என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (27.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திரா நகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், ECR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வடபெரும்பாக்கம்: சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர், 200 அடி சாலை, ஆதிநாத் நகர், இபிஎம் நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பூங்கா, ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, ஏரிக்கரை, பாலாஜி நகர், ஓமக்குளமேடு, கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சாரங்கபாணி நகர், சண்முகசுந்தரம் நகர், சீதாபதி 1 முதல் 5-வது தெரு வரை, MRH சாலை.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
- இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை.
சென்னை:
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள் இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.
நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரதின நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்.
சென்னை:
நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷன் விருது பெறத் தேர்வாகியிருக்கும் ராமசாமி பழனிசாமி, மயிலானந்தன் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருது பெறத் தேர்வாகியிருக்கும் எச்.வி. ஹண்டே, சிவசங்கரி, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணியமூர்த்தி நடேசன், ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், வி. காமகோடி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது துறைகளில் தாங்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கத்தினை வழங்கிடும் என நம்புகிறேன்.
பத்ம பூஷன் பெறவுள்ள டென்னிஸ் வீரரும் எனது நண்பருமான விஜய் அமிர்தராஜ், திரைக்கலைஞர் மம்மூட்டி, பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ள நடிகர் மாதவனுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது.
- நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 7மணிமுதல் மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மற்றும் வடசென்னை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில மணிநேரங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளையும் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார்.
- ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்,
"திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள், ஆனால் உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நீங்களும், 20 பேரும் மட்டும் தான் கட்சியில் இருக்கிறீர்கள். விசிகவில் 20, 30 தலைவர்கள் மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொண்டர்கள் அனைவரும் இங்கு மாறிவிட்டார்கள். அறிவாலயத்தில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இன்றைக்கு வரைக்கும் ஏன் சிலை வைக்கவில்லை. திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துகின்றனர். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு." எனப் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தநிலையில் அதற்கு விளக்கமளித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு...
இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...' என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது' என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற, உறவாடுகிற தலைவராக திருமாவளவன் இருந்துவருகிறார்கள்.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்' என திருமாவளவன் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி 'முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்' என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, 'வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக' நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.
வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின்மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின்மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த 'ஒடுக்குமுறை' பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான்.
அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும்.
வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருத்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்' என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்துவருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு' என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது என்று விஜய் பேசினார்.
- ஊழல் சக்தி அ.தி.மு.க. என்று விஜய் விமர்சனம் செய்ததற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், ஊழல் சக்தி அ.தி.மு.க. என்று விஜய் விமர்சனம் செய்ததற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுக ஐடி விங் பவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணா திமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே, அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan'sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக" என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.
- பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் மோடியுடன் இருப்பவர் சாதா பழனிசாமி அல்ல, தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், 'பிரதமர் தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக'... வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியன் தெரியும் பழனிசாமி அவர்களே... ஒருமுறையாவது நிமிர்ந்து பாருங்கள் அப்போதுதான் சூரியன் தெரியும், அதனின் வெப்பமும் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.
பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம். டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைவணங்காது; தீ பரவட்டும்" அவர் கூறினார்.
- கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது.
- தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அதன்பின்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மொழிப்போர் வீரர்களே, உங்கள் மூச்சு காற்று தான் இப்போதும் எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் தியாக பிள்ளைகளே, தமிழ்ப் பிள்ளைகளே உங்களை வணங்குகிறேன். மொழிப்போர் தியாகிகளின் பெயரை சொன்னாலே உணர்ச்சி பொங்குகிறது. மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக் காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. ஆனால் அண்ணாவை பார்த்தால் மட்டும் எனக்கே சில நேரம் பொறாமை உண்டு. ஏனென்றால் பெரியாரை போல குருவும், கலைஞரை போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் அண்ணாதான் எல்லா தாயும் தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைப்பாங்க. ஆனால் நம் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணாதான். எனது அரசியல் பயணத்திற்கு உந்து சக்தி காஞ்சி மண்தான். 1972-ல் எனது கையில் அண்ணா சுடரை ஏந்தி ஓடிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.
எப்படியாவது இந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடியாக துடிக்கிறது. நேரடியாக திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்துபோக நாம் என்ன அடிமைகளா?. அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் போராளிகள் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.
டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது. 2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை தோல்வி கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது?.
தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும்; இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் இந்தமுறை வந்தபோது, வழக்கம்போல பழைய வடையைத்தான் சுட்டுட்டு போயிருக்கிறார்; அந்த மாவும் புளிச்சு போச்சு, அதைக் கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காதும் புளிச்சு போச்சு" என்று தெரிவித்தார்.
- விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், "விஜயால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும். ஆனால், சட்டப்படி 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும்" என தெரிவித்தார்.
மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று இருக்கும்
- திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "ஒவ்வொரு போதிலும் கிட்டத்தட்ட 350 குடும்பம்... 1000 - 15000 ஒட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு தெருவிலும் இது திமுக வீடு, இது அதிமுக வீடு என்று... ஆனால் தவெகவிற்கு என்று ஒரு வீடு கிடையாது. என்னது தவெகவிற்கு ஒரு வீடு கூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் திமுக வீட்டிலும் தவெக ஆதாரவாளர் உள்ளார். அதிமுகவில் தவெக ஆதாரவாளர் உள்ளார். எல்லா கட்சியின் வீட்டிலும் தவெக ஆதாரவாளர்கள் இருக்கிறார்கள்.
ஒரு குடும்பத்திற்கு 1 ஓட்டு என்றால் 2.25 கோடி. போன தேர்தலில் திமுக வாங்கியது 2 கோடி 9 லட்சம் வாக்குகள்... நாம் இப்போதே திமுகவை தாண்டி விட்டோம்" என்று தெரிவித்தார்.
- 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார்.
- திமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்திய நிலையில், புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்யும் இன்று தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.
கூட்டணி இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தலை தனியாக நின்று ஜெயிப்போம் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, நிர்வாகிகள் கட்சி மாற்றம் மறுபுறம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக, மற்ற மாற்றுக் கட்சிகளை நாடிவருகின்றனர். கட்சி தாவுதலுக்கு பல காரணங்களையும் முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தவெகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார், பின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது அந்த முகாமில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.






