என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரின்டெர்னெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தாமஸ் மொசாக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன
    • முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்தார்.

    லக்னோ:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.

    லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கே எல் ராகுல்-தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தியது. 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார். சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் இரட்டை சதமடித்து 232 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஸ்மாரன் ரவிசந்திரன் நிதானமாக ஆடி சதமடித்து 135 ரன்னில் வெளியேறினார். கருண் நாயர் 60 ரன்னிலும், கிருதிக் கிருஷ்ணா 60 ரன்னிலும், வித்யாதர் பாட்டீல் 54 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்கில் 736 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    உத்தரகாண்ட் அணி சார்பில் ஆதித்ய ராவத் 4 விக்கெட்டும், மயங்க் மிஸ்ரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இன்னும் 587 ரன்கள் பின்தங்கியுள்ளது. லக்ஷய் ராஜேஷ் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, கத்தாரின் முபாரக் அல் ஹசாரி-துனிசியாவின் மோயிஸ் ஈசர்குய் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஐரீ 23 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் அபாரமாக விளையாட, ஜார்ஜ் முன்சே நிதானமாக விளையாடினார். முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரெண்டன் மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையே மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்காட்லாந்து 15.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இறுதியாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான குஷால் புர்டெல், ஆசிஃப் ஷேக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 16 ரன்னில் வெளியேறினார்.

    அப்போது நேபாளம் 13.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து திபேந்திர சிங் ஐரீ உடன் குல்சன் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நேபாளம் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐரீ 23 பந்தில் 50 ரன்களும், குல்சன் ஜா 17 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் தொடரை நேபாளம் நிறைவு செய்துள்ளது.

    • சென்னையில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
    • இந்தியா கிரிக்கெட்டுக்கான லாபகரமான சந்தை என்பதால் முதலீட்டை ஈர்க்கும் வகையில் திட்டமிடுகிறது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கும் ஒன்று. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு மிகப்பெரிய லீக் தொடராக விளங்குகிறது.

    இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2011-ல் இருந்து பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமுள்ள அதிகமான ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய லாபகரமான சந்தையை கொண்ட இந்தியாவில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் விரும்புகிறது. அந்த போட்டியை சென்னையில் நடத்த விரும்புகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    இதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கிரிக்கெட்டின் தலைமை பிசிசிஐ. பிசிசிஐ சம்மதம் தெரிவித்தால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய கிரிக்கெட் சந்தையை கொண்ட இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பிக் பாஷ் லீக்கில் உள்ள 8 அணிகளில் 2 அணியின் உரிமையாளர்கள் அணியை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்த முடிவை எடுத்துள்ளது.

    பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்து்ளளது. இந்த அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2025-26 சீசனிலும் இந்த அணிதான் சாம்பியன்.

    • மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் விளாசினார்.
    • சோம்பால் கமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் மைக்கேல ஜோன்ஸ் அபாரமாக விளையாட, ஜார்ஜ் முன்சே நிதானமாக விளையாடினார். முன்சே 29 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிரெண்டன் மெக்கல்லம் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையே மைக்கேல் ஜோன்ஸ் 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்காட்லாந்து 15.2 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இறுதியாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. நேபாளம் அணி சார்பில் சோம்பால் கமி 3 விக்கெட்டும், நந்தன் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்
    • பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி

    ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

    பள்ளி மாணவனாக இருக்கும்போதே கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி இன்று தொடங்கிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என்று அவரின் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "கிரிக்கெட் பயிற்சி காரணமாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வை எழுதாமல் இருக்கலாம். அடுத்த பாடத்தேர்வை அவர் எழுதுவார் என நம்புவதாக தெரிவித்தார்.

    ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமாட்டார் என்று கூறப்படுகிறது. 

    • பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தினார்.
    • நெதர்லாந்தை போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் நாளை நெதர்லாந்தை குரூப் சுற்றின் கடைசி லீக் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா? என்பது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில் "பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் பின்னர் இது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.

    பும்ராவின் பனிச்சுமை காரணமாக இந்திய அணி அவரை அனைத்தும் போட்டிகளிலும் விளையாட வைப்பதில்லை. தேவையான போட்டிகளில் மட்டும் விளையாட வைக்கிறது. நாளைய போட்டி இந்தியாவக்கு முக்கியமான போட்டி அல்ல.

    பாகிஸ்தானுக்கு ஏதிராக தனது முதல் ஓவரிலேயே சயீம் ஆயுப், சல்மான் அலி ஆகா ஆகியோரை அவுட்டாக்கினார். அதன்பிறகு பாகிஸ்தான் அணி சரிவை எதிர்கொண்டது.

    • 2024 டி20 உலகக் கோப்பையில் குரூப் 8 சுற்றோடு வெளியேறியது.
    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஜிம்பாப்வே அணிக்கு ஒரு புள்ளிகள் கிடைத்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றோடு வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு குரூப் சுற்றோடு வெளியேறியது.

    மேலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபின், ஐசிசி நடத்திய 4 தொடர்களில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் சறுக்கலை சந்தித்து வருகிறது.

    2024 டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, தற்போது டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

    2024 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியோடு வெளியேறியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.

    • சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத், சென்னை, கொல்கத்தாவில் இந்திய அணி விளையாடுகிறது.
    • சென்னையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. இதுவரை இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா ஆகியவற்றில் ஒரு அணி தகுதி பெற வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    குரூப் 1-ல் இந்தியா X1, வெஸ்ட் இண்டீஸ் X2, ஆஸ்திரேலியா X3, தென்ஆப்பிரிக்கா X4 என்று அழைக்கப்படுகிறது.

    அதன்படி இந்தியா வருகிற ஞாயிற்றுக்கிழமை (22-ந்தேதி) தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    26-ந்தேதி (வியாழக்கிழமை) ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    3-வது மற்றும் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • ஜிம்பாப்வே 2 வெற்றி, ஒரு போட்டி ரத்து மூலம் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
    • ஆஸ்திரேலியா லீக் சுற்றோடு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் "பி" பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.

    ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததால் 3 போட்டிகளில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் ஓமனுடன் விளையாட வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் இன்று மதியம் ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது. இந்த போட்டி மழையினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தால்தான் ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற சிறிய அளவில் வாய்ப்பு. அடுத்த போட்டியில் இலங்கையிடம் ஜிம்பாப்வே தோல்வியடைய வேண்டும்.

    ஆனால் மழையால் டாஸ் கூட சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே 1 புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை தகர்ந்தது.

    • இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
    • இம்ரான் கான் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பல்வேறு ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவீதப் பார்வையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இம்ரான் கான் உடல்நிலை குறித்து அறிந்து வர, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற உதவியாளர், சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    அதில், இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீதப் பார்வை மட்டுமே இருப்பதாகவும், வலது கண் நரம்பில் அடைப்பு காரணமாக இது ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் 2025 அக்டோபர் வரை அவரது பார்வை சீராக இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாகப் பார்வை மங்கத் தொடங்கியும் சிறை அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளாமல் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததே இந்தப் பாதிப்பிற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது அவரது உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து இம்ரான் கானுக்கு முழுமையான பரிசோதனைகளை நடத்த வேண்டும். அவர் தனது குடும்ப மருத்துவரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அக்கடித்தில், "முன்னாள் கேப்டன்களான நாங்கள், பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் புகழ்பெற்ற நபருமான இம்ரான் கானின் சிகிச்சை மற்றும் சிறைவாச நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலையுடன் எழுதுகிறோம். இம்ரான் கானின் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    ×