என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
    • அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

     இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

     அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.   

    • விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, ​​கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    • 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் தள்ளி பூட்டினர்.

    கர்நாடகாவில் புலியைப் பிடிக்கத் தவறிய வனத்துறை அதிகாரிகளை விவசாயிகள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குண்டல்பேட்டை அருகே பொம்மலப்புரா கிராமம் உள்ளது. ஷமீக் காலமாக கிராமத்தினரின் கால்நடைகளை அங்கு திரியும் புலி, அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்துள்ளது.

    புலியைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும், வனத்துறையினர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

    புலியை பிடிப்பதாக பெயருக்கு ஒரு கூண்டு மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் நேற்று காலை, விவசாய நிலத்தில் புலி மீண்டும் தோன்றியபோது, கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால், வனத்துறையினர் ஆடி அசைந்து தாமதமாக வருவதற்குள் புலி அங்கிருந்து ஓடிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புலியைப் பிடிக்க வந்த 10 வனத்துறை அதிகாரிகளை அந்த புலியை பிடிக்க வைத்திருந்த அதே கூண்டில் வைத்து பூட்டினர்.

    சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த வனத்துறை ஏசிஎப் அதிகாரிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி பூட்டப்பட்ட அதிகாரிகளை விடுவித்தனர்.

    மேலும் அந்த புலியை பிடிக்கப்படும் வரை தலைமையகத்திற்குத் திரும்ப கூடாது என அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

    • ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும்

    கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.

    காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் அங்கிருந்தபடி ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டிக்கிறது.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது. கத்தாரின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது.

    இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். இது கத்தாரின் குடிமக்கள்  பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    பிராந்தியத்தின் பாதுகாப்பை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.  இந்த தாக்குதலுக்கு ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை ஆபத்தான முறையில் மீறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்துள்ளார்.

    அவ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் ஆபத்தானது. இந்தக் குற்றச் செயல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். கத்தாரின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.  

    • பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
    • அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்

    அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.

    அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   

    • நடிகர் தர்ஷன் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.
    • ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.

    தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

    இந்நிலையில் சிறைச்சாலையில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இனிமேல் வாழ முடியாது என்றும், தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறும் நீதிபதியிடம் தர்ஷன் கெஞ்சியுள்ளார்.

    நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின்போது, சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம் பேசிய தர்ஷன், "நான் பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எங்கும் பூஞ்சைகள் சூழ்ந்து  பயமுறுத்துகிறது. நான் அணிந்திருக்கும் ஆடைகள் கூட துர்நாற்றம் வீசுகிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில் என்னால் வாழ முடியாது. குறைந்தபட்சம் எனக்கு விஷமாவது கொடுங்கள். இங்கு வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது" என்று தெரிவித்தார்.

    ஆனால் அதற்கு சாத்தியமில்லை என நீதிபதி பதிலளித்தார்.  

    • துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது
    • எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருகின்றன.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் துணை ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஆளும் கட்சியின் வெற்றி எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் செயல்திறன் மறுக்க முடியாதது.

    எங்கள் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 ஆம் ஆண்டில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை பெற்றிருந்தது.

    இதன் அடிப்படையில் பாஜகவின் வெற்றி வெறும் எண்ணிக்கை அளவிலானது மட்டுமே ஆகும். உண்மையில் இந்த வெற்றி பாஜகவின் தார்மீக மற்றும் அரசியல் தோல்வியாகும். எங்களின் சித்தாந்தப் போர் நிற்காமல் தொடர்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது பாஜகவின் கொள்கைகளுக்கு சவால் விடுவதாகக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் இப்போது முன்பை விட வலுவாக உருவாகி வருவதாகவும், வரும் காலங்களில் இது பாஜகவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என்றும் தெரிவித்தார். 

    • அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
    • , முன்னாள் நேபாள பிரதமர் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதற்கிடையே நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் அவரை தெருக்களில் துரத்திச் சென்று தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

    முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவி, தற்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா தியூபா ஆகியோரையும் போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்கினர். தாக்குதலில், முன்னாள் நேபாள பிரதமர் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்த நிகழ்வும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.  

    • சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சுதர்சன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் எம்.பி.க்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நமது மாபெரும் குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையுடன் இந்த முடிவை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

    முடிவு எனக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், நாம் கூட்டாக முன்னேறும் பெரிய நோக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. சித்தாந்தப் போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடர்கிறது.

    என்னை வேட்பாளராக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல, உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு உள்ளிட்டவற்றாலும் பலப்படுத்தப்படுகிறது.

    ஒரு குடிமகனாக, நம்மை ஒன்றிணைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் இலட்சியங்களை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    நமது அரசியலமைப்பு நமது தேசிய வாழ்க்கையின் வழிகாட்டும் ஒளியாக தொடர்ந்து இருக்கட்டும்.

    துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பதவிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகள் உள்ளன.
    • இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

    வரும் 28-ந்தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    நேற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.

    இதன் பின் பேட்டிங் இறங்கிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. இதனால் முதல் நாள் போட்டியில் சீனாவின் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.

    வரும் நாட்களில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    முன்னதாக இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. 

    • நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
    • இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நேபாளத்தில் அமைதி திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.

    நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதை உடைக்கிறது. பல இளைஞர்களின் உயிரிழப்புகளால் என் இதயம் மிகவும் வருத்தமடைந்துள்ளது.

    நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிகவும் முக்கியம். அமைதியையும் ஒழுங்கையும் கைக்கொள்ளுமாறு நேபாளத்தின் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.   

    • சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
    • உறுதியுடன் போராடிய திரு. சுதர்ஷன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன்.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஏற்ப அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

    இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வைகளையும், நமது கொள்கைகளையும் பிரதிபலித்து உறுதியுடன் போராடிய திரு. சுதர்ஷன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்- ஜனாதிபதி
    • நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார்- பிரதமர்

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

    இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் "இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். பொது வாழ்வில் உங்கள் பல தசாப்த கால அனுபவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். வெற்றிகரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பதவிக் காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் "2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே "தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற மரபுகளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவார் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடத்தை உறுதி செய்வார் என்றும் நாங்கள் நம்புகிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

    உங்களுடைய பரந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டால், துணைத் தலைவர் பதவி நிச்சயமாக அதிக மரியாதையையும், பெருமையையும் பெறும் என முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ×