என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று இருக்கும்
- திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "ஒவ்வொரு போதிலும் கிட்டத்தட்ட 350 குடும்பம்... 1000 - 15000 ஒட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று... ஆனால் தவெகவிற்கு என்று ஒரு வீடு கிடையாது. என்னது தவெகவிற்கு ஒரு வீடு கூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார். அதிமுகவில் தவெக ஆதாரவாளர் உள்ளார். எல்லா கட்சியின் வீட்டிலும் தவெக ஆதாரவாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரு குடும்பத்திற்கு 1 ஓட்டு என்றால் 2.25 கோடி. போன தேர்தலில் திமுக வாங்கியது 2 கோடி 9 லட்சம் வாக்குகள்... நாம் இப்போதே திமுகவை தாண்டி விட்டோம்" என்று தெரிவித்தார்.
- 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார்.
- திமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்திய நிலையில், புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்யும் இன்று தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.
கூட்டணி இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தலை தனியாக நின்று ஜெயிப்போம் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, நிர்வாகிகள் கட்சி மாற்றம் மறுபுறம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக, மற்ற மாற்றுக் கட்சிகளை நாடிவருகின்றனர். கட்சி தாவுதலுக்கு பல காரணங்களையும் முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தவெகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார், பின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது அந்த முகாமில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.
- பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
- 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியக் கலைஞர் நீலகிரி ஆர் கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், மிருதங்கக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் புதுச்சேரி சிலம்ப கலைஞர் கே.பழனிவேலு ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார்.
- தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இதற்காக முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டு மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர 100 ஏக்கரில் இருக்கைகள் அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. மீதமுள்ள 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு பூத்துக்கு 10 போ் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளில் இருந்து மொத்தம் 1¼ லட்சம் போ் சீருடையில் கலந்து கொள்ள உள்ளனா். மொத்தத்தில் ஏறத்தாழ 1½லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டுக்காக பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது. மேலும் மாநாட்டு திடலில் வாழை மரங்கள், கரும்புகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற உள்ளன. இதற்காக வாழை மரங்கள், கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வருகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஜனவரி 26-ந் தேதி முதல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்து உள்ளாா்.
மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல, மீண்டும் ஜனவரி 28-ந் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் நடைபெற உள்ள மஹல்லா மாநாட்டில் கலந்து கொள்கிறாா்.
இதையொட்டி ஜனவரி 28-ந் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. மாநாடு நடக்கும் பகுதியின் எதிர்புறத்தில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இங்குதான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு விமானத்தில் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக தஞ்சைக்கு வந்து மதியம் 1 மணிக்கு வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் மாலை 5 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வருகிறார். அதைத்தொடர்ந்து மாநாடு முடிந்து இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறார்.
- வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் பருவமழையின்போது முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து இன்று காலை நிலவரப்படி 46.62 அடியாக உள்ளது. 831 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 1869 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. 142 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3802 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. தேக்கடி 1.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:-
"அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை, எதிர் கால தமிழ்நாட்டை ஆளப் போகிற தமிழக வெற்றிக் கழக தலைவருடன் இணைந்து இந்த பணிகளை ஆற்றுகிற நல்ல வாய்ப்பை எனக்கு தந்து இருக்கிறார்கள். இங்கு எல்லோர் கையிலும் விசில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலை வைக்க முடியாத சூழல் ஏற்படும்.
அதை போலத்தான் பஸ்சில் பயணம் செய்கின்ற போது கண்டக்டர் விசில் அடிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகும். விஜய் திரைப்படத்தில் ஹீரோ அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தினுடைய ஹீரோ என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு ஆளுக்கு 1000 ரூபாய். தொலை தூரத்திலே தாய்மார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் பேசியவர்கள் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று குரல் கொடுத்தார்கள். ஒருவரும் கை தட்டவில்லை.
ஆனால் தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி நம்முடைய தலைவர்தான். 10 கூட்டணி, 8 கூட்டணி ஆகியவற்றை தூள் தூளாக்குகிற சக்தி த.வெ.க. தலைவராக மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டை ஆளப் போகிற நம்முடைய விஜய்க்குதான் உண்டு. நான் பல தலைவர்களை பார்த்து இருக்கிறேன். புரட்சித் தலைவரை பார்த்தேன். அப்போது 26 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினர். அப்போது உங்களை போலத்தான் நானும் இருந்தேன்.
