என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம்.
- காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுகிறது. சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி என்று பல்வேறு உபாதைகளுடன் சிரமப்படுகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மருந்து மாத்திரைகள் எடுத்து நான்கைந்து நாட் களில் காய்ச்சல் குணமானாலும் இருமல், உடல் சோர்வு இரண்டு, மூன்று வாரங்களுக்கு நீடிக்கிறது.
சென்னையில் வைரஸ் காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் இருக்கிறது. வைரஸ்கள் பரவலுக்கு தண்ணீர் மாசுபாடே காரணம். எனவே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகவள்ளி கூறும்போது, ஒரே பள்ளியில் படிக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்த 13 மாணவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதித்ததில் டெங்கு, மலேரியா அறிகுறிகள் இல்லை என்றார்.
டாக்டர்கள் கூறும்போது, இன்புளூயன்சா காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்றார்கள்.
மேலும் அவர்கள் கூறும் போது, முக கவசம் அணிவது, கூட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்கள். காய்ச்சலுக்கு பிந்தைய பாதிப்புகள் விரைவில் குணமாக தினமும் நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். புரத சத்து உணவுகளையும், கீரை, காய்கறிகள் ஆகியவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்றார்கள்.
வறட்டு இருமல், தலை வலி, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஒரு வாரத்துக்கு மேல் நீடிப்பதாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கண்ணம்மா இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதன் ப்ரோமோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
தனுஷின் இட்லி கடை படத்தில் அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
- மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சென்னை ஐகோர்ட்டு, சுங்க இலாகா அலுவலகம், மும்பை ஐகோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே செயல்படும் மத்திய சுங்க இலாகா தலைமை அலுவலகம், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதேபோல், மும்பை ஐகோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் ஐகோர்ட்டு வளாகத்தை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரியதாக எதுவும் கிடைக்கவில்லை.
மும்பை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது இது இரண்டாவது முறை. சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) அன்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண 5-ம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வருகிற 4.10.2025 (சனிக்கிழமை) நாமக்கல், பரமத்திவேலூரிலும், 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படக்குழு நேற்று கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. தீபிகா போட்ட கண்டிஷன்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அப்படி தீபிக என்ன கண்டிஷன்களை முன்வைத்தார் பார்க்கலாம் வாங்க.
- கடந்த பாகத்தை விட இந்த பாகத்தில் 25 சதவீத ஊதிய உயர்வு
- 7 மணி நேர வேலை நேரம் அதற்கு மேல் நடிக்க மாட்டேன்.
- அவரது குழு ஆட்களான 25 நபருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் இடம் மற்றும் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களுக்கான ஊதியம் மற்றும் உணவு கொடுக்க வேண்டும்.
- நீண்ட நேரம் படப்பிடிப்பில் ஈடுப்பட முடியாது.
- படத்தின் லாபத்திலிருந்து பங்கு .
இதனால் தயாரிப்பு நிறுவனம் தீபிகாவை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதேப்போல் பிரபாஸின் ஸ்பிர்ட் படத்திலிருந்து நீக்கப்பட்டார். பிரபாச் நடிக்கும் இரண்டாவது படத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
சிலர் படத்தின் கதையை மாற்றிவிட்டார்கள், தீபிகாவை விட கமலுக்கு அடுத்த பாகத்தில் முக்கியத்துவம் இருப்பதால் அவர் விலகியுள்ளார் எனவும் கூறிவருகின்றனர்.
- தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும்.
- கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று 5 புதிய சொகுசு தாழ்தளப் பஸ்கள் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் ஏறி, இறங்க சிரமப்படுவதை உணர்ந்து தாழ்தள பஸ்கள் சேவையை அதிகப்படுத்தி உள்ளார். இந்த தாழ்தள பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக, ஏறவும் இறங்கவும் முடியும். மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி முதியவர்கள், பெண்களுக்கும் இந்த பஸ்கள் எளிய முறையில் இருக்கும். அனைத்து விதமான சிறப்பு அம்சங்களும் இந்த பஸ்கள் கொண்டது.
கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம். இதனைத் தேர்தல் ஆணையம் நன்கு அறியும். எனவே விடுப்பு காலங்களில் தான் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.
எம் ஆதார் (mAadhaar) என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு ஆகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆதார் சேவைகளை அணுகுவதற்கும், டிஜிட்டல் ஆதார் அட்டையை மென்மையான நகலாக (soft copy) எடுத்துச் செல்வதற்கும், பல ஆதார் சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவுகிறது.
எம் ஆதார் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
டிஜிட்டல் ஆதார்: உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆதார் தகவல் மேலாண்மை: உங்கள் ஆதார் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.
ஆன்லைன் சேவைகள்: ஆதாரைப் புதுப்பித்தல், முகவரியை மாற்றுதல் போன்ற பல ஆன்லைன் சேவைகளுக்கான அணுகலை இது வழங்குகிறது.
QR குறியீடு: உங்கள் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய இது உதவுகிறது.
பன்மொழி ஆதரவு: இந்த பயன்பாடு பல மொழிகளில் கிடைக்கிறது.
ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்:
Google Play Store அல்லது Apple App Store-ல் இருந்து mAadhaar ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.
பதிவு செய்தபிறகு, டிஜிட்டல் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம், உங்கள் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் ஆன்லைன் சேவைகளை அணுகலாம்.
ஆதார் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா இனி கவலையில்லை!
பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய ஆதார் (mAadhar) சேவைக்கான மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஆதார் கார்டு சேவைக்கு ஆதார் தொடர்பான அலுவலகங்களுக்கு செல்லாமல் Mobile app மூலமாக செய்துகொள்ளலாம்.
இ-ஆதார் செயலி (mAadhaar App) என்பது UIDAI (Unique Identification Authority of India) வெளியிட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு. இதன் மூலம் ஆதார் தொடர்பான பல சேவைகளை எளிதாக தங்கள் மொபைல் போன்களில் பெறலாம்.
எம் ஆதார் (mAadhaar App) – டவுன்லோட் செய்து எப்படி பயன்படுத்துவது & அதன் பல்வேறு அம்சங்கள்:
செயலி பதிவிறக்கம் (App Download)
* Android: Google Play Store-ல் "mAadhaar" என தேடவும் → Install செய்யவும்.
* iPhone: App Store-ல் "mAadhaar" என தேடவும் → Get செய்யவும்.
மொழி தேர்வு
* செயலியை திறந்தவுடன், உங்களுக்கு வசதியான மொழியை (தமிழ் உள்பட) தேர்வு செய்யவும்.
* பிறகு "Continue" அழுத்தவும்.
OTP மூலம் பதிவு
* உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கேட்கப்படும்.
* அந்த எண்ணை கொடுக்கவும் → SMS-ல் OTP வரும் → அதை உள்ளிடவும்.
உங்கள் ஆதார் இணைப்பு
* "Add Aadhaar" என்பதைத் தேர்வு செய்யவும்.
* 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க VID (Virtual ID) கொடுக்கவும்.
* மீண்டும் OTP வரும் → OTP கொடுத்து உறுதிப்படுத்தவும்.
* இப்போது உங்கள் டிஜிட்டல் ஆதார் கார்டு செயலியில் சேமிக்கப்படும்.
முக்கிய சேவைகள் (App-ல் கிடைக்கும்)
1. ஆதார் Download – PDF/digital copy எப்போதும் பயன்படுத்தலாம்.
