என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும்.
- நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும்.
கிறைஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் எடுத்திருந்தது.
3-வது நாளான நேற்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், டிவான் கான்வே தொடர்ந்து பேட் செய்தனர். கான்வே 37 ரன்னில் ஒஜாய் ஷீல்டு பந்து வீச்சில் 'கேட்ச்' ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வீழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டாம் லாதமுடன் இணைந்தார். வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து அசத்தினர். தனது 14-வது சதத்தை அடித்த டாம் லாதம் 145 ரன்களிலும், 4-வது சதத்தை எட்டிய ரச்சின் ரவீந்திரா 176 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
3-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. வில் யங் 21 ரன்னுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 109 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 531 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 531 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் சீரான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜான் கம்பெல் 15 ரன்களிலும், டேகனரின் சந்தர்பால் 6 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து வந்த அலிக் அதானேஸ் 5 ரன்களிலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
72 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஷாய் ஹோப் - ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் ஜஸ்டின் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் 4-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஹோப் 116 ரன்களுடனும், ஜஸ்டின் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 319 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் நியூசிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
- 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்மித் 827 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.
- முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
- சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.
முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- 3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இதில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை (டிச.6) விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, தொடரைக் கைப்பற்றும்.
இந்த நிலையில், இம்மைதானத்தில் மந்தமாக இருந்த டிக்கெட் விற்பனை, தற்போது விராட் கோலியின் அடுத்தடுத்த சதங்களால் அனைத்தும் விற்று தீர்ந்தது.
3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், அப்போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆன்லைன் விற்பனை மந்தமாக இருந்ததால், கவுண்டர் விற்பனையைத் தொடங்கலாமா என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) யோசித்தது. ஆனால், ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியதும் நிலைமை தலைகீழாக மாறியது.
இதுகுறித்து ஆந்திர கிரிக்கெட் சங்கம் அதிகாரி கூறியதாவது, "ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் கோலி சதம் அடித்த பிறகு, 2-ஆம் கட்ட மற்றும் 3-ஆம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.1,200 முதல் ரூ.18,000 வரையிலான டிக்கெட்டுகள் என எதுவும் மிச்சமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக வருவேன் என மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
- நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை என ஹைடன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஜோரூட் 135 ரன்னுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
அந்த பதிவுக்கு ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டிருந்தார். இவர்களது இருவரின் பதிவும் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
அதற்கு ஹேடனின் மகள், நன்றி ஜோ ரூட் "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து பென் டக்கெட்டும், ஜாக் கிராலியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டக்கெட் (0) ஸ்லிப்பில் நின்ற லபுஸ்சேனிடம் சிக்கினார். அடுத்து வந்த ஆலி போப்பையும் (0) ஸ்டார்க் காலி செய்தார்.
3-வது விக்கெட்டுக்கு கிராலியும், ஜோ ரூட்டும் கைகோர்த்து சரிவை தடுத்து நிறுத்தினர். அஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் கணிசமாக ரன் திரட்டினர். அணியின் ஸ்கோர் 122-ஐ எட்டியபோது கிராலி 76 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதன் பின்னர் ஜோ ரூட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஹாரி புரூக் 31 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும், ஜேமி சுமித் ரன் ஏதுமின்றியும், வில் ஜாக்ஸ் 19 ரன்னிலும் வெளியேறினர்.
சிறப்பாக ஆடிய ஜோ ரூட் பவுண்டரியுடன் தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்தார். அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது முதலாவது சதம் இதுவாகும். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் நேற்றே முடிந்துவிடும் போல் தோன்றியது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன், ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து சிறப்பாக ஆடினார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரெண்டன் டாகெட் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதோடு இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ரூட் கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
- ஹேடனின் மகள், எங்கள் கண்கள் தப்பித்தது என பதிவிட்டார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுநடந்தது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்தார்.
முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.
இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு தற்போது வர்ணனையாளராக உள்ள ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி எக்ஸ்-இல் பகிர்ந்த வீடியோவில், ஹேடன் நிம்மதியை வெளிப்படுத்தினார்.
ரூட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
முன்னதாக ஹேடனின் மகள், "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்167 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார்.
64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்தின் கான்வே 37 ரன்னிலும், வில்லியம்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம்-ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்தது. அந்த அணி இதுவரை 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
- ஸ்டார்க் 102 டெஸ்டில் 418 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.
6 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை 23 ஆண்டுகளுக்கு பிறகு மிட்செல் ஸ்டார்க் முறியடித்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ஸ்டார்க் 102 போட்டிகளில் விளையாடிய தற்போது வரை 418 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக இலங்கை வீரர் ஜமிந்தா வாஸ் 111 போட்டிகளில் 355 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் போல்ட் (317), இந்தியாவின் ஜாகீர் கான் (311) ஆகியோர் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் 15-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் 421 விக்கெட்டுகளுடன் 14-வது இடத்தில் உள்ளார். இவர்களின் சாதனைகளையும் மிட்செல் ஸ்டார்க் கூடிய சீக்கிரத்தில் முறியடிக்க உள்ளார்.
- ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கியது.
அபுதாபி:
சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 லீக் தொடரில் நேற்று நடந்த ஷார்ஜா வாரியர்சுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இந்த மைல்கல்லை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் எட்டினார்.
இந்தப் பட்டியலில் ரஷித் கான் 681 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பிராவோ 631 விக்கெட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இதையடுத்து, சுனில் நரைனின் சாதனையை நினைவுகூரும் வகையில் 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கி சிறப்பித்தது.
ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரரான டக்கெட் மற்றும் அடுத்து வந்த ஒலி போப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
ஜாக் கிராலி - ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கிராலி 76 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ப்ரூக் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (19) தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 0, வில் ஜக்ஸ் 19 அட்கின்சன் 4 என வெளியேறினர். இதனால் ரூட் சதம் அடிப்பாரா இல்லையா என்பது கேள்வி குறியானது. அந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ரூட் பதிவு செய்தார்.
இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூட் - ஆர்ச்சர் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் சிதரடித்தனர். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோரூட் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
- ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