இந்திய வரலாற்றில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு இருக்கிறது. ரூ.1000 கோடி வருவாயை வேண்டாம் என்று கூறி விட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் இந்த தலைவரின், ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு எந்த வீட்டை எடுத்துக் கொண்டாலும் விஜய்க்குதான் ஓட்டு உள்ளது.
கேட்காமல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவர் தமிழ்நாட்டில் தோன்றப் போகிறார். அவர் முதல்-அமைச்சராக வரப்போகிறார். அந்த வரலாறு படைக்கப்படும். 10 கட்சிகளின் கூட்டணியை அசைத்து விட முடியுமா? என்று நினைக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். ஏனென்றால் அந்த இரு கட்சிகளிலும் இருக்கின்ற தலைவர்கள் தலைவர்களே அல்ல. தலைமை என்பது வேறு. இன்று இருக்கிற தலைமை ஆடிப் போய் இருக்கிறது.
இவரை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆக்குவோம் என்று மக்கள் சூளுரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தக்கூடிய ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வை, மனித நேயம் ஆகியவற்றுடன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்கக் கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். எந்த சக்தியாலும் தமிழ்நாட்டில் இனி விஜய்யை தடுத்து நிறுத்த முடியாது. அவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும்.
வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். இங்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூடுகிற கூட்டத்தை பார்க்கும் போது நம்மை வெல்வதற்கு எந்த சக்தியும் இனி தமிழ்நாட்டில் இல்லை என்று வரலாறு படைக்கின்ற காலம் அமையும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
- நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார்.
அப்போது, நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
அவர் கூறியதாவது:-
சொந்த நாட்டையே ஒரு கூட்டம் அபகரிக்கிறது. சொந்த நாட்டிலேயே இருக்க முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் வேறு வழியில்லாமல், சொந்த நாட்டைவிட்டு வெளியேறி காடு, மலை என மறைந்து வாழ வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது.
என்னடா, இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறோமே என்று, நட்பு கூட்டத்தை கூட்டி ஒரு பெரும் படையை திரட்டி அதிரடியாக ஒரு போரை நடத்தி, அந்த நாட்டையே திரும்ப மீட்டு எடுத்தது யார் தெரியுமா? நம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார் அவர்கள்.
அவர்களுக் நட்பு சக்தியாக கூட இருந்து உழைத்தது, சின்ன மருது, பெரிய மருது மற்றும் சையஐ காரிகி அவர்கள் மூன்று பேர் தான். அன்னைக்கு இருந்த ஆங்கிலேய படை, ஆர்காட்டு படை போன்று இங்கு என்னென்ன படை இருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இந்த ரெண்டு படை மட்டுமல்ல. இன்னும் எத்தனை படைகள் வந்தாலும், எதிர்த்து நின்று போராடுவதற்கு நல்ல தலைமையும், இத்தனை சக்தியும் என்னுடன் இருக்கும்போது நம் நாட்டை நம்மால் மீட்டெடுக்க முடியாதா? என்ன?
அதுவும் இந்த தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லை என்றாலும் தனியாளாக நின்று ஜெயிக்கும் படை.
தைரியமான பெண்கள் நிறைந்த படை நம்முடன் இருக்கிறார்கள். பெண்கள் படை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்துபோய் இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன்.
கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.
முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும் என்று கூறினார்
விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை.
2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம் என்றார்.
- அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன்.
- தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் கூறியதாவது:
* தி.மு.க.வுக்கு முன்னாடி தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் பா.ஜ.க. அடிமையாக தான் இருக்கிறார்கள்.
* பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மறைமுகமாக சரண்டர் ஆகி உள்ளது.
* த.வெ.க. வந்த பிறகு ஊழல் செய்ய மாட்டேன். செய்யவும் விட மாட்டேன்.
* அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்.
* அழுத்தம் இருக்கிறதா என்றால் இல்லை என்று சொல்லமாட்டேன். மக்கள் அழுத்தத்தில் தான் இருக்கிறார்கள்.
* தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது.
* அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவின் பெயரைக்கொண்ட கட்சியும் அண்ணாவை மறந்து விட்டன.
