என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்
- டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்த உலககோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சனுக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 கோடி பின்தொடர்பவர்கள் இருந்தனர். உலகக்கோப்பையில் அவரின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து சஞ்சு சாம்சனின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.78 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட கேரளாவை சேர்ந்த ஆண் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். 1.59 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட துல்கர் சல்மானை முந்தி இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
அதே சமயம் கேரளாவை சேர்ந்தவர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட நபர்களில் கீர்த்தி சுரேஷ் 1.88 கோடி பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 1.78 பின்தொடர்பவர்களுடன் சஞ்சு சாம்சன் 2 ஆம் இடத்திலும் 1.66 பின்தொடர்பவர்களுடன் அனுபமா பரமேஸ்வரன் 3 ஆம் இடத்திலும் 1.59 கோடி பின்தொடர்பவர்களுடன் துல்கர் சல்மான் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.
வரும் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் கீர்த்தி சுரேஷை முந்தி இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்கள் கொண்ட கேரளாவை சேர்ந்த நபர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார்.
- தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பிய சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.
- முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்கு மே 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. 2026 சீசனுக்கான போட்டி அட்டவணை இந்த காலக்கட்டத்தில் வெளியாகியிருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிக்கான மொத்த அட்டவணையை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 2026 சீசனுக்கான முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி (நாளை மறுதினம்) வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும். முதல் போட்டியும், இறுதிப் போட்டியிடம் நடப்பு சாம்பியன் அணியான ஆர்.சி.பி.-க்கு சொந்தமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஏப்பரல் 3-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 3-வது வாரத்திற்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மோதும் போட்டிகள் இருக்கும் வகையில் அட்டவணை தயாராக வாய்ப்புள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
- எம்.எஸ். தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.
- அடுத்தடுத்து சிக்ஸ் அடித்ததால் அர்ஷ்தீப் சிங் விரக்தி அடைந்தார்.
- அடுத்த பந்தை தடுத்தாட, பந்தை பிடித்து டேரில் மீட்செல் மீது வீசினார்.
இந்தியா- நியூசிலாந்து இடையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களம் இறங்கிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. பின்னர், நியூசிலாந்து அணி 159 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
டேரில் மிட்செல் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 11-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார் டேரில் மிட்செல். இதனால் அர்ஷ்தீப் சிங் விரக்தி அடைந்தார். அடுத்த பந்தை தடுத்தாடினார். பந்து அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. கோபத்தில் டேரில் மிட்செல் மீது பந்தை தூக்கி வீசினார். அவரது தொடைப்பகுதியில் பந்து தாக்கியது. இதனால் கோபம் அடைந்த டேரில் மிட்செல் அர்ஷ்தீப் சிங்கை திட்டியவாறு முறைத்துக் கொண்டு வந்தார். அத்துடன் நடுவரிடம் புகார் அளித்தார்.
அதன்பின் சூர்யகுமார் யாதவ் டேரில் மிட்செலை சமாதானப் படுத்தினார். அர்ஷ்தீப் சிங்கும் மன்னிப்பு கேட்டார்.
இருந்த போதிலும், அர்ஷ்தீப் வீரர்களின் நன்னடத்தை விதியை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, ஐசிசி அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபாரம் விதித்துள்ளது. மேலும், விளையாடு தடைவிதிப்பதற்கான தகுதி இழப்பு புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மாதங்களுக்குள் அர்ஷ்தீப் சிங் 4 அல்லது அதற்கு மேல் தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றால் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்படும்.
- டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையுடன் 'ஆவேஷம்' பட காட்சியை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி! ரீக்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
- உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- பும்ரா 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜஸ்பிரித் பும்ரா படைத்த புது சாதனை.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புது சாதனைகளை படைத்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெறும் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. டி20 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இந்திய மற்றும் இந்திய அணி வீரர்கள் படைத்த புது சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா படைத்த புது சாதனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் டாப் 5 பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். இதுவரை தான் விளையாடிய டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், அவர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் வங்காளதேசம் அணியை சேர்ந்த ஷதகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஜாம்பா 44 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஆதில் ரஷித் உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 43 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் நான்காவது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதேபோல் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவும் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- இந்தியா வென்ற மூன்று ஐசிசி கோப்பைக்கான அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார்.
