என் மலர்
உலகம்
- கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.
- புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் "சற்று பலவீனமாக" இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] நிருபர்கள் குழுவுடன் வருடாந்திர ஊடக சந்திப்பில் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.
நாங்கள் முன்பு எதிர்பார்த்ததை விட அமெரிக்கா சற்று சிறப்பாக செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சற்று ஸ்தம்பித்துள்ளது, இந்தியா கொஞ்சம் பலவீனமாக உள்ளது. பிரேசில் உயா் பணவீக்க பாதிப்பை சந்தித்து வருகிறது. சீனா, பண வீக்கத்துக்கு எதிரான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பொருள்களின் விலை குறைந்து வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், உள்நாட்டு தேவை அதிகரித்து சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு மிகவும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருக்கும். குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அது இருக்கும்.
உலகளாவிய அளவில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அளவு மற்றும் பங்கைக் கருத்தில் கொண்டு புதிதாக அமைய உள்ள புதிய அரசின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.

குறைந்த வருவாய் நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில், புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி, நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, ஆசிய பிராந்தியத்தில் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்கும் டோனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது வரி விதிப்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். டிரம்ப் புதிய அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 12-ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார் என்றும், அதிபர் ஜோ பைடன் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளார் என தெரிவித்து இருந்தது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை போராடி அணைக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அதிபரின் இத்தாலி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
- சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன.
- இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ள சில்வர் நோட்டிஸ் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும்
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு. பிறநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது. சர்வதேச குற்றச்செயல்களை துப்புத் துலக்குவது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் அமைந்துள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில், பதுக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இன்டர்போல் அமைப்பு 'சில்வர்' நோட்டீஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாபியா கும்பலை சேர்ந்த ஒருவர் சொத்து விவரங்களை கேட்டு இத்தாலி நாட்டிற்கு முதல் சில்வர் நோட்டிஸை இன்டர்போல் வழங்கியுள்ளது.
சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன. இன்டர்போல் அறிமுகப்படுத்தியுள்ள சில்வர் நோட்டிஸ் இந்தியாவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் என்று கூறப்படுகிறது.
- காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
- காட்டுத்தீயை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியது.
மேலும் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கையாக 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 10,000 வணிக கட்டிடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்சில் நடிகர்-நடிகைகளின் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன.
இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீயை அணைப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து தீயணைப்புத்துறை தலைவர் ஆடம் வான் கெர்பன் கூறும்போது, சில தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். தீயணைப்பு வீரர்களை நாம் மேம்படுத்த வேண்டும், மாற்றியமைக்க வேண்டும் மற்றும் சமாளிக்க வேண்டும் என்றார். இதற்கிடையே கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் கூறும்போது, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீயை பயன்படுத்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஈடன் பகுதிகளில் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 இடங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
- பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
- கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன்.
ஒட்டாவா:
கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மை காலமாக சொந்த கட்சியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது.
இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். எனினும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரதமராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அந்த வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை வருகிற மார்ச் 9-ந் தேதி நடத்த ஆளும் லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார்.
இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரா ஆர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கனடா தனது தலைவிதியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன். இதை சாத்தியமாக்கக ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் சந்திரா ஆர்யா மற்றும் முன்னாள் எம்.பி பிராங்க் பெய்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை முறையாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். டிரம்ப் அதிபராக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் 20-ந்தேதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். அதற்கு முன்பாக வருகிற 15-ந்தேதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றுகிறார்.
அப்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜோ பைடன் தான் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது மகன் உள்பட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கிடையே மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜோ பைடன் கூறும்போது, எதற்கும் என்னை மன்னித்துக் கொள்வது பற்றி நான் யோசிக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
கமலா ஹாரிஸ் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர். ஆனால் அது அவரே எடுக்க வேண்டிய முடிவாக இருக்கும் என்றார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன்தான் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்புடனான நேரடி விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் திணறினார். இதனால் வயோதிகம் காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
துபாய்:
துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.இசட்- சாட் என்ற முகம்மது பின் ஜாயித் செயற்கைக்கோளின் இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது. இதில் அந்த செயற்கைக்கோளுடன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குட்டி செயற்கைக்கோளும் இந்த மாதம் விண்ணில் பாய்கிறது.
இது குறித்து துபாய் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயரில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் எம்.பி.இசட் சாட் அதாவது முகம்மது பின் ஜாயித் என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் முழுவதுமாக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் மொத்தம் 800 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எம்.பி.இசட் சாட் பிரதேச அளவில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிசக்தி வாய்ந்த செயற்கைக்கோளாகும். அதேபோல உயர்தரத்திலான துல்லிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இந்த செயற்கைக்கோள் சேகரிக்க உள்ளது. குறிப்பாக மாறி வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு, வேளாண்மை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.
அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மடங்கு அதிக துல்லியத்தில் புகைப்படங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்ப உள்ளது. தரவிறக்கமானது மும்மடங்கு வேகமாக இருக்கும்.
இதில், 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 நட்சத்திரங்கள், அரபி வழிவெழுத்தில் எழுதப்பட்ட செயற்கைக்கோளின் பெயர், அமீரக தேசிய கொடி மற்றும் அமீரக பிரதேசத்தை காட்டும் வரைபடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக இம்மாதத்திற்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோளுடன் அமீரகத்தில் உள்ள விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்ப கல்லூரிகளின் ஒத்துழைப்பில் ஹெச்.சி.டி சாட் -1 என்ற மினி நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி மாணவர்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்படும் பேலோட் எனப்படும் கருவிகள், உபகரணங்களை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கி உள்ளனர்.
இந்த குட்டி செயற்கைக்கோளும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.இசட் சாட் உடன் சேர்த்து 2-வது செயற்கைக்கோளாக பால்கன் 9 ராக்கெட்டில் இது அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படும் நிகழ்வை காண https://mbrsc.ae/live/ என்ற இணையதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராவல்பிண்டி நகரின் பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி ஜாகிதா டாக்சியை ஓட்டிச் சென்றார்.
- வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரைச் சேர்ந்தவர் ஜாகிதா காஸ்மி, 67 வயதான இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவர் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்சி ஓட்டினார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்தநிலையில் ராவல்பிண்டி நகரின் பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி ஜாகிதா டாக்சியை ஓட்டிச் சென்றார். இதனை அவரது மகன் மஜித் வீடியோவாக எடுத்து `தாய்தான் ஒருவரது முதல் மற்றும் என்றென்றும் சிறந்த தோழி' என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.
- ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் டிரம்ப் உடனான நெருக்கம் தொடர்பாக பேட்டி அளித்தார்.
- தொடர்பு குறித்து தொடர்ந்து செய்தி வெளியாகாமல் இருக்க பணம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
அமெரிக்க அதிபராக வரும் 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், ஸ்டாம்மி டேனியல்ஸ் மேலும் தகவல் ஏதும் கூறாமல் இருக்க பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்திற்கு முறைகேடாக பொய் கணக்கு எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ந்தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜனவரி 10-ந்தேதி (உள்ளூர் நேரப்படி) தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டிரம்ப்-ஐ நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு சிறை தண்டனையோ அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது. முன்னதாக சிறை தண்டனை வழங்கப்படாது என நீதிபதி தெரிவித்திருந்தார். தற்போது அபராதமும் விதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதம் விதிக்கப்படாத நிலையிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகும் முதல் நபர் டொனால்டு டிரம்ப் ஆவார்.
இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி நியூயார்க் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் முறையீடு செய்திருந்தார். இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
- டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.
- டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார்.
அவர் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்க நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்துள்ளது.
- விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மலிண்டி மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் பறந்துகொண்டிருந்தது அந்த விமானத்தில் 3 பேர் பயணித்தனர்.
மலிண்டி விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலிண்டி-மாம்பசா நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விமானத்தில் பயணித்த உள்பட விமானி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
- அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
கனடா அரசுக்கு சொந்தமான விமானம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.






