ததாக உடோம்சாப் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த பிம் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து ஜோசியரின் பையைச் சோதனையிட்டபோது, முகக்கவசம் வைக்கும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐபோனை மீட்டனர். விசாரணையில் பணத்திற்காக இவ்வாறு செய்ததாக உடோம்சாப் முயாங்கேவ் தெரிவித்துள்ளார்.

    தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது. அங்கு இது முக்கிய தொழிலாகவே, குறிப்பாக லாபகரமானதாக, முதலீடுகள் எல்லாம் போடப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. 

    • மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தெஹ்ரான்:

    ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள், வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

    போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

    ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே, மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

    இந்நிலையில், இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன்களின் பாதுகாப்புக்கு, ஈரான் அரசு என்ன வகையான உத்தரவாதம் வழங்க முடியும் என ஈரானிய தூதர் முகமது பதாலியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த முகமது பதாலி, ஈரானில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்திய குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்தார்.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் 18 நாளில் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

    இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    நேற்று ஜெஸ்ஸோர் மாவட்டம் ஆருவா கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாபை (35) மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். ஷிவ்பூர் உப மாவட்டம் நர்சிங்கடி நகரைச் சேர்ந்தவர் சரத் சக்ரவர்த்தி மணி (40). இவர் சார் சிந்தூர் பஜாரில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு கடையில் இருந்த அவரை மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த சரத் சக்ரவர்த்தியை அப்பகுதி மக்கள் மீட்டுச்சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    சரத் சக்ரவர்த்தி மணி தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு, சில ஆண்டுக்கு முன் வங்கதேசத்திற்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்கதேசத்தில் கடந்த 18 நாட்களில் இந்துக்கள் கொல்லப்பட்ட 6-வது சம்பவம் இதுவாகும். இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது கவலை அளிக்கிறது.
    • தேர்தல் ஆணையம், சட்ட அமைப்புகள் முற்றிலும் நடுநிலையோடு தங்களுடைய பணியை செய்ய வேண்டும்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 12-ந்தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த கலிதா ஜியாவின் பி.என்.பி. கட்சி நாடு முழுவதும் முன்னணி வகித்து வருகிறது. அடுத்த அரசை இந்த கட்சிதான் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி 2001-2006 ஆட்சிக்காலத்தில் பி.என்.பி.யுடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருந்தது. தற்போது இந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து, முக்கிய எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.

    கட்சியின் தலைவர் டாக்டர் ஷபிகுர் ரகுமான் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குற்றம்சாட்டு வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஷபிகுர் ரகுமான் "நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது கவலை அளிக்கிறது. நியாயமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தேர்தல் ஆணையம், சட்ட அமைப்புகள் முற்றிலும் நடுநிலையோடு தங்களுடைய பணியை செய்ய வேண்டும். அரசு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற சட்டம்- ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    • அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வார இறுதி விடுமுறைக்காகச் சின்சினாட்டி வந்திருந்தனர். சின்சினாட்டியின் ஓஹியோ பகுதியில் உள்ள வான்ஸின் வீட்டினருகே நேற்று நள்ளிரவு திடீரென சத்தம் கேட்டது.

    அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் உடனே சென்று பார்த்தனர். அப்போது வில்லியம் டிஃபோர் என்பவர் கையில் வைத்திருந்த சுத்தியலால் வீட்டின் ஜன்னல்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கினார்.

    வீட்டின் 4 ஜன்னல் கண்ணாடிகள், அங்கிருந்த அதிகாரிகளின் வாகனம் ஒன்றையும் அவர் சேதப்படுத்தினார். இதையடுத்து அவரைச் சுற்றி வளைத்து அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

    ×