* அடங்கிப் போவதற்கோ, அடிமையாக இருப்பதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ அரசியலுக்கு வரவில்லை.
* அரசியல் பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினர் இருக்கிறோம்.
* தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பூத் என்பது கள்ள ஓட்டு போடும் இடம்.
* மக்களை பாதுகாக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலில் சமரசம் செய்ய மாட்டோம்.
* 30 ஆண்டுகளாக நம்மை குறைத்து மதிப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் குணம் ஒரு போதும் மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது.
- இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.
சென்னை:
சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
ஜெயின் சமூக பாரம்பரியபடி எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் சாபா கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மணமக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இனி எப்போதும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்தில் வராது. இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.
2021 சட்டமன்ற பொது தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையில் 4-ல் ஒரு பங்கு தேர்தல் அறிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.
அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம், பகுதி ஆசிரியர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், டாக்டர்கள் ஒரு பக்கம் போராட்டம், சத்துணவு அமைப்பாளர்கள் போராட்டம், இன்று தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு மக்களுடைய வெறுப்பை சம்பாதித்த அரசு தி.மு.க. அரசு. அதனால் இந்த தேர்தலோடு மக்கள் தி.மு.க.வுக்கு விடை கொடுத்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டைப் போல தாய்மொழியைக் காப்பதற்கான ஒரு போர் உலகில் வேரெந்த தேசத்திலும் நடந்தது இல்லை.
- செந்தமிழைக் காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தவெக தரும். தவெக தலைவர் விஜய் தருவார்.
சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது; மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும் என தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவு கூர்ந்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாற்று உரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-
மொழிக்காக தீக்குளித்த மரபு தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உடைய போர் இந்த போர். நாங்கள் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கி றோம். இந்தி என்கிற மொழியை எதிர்க்கவில்லை. இந்தி அநீதியின் சின்னம், ஆதிக்கத்தின் சின்னம், மதத்தின் சின்னம், மனு தர்மத்தின் சின்னம், பிரிவி னையின் சின்னம். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். என்னுடைய தமிழ் மொழி யின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு உன்னு டைய மொழிக்கு எந்த தகுதியும் இல்லை.
செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதி தாசன் பாடினார். செந்தமிழ் காக்க இனி ஒரு சேனை தேவைப்படுமானால் அந்த சேனையை தருகிற இயக்கம் விஜய்யின் வெற்றிக் கழகம்தான். அந்த சேனை எங்களிடம்தான் இருக்கிறது.
நீங்கள் இந்தியை எதிர்ப்ப தாக நாடகம் போடுகிறீர்கள். 40 எம்.பி.க்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். டெல்லி யுடன் யுத்தம் செய்ய, டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்குகிற படைக்கலன்தான் ஒரு எம்.பி. அந்த கடமையை செய் தீர்களா? நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் நாடகம் முடிவுக்கு வரப் போகிறது.
துரியோதனின் வீழ்ச்சி அவன் தொடையில் இருந்தது. அதிசயம் ஆயிரம் செய்த ஜப்பானின் அன்றைய வீழ்ச்சி அணு குண்டில் இருந்தது.
ஒரு வல்லாதிக்கத்தின் வீழ்ச்சி அண்ணாவின் செந்நாவில் இருந்தது. உய்ய வந்த தமிழினத்தை உய்யாது தடுத்து குடும்ப புற்றில் குடியிருக்கும் பூநாகங்களின் வீழ்ச்சி விஜய்யின் கையில் இருக்கிறது என்பதை வருகிற காலத்தில் எழுதுவதற்கு நாம் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாளில் சூளுரைப்போம். வருகிற காலம் நம் காலம். எத்தனை தடைகளை போட்டாலும் தகர்த்து முன்னேறுவோம்.
நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. தேதிகள் கிழிபட உடன்படாவிட்டா லும் நாளை நடக்கும். நாளை விஜய் முதல்-அமைச்சர் ஆவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
விஜய் பேசாமல் இருக்கி றார், ஆனால் விஜய்யை பற்றித்தான் எல்ேலாரும் பேசுகிறார்கள். இப்படி ஒரு வரலாறு எனக்கு தெரிந்து உலக வரலாற்றில் எங்கேயும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
- விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத் தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு 'தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






