என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
    X

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

    • கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) அன்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 29.9.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண 5-ம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 20.9.2025, 21.9.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 4.10.2025, 5.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    வருகிற 4.10.2025 (சனிக்கிழமை) நாமக்கல், பரமத்திவேலூரிலும், 5.10.2025 (ஞாயிறுக்கிழமை) நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×