என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
- கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.
ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.
17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
- இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்மையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மிக வைரலான கோல்டன் ஸ்பாரோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் சிறப்பு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
- போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது, விரிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என தெரிகிறது.
இதற்கிடையே, காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல- சட்டசபையில் அமைச்சர் பேச்சு.
- நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம்" என்று கூறினார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா "நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்" என என பதில் அளித்தார்.
ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதைத்தான் செய்தோம். தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இன்றைய சட்டசபை நிகழ்வில் பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் "எனக்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்களில் சைகளை பார்த்துதான் சபாநாயகர் செயல்படுகிறார்.
நடுநிலையாக இல்லை. அவர் ஆசிரியராக இருந்தவர். நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உபத்ரவம் கூட கொடுக்காமல் இருக்கலாம். அதை செய்யல.
இன்னும் என்னை தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகள் ஒரு திட்டத்தை சொன்னால் நேரில் சென்று பார்க்கிறார்கள். அதைபோன்று எங்களது மாவட்ட ஆட்சியாளர்கள், முதன்மை பொறியாளர் எங்களை அழைத்துச் சென்றார்கள். மக்களின் பிரச்சனைக்காக நான் சென்ற கலந்து இருக்கிறேன். அதுக்கு என்னங்க... இன்னும் ஓட்டிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்றார்.
- தொடர் தோல்வியையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
- இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பத்தை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்றாக வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று கூறியது.
இதனைப் போலவே தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துபாய் பயணம் செய்த இந்திய அணி, வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி அந்த விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என சில முக்கிய விஷயங்களை கூறினார்.
அதில், எந்த வீரையாவது உங்களின் குடும்பம் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள். போட்டி முடிந்த பிறகு நான் என் ரூமுக்கு சென்ற தனியா சோகமாய் இருக்க விரும்பல. நான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் சுராஜ், அருண்குமார், எஸ்.ஜே சூர்யா, விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் கலந்துக் கொண்டனர்.
அதில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமுடு பல விஷயங்களை அவரது பாணியில் நகைச்சுவையாக பேசினார். அந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியது " விக்ரம் சார் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். நான் முதல் முதல்ல ஒரு நடிகரோடு புகைப்படம் எடுத்தது விக்ரம் சாரோட தான். மேலும் அருண்குமார் வீர தீர சூரன் திரைப்பட கதையை கூறும் போது அவருக்கு தமிழ் தெரியாததால் அருண் கூறியது எதுவுமே புரியாமல் கதை என்னவென்று தெரியாமலே படத்திற்கு ஒகே சொன்னேன். படப்பிடிப்பில் நடந்த நகைச்சுவை விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்"
- நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது.
- பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய வீரரான விராட் கோலி தொடர்ந்து 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றால் வீரர்கள் குழுவாக விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பி கோப்பையை வெல்ல முடியாது.
இந்த விஷயத்தில் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது.
சென்னை அணியை பார்த்தால் உள்ளூர் வீரர்கள் வலிமையாக உள்ளனர். மிதமாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் மிகவும் முக்கியம்.
என்று சதாப் ஜகாதி கூறினார்.
சதாப் ஜகாத் பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
- பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்றபோது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
அதேபோன்று ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.
இவ்வாறு சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
- சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- 'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் வரிகளில் ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடலான கல்லூரும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
'வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வேல் டெக் பல்கழைகளத்தில் நடைப்பெற இருக்கிறது.
இந்நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது " வீர தீர சூரன் திரைப்படம் ஒரு Raw மிகவும் இண்டன்சாக இருக்கும். எல்லா கதாப்பாத்திரங்களும் சிறு வில்லத்தன்மை உடையவர்கள் தான். ஆனால் அவர்களுக்கென ஒரு நியாயம் இருக்கும். இயக்குனர் அருண் குமார் மிகப்பெரிய ஹாலிவுட் இயக்குனரான மார்டின் ஸ்கார்சி- உடைய ரசிகன். அதனால் இப்படமும் மார்டின் ஸ்கார்சி திரைப்படம் கிராமப்புற பின்னணியில் எடுத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்தப் படம் " என கூறியுள்ளார்.
- இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
- பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.
நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
- மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
- தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.
இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
- இளையராஜா சிம்பொனி இசைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் பிரதமர்.
- பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாதது என தெரிவித்தார் இளையராஜா.
புதுடெல்லி:
இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா இன்று சந்தித்தார். அவரிடம் சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.
இந்நிலையில், இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன் வாலியன்ட் என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசுகையில் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.






