என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதல் டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே ரன்களை வாரி வழங்கிய கஸ் அட்கின்சனுக்கு இப்போட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதவிர்த்து இப்போட்டியின் 12-வது வீரராக ஜேமி ஸ்மித் பெயர் இடம்பிடித்துள்ளது.

    இங்கிலாந்து அணி:-

    பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், ஜேமி ஸ்மித்(12ஆவது வீரர்).

    • ஐபிஎல் 2025 போட்டிக்காக தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில், பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சிஎஸ்கே அணி கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது.

    சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி, எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

    இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது எம்எஸ் தோனி செல்போன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. ஆனால் செல்போன் உபயோகிப்பது தொடர்பான புகைப்படங்கள் வைரானது அரிதான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

    • ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் அரை சதமும் 2-வது இன்னிங்சில் சதமும் விளாசியுள்ளார்.

    ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

    அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார். அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லி அணி 94 ரன்களில் சுருண்டது.

    இதனால் 12 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக வென்ற சௌராஷ்ட்ரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் மும்பை- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், துபே, ரகானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அந்த அணியில் அதிக பட்சமாக ஷர்துல் தாகூர் அரை சதம் விளாசினார்.

    இதனால் மும்பை அணி 120 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை மீண்டும் தடுமாறியது. 54 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மும்பை 101 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஷர்துல் தாகூர் - தனுஷ் கோட்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் விளாசியும் தனுஷ் கோட்டியன் அரை சதம் விளாசியும் அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 274/7 என்ற நிலையில் உள்ளது.

    ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், துபே உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

    • இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    அதன்படி, 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய வீரர்கள் 3 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணி விவரம்:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) , ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) , ரவீந்திர ஜடேஜா (இந்தியா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), மாட் ஹென்றி (நியூசிலாந்து). ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

    • இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் சிறந்த அணிகள் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆண்டுக்கான ஐ.சி.சி.-இன் ஒருநாள் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ள ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அணியில் இலங்கையை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளில் இருந்து தலா மூன்று பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

     


    ஐ.சி.சி.-இன் 2024 ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் சரித் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அசலங்கா 605 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 50.2 ஆகும். இதில் ஒரு சதம், நான்கு அரைசதங்கள் அடங்கும்.

    இலங்கை அணி மட்டும் கடந்த ஆண்டு 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    2024 ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியல்:

    சரித் அசலங்கா (கேப்டன்) - இலங்கை

    சயிம் ஆயுப் - பாகிஸ்தான்

    ரஹ்மனுள்ளா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான்

    பதும் நிசங்கா - இலங்கை

    குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்) - இலங்கை

    ஷெர்ஃபேன் ரூத்தர்ஃபோர்டு - வெஸ்ட் இண்டீஸ்

    அசமதுல்லா ஓமர்சாய் - ஆப்கானிஸ்தான்

    வனிந்து ஹசரங்கா - இலங்கை

    ஷாஹீன் ஷா அப்ரிடி - பாகிஸ்தான்

    ஹாரிஸ் ரவுஃப் - பாகிஸ்தான்

    ஏ.எம். காசன்ஃபர் - ஆப்கானிஸ்தான்

    • முதல் இன்னிங்ஸில் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
    • மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், அடுத்து மும்பை அணி இன்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் தமோர், ஸ்ரேயஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

    • வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல்.
    • ரன்பீர் கபூர் நடிக்கலாம் என்று தகவல் வெளியானது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்களை யாரும் மறக்க முடியாது. இவர் தலைமையின் போது, அணியில் அறிமுகமான பல்வேறு வீரர்கள் கிரிக்கெட் உலகில் அசாத்திய சாதனைகளை படைத்துள்ளனர்.

    இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை லவ் ரஞ்சனின் லவ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், பிரசென்ஜித் சாட்டர்ஜி ஆகியோர் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.

    சமீபகாலமாக திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது பல வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளார்.

    வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில், வீரேந்திர சேவாக்- ஆர்த்தி தம்பதி தங்களின் 21 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் Unfollow செய்துள்ளனர்.

    முன்னதாக, வீரேந்திர சேவாக் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்புகைப்படங்களில் அவரது மகன் மற்றும் அவரது தாயார் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. மேலும், பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோவிலின் படங்களையும் சேவாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதிலும் அவரது மனைவி இல்லை. இதனால் இந்த தம்பதிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    விவாகரத்து தொடர்பாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • மும்பையில் உள்ள வான்கடே மைதானம் 1974-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
    • இதன் 50வது ஆண்டு விழா மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கொண்டாடப்படுகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது.

    இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

    அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது.

    தவிர FIFTYக்கு 1,902, YEARSக்கு 2,831 OFக்கு 1,066, WANKHEDEக்கு 4,990, STADIUM 3,672 பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

    கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்த மைதானத்தில் 2011-ம் ஆண்டில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை (50 ஓவர்) வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் எம்.எஸ்.டோனி பிரார்த்தனை செய்தார்.
    • எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    ராஞ்சி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்

    கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர்.
    • 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார்.

    முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 64-வது நபராக ஆஸ்திரேலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதன் விழா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார். சிட்னியில் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56-க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க். 43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5 என ஆஷஸ் தொடரினையும் 2015-ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.

    ×