என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
- சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்.
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா, அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எனது சிம்பொனி இசையை மூச்சுவிட மறந்து ரசிகர்கள் ரசித்தனர்.
ரசிகர்களின் வாழ்த்தே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிந்தது. தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன். 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்.
- லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர்.
ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
- பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும்.
- வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கே அப்பல நாயுடு தனது தொகுதியில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கில் ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி வரவு வைக்கப்படும் என்றும் மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும் என்று எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் விவியநகரம் தொகுதி எம்.பி.யான அப்பல நாயுடு இத்தகைய திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் பெண் குழந்தை தனது திருமண வயதை எட்டும் போது, வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எம்.பி. அப்பல நாயுடு, "மூன்றாவது குழந்தை ஆண் என்றால் பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியும், பெண் குழந்தை என்றால், 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும். இந்திய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
என் தாயார், சகோதரிகள், மனைவி மற்றும் மகள்கள் என தினந்தோரும் நான் சந்திக்கும் பெண்களால் ஊக்குவிக்கப்படு தான் இந்த முடிவுக்கு வந்ததாக எம்.பி. அப்பல நாயுடு தெரிவித்தார். மக்கள் தொகையை அதிகப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து அவர் மகளிர் தினத்தை ஒட்டி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றதாழ்வுகளை குறிப்பிட்டு, பெண்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது தற்போது கட்டாயமாகி உள்ளது என்று தெரிவித்தார்.
- மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது.
- இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
சென்னை:
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ள திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், மீனவர்கள் பிரச்சனையை விஜய் கையிலெடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருமாவளவன், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது என்று கூறினார்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திருமாவளவன் பேசுகையில், தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
- ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியை கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.
- கனடா பிரதமரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் மார்க் கார்னி முன்னிலை.
கனடாவின் புதிய பிரதமர் ஆகிறார் மார்க் கார்னி. கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க இருக்கிறார்.
2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக மார்க் கார்னி பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.
- இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம்.
- ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-26 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 10.43 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு ஆயில்யம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷணுவாம்சம் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவ திருப்பதி திருவரகுணமங்கை என்கிற நத்தத்தல் மூலவர் விஜயாசன பெருமாள் மற்றும் தாயார்கள் வரகுண வல்லித்தாயார், ஸ்ரீ வரகுணமங்கைக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-வரவு
கடகம்-வெற்றி
சிம்மம்-நட்பு
கன்னி-களிப்பு
துலாம்- செலவு
விருச்சிகம்-நன்மை
தனுசு- பாராட்டு
மகரம்-பொறுப்பு
கும்பம்-நிறைவு
மீனம்-முயற்சி
- நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- இந்த நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.
அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. அதன்படி இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்பு நடவடிக்கை, பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
- போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை கூறியது.
- போப் பிரான்சிஸ் இன்றி வாடிகன் நகரில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த மூன்று வாரமாக சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.
- இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் மிக உயரிய பாராட்டுகளை பெற தகுதி பெற்றவர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீரர்களின் உருவப்படங்களுக்க்கு மாலை அணிவித்து கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
- கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
- இந்திய அணி சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.
எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.
தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர்.
நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விசயம்.
எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
- வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்திய, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உலா வந்தார்.
- அந்த நபரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளராக இருந்த டொனால்டு டிரம்ப்பை கொல்ல முயற்சி நடந்தது. மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தேர்தலில் வென்ற டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றி வந்துள்ளார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தாக்க திட்டமிட்டு அந்த நபர் அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






