என் மலர்
ஐ.பி.எல்.(IPL)
- ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை.
- என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த ஆர்சிபி முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் தற்போது வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது என்றும் களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன் என்றும் விராட் கோலி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி எனது கேரியரை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்.
அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட வீரர். அது போன்ற திறமையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். அதை வைத்து நீங்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அணிக்கு உதவ வேண்டும்.
என்று கூறினார்.
ரோகித் சர்மா இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இம்பேக்ட் வீரராக இருந்தார். இதனால் விராட் கோலி ரோகித் சர்மாவை கலாய்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மோதின. இந்த பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அந்த அணிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியை பெங்களூருவில் வெற்றி பேரணியாக கொண்டாட ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை அந்த பேரணி நடைபெறும்.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியை முன்னாள் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா நேற்று டிவி-யில் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கண்கலங்கி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரஷித் கான் 15 போட்டிகளில் 33 சிக்சர்களை வழங்கி மோசமான சாதனையை படைத்துள்ளார்
- கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி எடுக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
இதுவரை நடந்த 17 சீசன்களை விட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 52 முறை 200 ரன்களுக்கு மேல் குவிப்பு (கடந்த ஆண்டில் 41 முறை), 1,294 சிக்சர் மற்றும் 2,245 பவுண்டரிகள் (கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி) விளாசியது முக்கியமான சாதனைகளாகும்.
மேலும் இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். மேலும் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் அதிக வேக சதம் அடித்த வீரராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா (ஐதராபாத்) சாதனை படைத்துள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 55 பந்தில் 141 ரன்கள் விளாசினார்.
ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் (23 வயது) தட்டிச் சென்றார். அவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்துள்ளார்.
ஹோம் மைதானத்தை விட மற்ற மைதானங்களில் 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்த அணியாக ஆர்சிபி சாதனை படைத்ததுள்ளது.
ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர்: சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் 717 ரன்கள் எடுத்தார். ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் இவர்தான்.
மூன்று வெவ்வேறு அணிகளுடன் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு அணிகளுடன் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியை எட்டிய முதல் கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டி20 போட்டியில் 200+ ரன்கள் இலக்கை துரத்திய முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஆனது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் வரலாற்றில் 200 ஆட்டமிழப்புகளை நிறைவு செய்த முதல் விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றார். இதுவரை விளையாடிய 278 போட்டிகளில் 154 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டெம்பிங் செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 150 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது.
ஐபிஎல் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி 200+ ரன்கள் இலக்கை துரத்திய முதல் அணி குஜராத் டைட்டன்ஸ். இந்த சாதனையை சாய் சுதர்சனும் சுப்மன் கில்லும் நிகழ்த்தினர்.
இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் குர்ணால் பாண்ட்யா.
2025 ஐபிஎல் தொடரில், 10 அணிகள் 74 போட்டிகளில் மொத்தம் 26,381 ரன்கள் எடுத்தன. இதில் 2,245 பவுண்டரிகள், 1,294 சிக்ஸர்கள் மற்றும் 52 200-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தனர்.
டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனையை சுனில் நரைன் முறியடித்தார். இதுவரை விளையாடிய 198 டி20 போட்டிகளில், நரைன் 210 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக 50 ரன்கள் (63) மற்றும் அதிக 50+ ரன்கள் (71) எடுத்த சாதனையை கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியின் போது, ஐபிஎல்லில் அதிக பவுண்டரிகள் எடுத்த சாதனையை கோலி முறியடித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் அர்ஷ்தீப்சிங் 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் ஒரு சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்தார்.
2025 ஐபிஎல் சீசனில் டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
மே 30 அன்று ஜிடிக்கு எதிரான ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக நான்கு சிக்ஸர்கள் அடித்தார், இதன் மூலம், ஐபிஎல்லில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது பேட்டர் ஆனார்.
மோசமான பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்:
மார்ச் 23 அன்று ஐதராபாத்தில் நடந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்த பந்து வீச்சாளராக ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளார்.
ரஷீத் கான் 15 போட்டிகளில் 33 சிக்சர்களை வழங்கியுள்ளார். இது ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையாகும்.
- பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல குர்ணால் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார்.
- 2017-ல் மும்பை கோப்பையை வென்றபோது அவர் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்ல குர்ணால் பாண்ட்யா முக்கிய பங்கு வகித்தார். அவர் 4 ஓவரில் 17 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் 2-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை குர்ணால் பாண்ட்யா படைத்தார். இதற்கு முன்பு 2017-ல் மும்பை கோப்பையை வென்றபோது அவர் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- 18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'காத்திருந்தது போதும், 18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள்' என கோரிக்கை விடுத்துள்ளது.
- பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
- இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற புகைப்படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாம்பியன் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கோப்பையை பிடித்தபடி விராட் கோலி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவில் "ஐபிஎல் கோப்பையே! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி பேரணி பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அந்த அணி அறிவித்துள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெங்களூரு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் 40 சிக்சர்கள் அடித்துள்ளார்.
- அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு ஐபிஎல் தொடரில் 40 சிக்சர்கள் அடித்து சீசனின் சூப்பர் சிக்ஸர்கள் விருதை நிக்கோலஸ் பூரன் வென்றார்.
அதே நேரத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 39 சிக்சர்கள் அடித்து ஸ்ரேயஸ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்து நிக்கோலஸ் பூரனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
- இந்த ஐபிஎல் தொடரில் சிராஜ் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், அதிக டாட் பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் விருதை குஜராத் வீரர் முகமது சிராஜ் வென்றார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்படும் என்று பிசிசிஐ புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தான் அதிக மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார்
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று பேசப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த கேட்சுக்கான விருதை ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது
- ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருதை மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றார். 320.5 புள்ளிகள் பெற்று இந்த விருதை அவர் வென்றார்.
மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருது ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் மிகவும் சிறப்பான விருதாகும். ஒரு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஒரு அணிக்கு ஒரு வீரர் அளித்த பங்களிப்பின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முன்னர் ஐபிஎல் தொடர் நாயகன் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக இந்த விருதை சுனில் நரைன் 3 முறை வென்றுள்ளார்.
- நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை சாய் சுதர்சன் கைப்பற்றினார்.
- வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை கைப்பற்றிய சாய் சுதர்சன், 88 பவுண்டரிகள் அடித்து அதிக போர் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரூபே ஆன் தி போர்ஸ் ஆப் தி சீசன் விருதையும் வென்றார்.
மேலும், வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை வென்ற அவர், 1495 பேண்டசி புள்ளிகள் பெற்று பேண்டசி கிங் விருதையும் வென்றார்.