2. QR Code – வேகமாக ஆதார் தகவல் பகிரலாம்.
3. Update Address – முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
4. Lock/Unlock Aadhaar – தேவையானபோது ஆதாரை பூட்டலாம், மீண்டும் திறக்கலாம்.
5. Offline e-KYC – வங்கி / SIM / பிற சேவைகளுக்கு KYC பகிரலாம்.
6. Generate TOTP – OTP க்கு மாற்றாக செயலியில் தற்காலிக password கிடைக்கும்.
பாதுகாப்பு அம்சங்கள்
* ஆதார் லாக்/அன்லாக் → யாரும் உங்கள் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்த முடியாது.
* Biometric Lock → உங்கள் கைரேகை/கண்கள் மூலம் மட்டுமே Authentication செய்யலாம்.
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்
"நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.
கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக்காலப் பெருவெள்ளத்தால் ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
+2
- நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
- வீடியோக்கள் சமூகவ லைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
கூடுதலாக, அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.
இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விடிய, விடிய நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். டெல்லி மற்றும் மும்பை ஆப்பிள் நிறுவனங்கள் முன்பு பல அடி தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது.
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
கூடுதலாக, அவை பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் புனேவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.
இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு காலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று முதல் விற்பனைக்கு வந்த சாதனங்கள்:
ஐபோன் 17 சீரிஸ்
ஐபோன் ஏர்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3
ஆப்பிள் வாட்ச் SE 3
ஐபோன் 17, ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) இந்திய விலை
1. ஐபோன் 17 சீரிஸ், ஐபோன் ஏர்:
இந்தியாவில் ஐபோன் 17 இன் விலை 256 ஜிபி மெமரி கொண்ட பேஸ் மாடலின் விலை ரூ. 82,900 முதல் தொடங்குகிறது. ஐபோன் ஏர் அதே மெமரி வேரியண்டின் விலை ரூ. 1,19,900 இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,49,900 விலையில் தொடங்குகின்றன.
2. ஆப்பிள் வாட்ச்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மாடலின் 42 மில்லிமீட்டர் அலுமினியம் ஜி.பி.எஸ். மாடலுக்கு ரூ. 46,900 என தொடங்குகிறது. ஜி.பி.எஸ். ஆதரவுடன் அலுமினிய கேஸ் கொண்ட வாட்ச் எஸ்.இ. 3 மாடலின 40 மில்லிமீட்டர் வேரியண்ட் ரூ. 25,990 விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 விலை ரூ. 89,900 ஆகும்.
3. ஏர்பாட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) விலை ரூ. 25,900.
இந்த சாதனங்களை அதிகாரப்பூர்வ ஆப்பிள் வலைத்தளம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 5,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், ஆப்பிள் தயாரிப்பின் முழு விலையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பாதவர்களுக்கு விலையில்லா EMI ஆப்ஷன்கள் உள்ளன.
- தி.மு.க. வட்டச் செயலாளர் செந்தில், லோடுமேன்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.
- லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், தி.மு.க. வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.
மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே.
உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.
- அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் உள்ள பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பழுதாகிவிட்டன.
இதனால் உணவு தரமாக தயாரிக்க முடியவில்லை. இதன் காரணமாக விற்பனை குறைந்தது.
இந்த நிலையில் அனைத்து அம்மா உணவகங்களையும் சீர்ப்படுத்த மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதையடுத்து புதிதாக பொருட்கள் வாங்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள்.
காலை, மதியம், இரவு என 3 வேளையும் சுவையான உணவு தயாரித்து வழங்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் அதிகளவில் உணவு அருந்துகிறார்கள்.
மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது உடனே விற்று தீர்ந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள் இரவில் சப்பாத்தி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. 30 உணவகங்களில் மட்டும் தான் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை வியாபாரம் நடக்கிறது. குறைந்த அளவில் விற்பனை நடந்தாலும் அதனை மூட வேண்டாம் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட விற்பனை இல்லை. ஆனாலும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். 3030 பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 ஷிப்டு அடிப்படையில் பணி செய்கின்றனர். தினக் கூலியாக அவர்களுக்கு ரூ.325 நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மாதத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






