என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை.
    • முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க.

    சென்னை :

    பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக முதலமைச்சர் அண்ண ஸ்டாலின் அவர்கள் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள் ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை.

    திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள். முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம்.

    முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பிரச்சனைகளை பேச சொல்லுங்க. பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்... தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க... இல்லாத ஒரு பிரச்சனையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில் தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார். 



    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது.
    • இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார்.

    சென்னை:

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள்! என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.
    • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

    அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • ஒரு போட்டியில்கூட தோல்வி இன்றி கோப்பையை கைப்பற்றியது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தன்வசப்படுத்தியது. இதுவரை எந்த அணியும் மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியை வெல்லாத நிலையில், இந்திய ரசிகர்கள் அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றிக் கண்ட இந்திய அணியினரும் சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியை களத்தில் கொண்டாடித் தீர்த்தனர். கோப்பையுடன் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வீரர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் கொண்டாடினர்.

    அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் களத்தில் ஸ்டம்ப்களை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினர். இருவரும் ஸ்டம்ப்களை வைத்துக் கொண்டு தாண்டியா போன்று நடனம் ஆட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    மேலும், ரோகித் - விராட் நடன வீடியோ சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் தாண்டியா ஆடுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் அவற்றில் வாழ்த்து செய்திகளை கமெண்ட்களாக பதிவிட்டனர். 



    • தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
    • சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்.

    லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா, அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எனது சிம்பொனி இசையை மூச்சுவிட மறந்து ரசிகர்கள் ரசித்தனர்.

    ரசிகர்களின் வாழ்த்தே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிந்தது. தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன். 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்.
    • லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர்.

    ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.



    இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும்.
    • வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கே அப்பல நாயுடு தனது தொகுதியில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கில் ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி வரவு வைக்கப்படும் என்றும் மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும் என்று எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்துள்ளார்.

    மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் விவியநகரம் தொகுதி எம்.பி.யான அப்பல நாயுடு இத்தகைய திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் பெண் குழந்தை தனது திருமண வயதை எட்டும் போது, வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய எம்.பி. அப்பல நாயுடு, "மூன்றாவது குழந்தை ஆண் என்றால் பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியும், பெண் குழந்தை என்றால், 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும். இந்திய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    என் தாயார், சகோதரிகள், மனைவி மற்றும் மகள்கள் என தினந்தோரும் நான் சந்திக்கும் பெண்களால் ஊக்குவிக்கப்படு தான் இந்த முடிவுக்கு வந்ததாக எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்தார். மக்கள் தொகையை அதிகப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து அவர் மகளிர் தினத்தை ஒட்டி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றதாழ்வுகளை குறிப்பிட்டு, பெண்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது தற்போது கட்டாயமாகி உள்ளது என்று தெரிவித்தார்.

    • மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது.
    • இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ள திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், மீனவர்கள் பிரச்சனையை விஜய் கையிலெடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு திருமாவளவன், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது என்று கூறினார்.

    முன்னதாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திருமாவளவன் பேசுகையில், தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். 

    • ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியை கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.
    • கனடா பிரதமரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் மார்க் கார்னி முன்னிலை.

    கனடாவின் புதிய பிரதமர் ஆகிறார் மார்க் கார்னி. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

    லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க இருக்கிறார்.

    2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக மார்க் கார்னி பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    • இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம்.
    • ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-26 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி காலை 10.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷணுவாம்சம் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவ திருப்பதி திருவரகுணமங்கை என்கிற நத்தத்தல் மூலவர் விஜயாசன பெருமாள் மற்றும் தாயார்கள் வரகுண வல்லித்தாயார், ஸ்ரீ வரகுணமங்கைக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வரவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நட்பு

    கன்னி-களிப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பாராட்டு

    மகரம்-பொறுப்பு

    கும்பம்-நிறைவு

    மீனம்-முயற்சி

    • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • இந்த நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

    அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. அதன்படி இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்பு நடவடிக்கை, பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    ×