- 2024 மற்றும் தற்போதைய டி20 உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் இந்தியாதான் கைப்பற்றியது. கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் பட்டத்தையும் இந்தியாதான் வென்றது. இந்த மூன்று தொடரையும் வென்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்திருந்தார். இடம் பிடித்திருந்தது மட்டுமல்லாமல் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்றது குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பையை பார்படோசில் வென்ற பிறகு, எனக்கு நானே ஒரு வாக்குறுதி செய்து கொண்டேன். அது, எந்தவொரு தொடரில் நான் விளையாடினாலும் வெற்றிக்காக விளையாட வேண்டும். சாம்பியன் கோப்பையை தூக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அகமதாபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான இந்த வெற்றி, நான் எனக்கு அளித்த வாக்குறுதி நிஜமாகிவிட்டது என்பதற்கான சான்றாகும். அணியின் ஆதிக்கத்தில் இது ஜஸ்ட் தொடக்கம்தான்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
- பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார்.
- இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
ஐசிசி நடத்தும் மெகா தொடருக்குப் பின் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஐசிசி அணி அறிவிக்கப்படும். அதன்படி நேற்றுடன் டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசி அணியை அறிவித்துள்ளது.
இதில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். கேப்டனாக மார்க்கிராமை தேர்வு செய்துள்ளது. இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு கேப்டன்கள் பெயரும் இடம் பெறவில்லை.
ஐசிசி அறிவித்துள்ள அணி விவரம்:-
1. சஹிப்சதா ஃபர்ஹான், 2. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 3. இஷான் கிஷன், 4. ஏய்டன் மார்க்கிராம் (கேப்டன்), 5. ஹர்திக் பாண்ட்யா, 6. வில் ஜேக்ஸ், 7. ஜேசன் ஹோல்டர், 8. பும்ரா, 9. லுங்கி நிகிடி, 10. அதில் ரஷித், 11. முசாரபானி. 12-வது வீரர் வான் ஸ்கால்விக்.
- நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுக்கனும்.
- அவர்கள் பந்தை வைடாக வீசி, சிக்சர்கள் அடிக்க அனுமதித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர், இந்தியா மோதும் போட்டியின்போது இந்தியா தோல்வியடையும் எனக் கூறுவார். ஆனால், இந்தியா வெற்றி பெற்றுவிடும். பின்னர் எதிரணியை குற்றம் கூறுவதற்கான காரணத்தை கண்டறிவார்.
அதேபோல்தான் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடையும் எனக் கூறியிருந்தார். ஆனால் இந்தியா 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னெரின் யுக்தியை முகமது ஆமிர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஆமிர் கூறுகையில் "நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு கிரெடிட் கொடுக்கனும். அவர்கள் பந்தை வைடாக வீசி, சிக்சர்கள் அடிக்க அனுமதித்தனர்.
பந்து வீச்சு மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து வீச்சாளர்களின் தொடர்ச்சியான மாற்றம் விசித்திரமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அபிஷேக் சர்மா திணறுகிறார் என்று உங்களுக்கு தெரியும்போது, நிங்கள் ஜேக்கப் டஃபியை கொண்டு வருகிறீர்கள்.
நியூசிலாந்து அணி இதுபோன்று நெருக்கடிக்கு உள்ளானதை, இதுவரை நான் பார்த்ததில்லை. 2005-ல் இருந்து அவர்கள் பார்த்து வருகிறேன். இதுபோன்று நெருக்கடிக்கு ஆளானதை நான் பார்க்கவே இல்லை" என்றார்.
- எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள்.
- வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் சூர்ய குமார்யாதவ் கூறியதாவது:-
நாங்கள் கோப்பையை கைப்பற்றி விட்டோம் என்பதை உணர கொஞ்சம் நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இது நீண்ட பயணமாக இருந்தது. 2024 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது.ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கினார்கள். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். நல்ல கிரிக்கெட் தொடர்புடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
2024-க்குப் பிறகு எல்லாம் மாறியது. 2024-ல் நாங்கள் வேறு வகையான கிரிக்கெட்டை விளையாடினோம், அதில் இருந்து இந்த அணி எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம்.
கடந்த ஒரு மாதமாக அற்புதமான பயணமாக இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஒரு அணியாக நாங்கள் சாதித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த சாதனையை படைத்து இருக்கிறோம்.
நான் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் ரன்கள் எடுப்பது முக்கியத்துவம் பெற்றது.
எங்கள் அணியில் 2 உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும்.
2025-ல் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம், முற்றிலும் மாறுபட்ட வகையான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். தற்போது 2026-ல் சொந்த நாட்டு மக்கள் முன்பு சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதித்தோம்.
எனவே 2027, 2028, 2029 ஆண்டுகளிலும் அதை தொடர விரும்புகிறோம். எங்களை தடுக்க முடியாது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எங்களது அடுத்த இலக்காகும். அதே ஆண்டில் தான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.






