என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்தும் பஞ்சாப் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-ந் தேதி தொடங்கிய ஒரு போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான பஞ்சாப் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, மோசமான ஆட்டத்தின் மூலம் 55 ரன்னில் சுருண்டது. அதிகம் எதிர்பார்த்த நட்சத்திர வீரரான சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி ஸ்மரண் ரவிச்சந்திரனின் இரட்டை (203) சதத்தால் 475 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி 420 ரன்கள் முன்னிலை பெற்றது.

    கடினமாக சூழலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் சுப்மன் கில்லை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறி நிலையில் சுப்மன் கில் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

    • ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 3 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 4 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் அணியான மும்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    இதனால் மும்பை அணி ஜம்மு-காஷ்மீரை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் (4), ரோகித் சர்மா (3), ரகானே (12), ஷ்ரேயாஸ் அய்யர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷர்துல் தாகூர் தாக்குப்பிடித்து 51 ரன்கள் அடிக்க 120 ரன்னில் சுருண்டது.

    ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் உமர் நசீர், யுத்விர் சிங் தலா 4 விக்கெட் வீழ்த்தி மும்பையை சுருட்ட முக்கிய காரணமாக இருந்தனர். பின்னர் ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷுபம் கஜுரியா 53 ரன்களும், அபித் முஷ்டாக் 44 ரன்களும் அடிக்க 206 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 26 ரன்னிலும், ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து சொதப்பினர். ரகானே 16 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க 2-வது இன்னிங்சிலும் மும்பை அணி தடுமாறியது. ஆனால் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக தனுஷ் கோட்டியான் 62 ரன்கள் சேர்க்க மும்பை 290 ரன்கள் அடித்தது.

    இதனால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரரான ஷுபம் கஜுரியா 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். அபித் முஷ்டாக் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான மும்பை அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடியும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

    • இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), பில் சால்ட்(இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

    • இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் டி20 போட்டிக்கான அணியை ஐ.சி.சி. அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அதில் ஸ்மிருதி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    லாரா வோல்வார்ட் (கேப்டன், தென் ஆப்பிரிக்கா), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), சமாரி அத்தபத்து (இலங்கை), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் பிரண்ட் (இங்கிலாந்து), மெலி கெர் (நியூசிலாந்து), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர், இந்தியா), மரிசேன் கேப் (தென் ஆப்பிரிக்கா), ஓர்லா பிரெண்டர்கேஸ்ட் (அயர்லாந்து), தீப்தி சர்மா (இந்தியா), சதியா இக்பால் (பாகிஸ்தான்).

    • 2011-ல் சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார்.
    • அந்த ஆட்டத்திற்குப் பிறகு பல மாதங்கள் அவர் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி லல்லண்டாப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    அப்போது இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி இருந்தார். கேப்டனின் திட்டப்படியே இந்திய அணி இயங்குகிறது.

    கபில்தேவ் காலத்தில் அவர் நிகழ்ச்சியை நடத்தினார். சுனில் கவாஸ்கர் காலத்தில் அது அவரது அழைப்பு. முகமது அசாருதீன் பதவி காலத்திலும் அதுதான். அதன்பிறகு தாதா மற்றும் பலர். கண்டிப்பான நிர்வாகி வந்து ஒரு விதியை உருவாக்காத வரை இது தொடரும்.

    சதம் அடித்த பிறகு 14 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன். ஒரு சதம் அடித்த பிறகு ஒரு வீரர் கைவிடப்பட்டால் வெளிப்படையான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனக்கு எந்தக் குறிப்பும் இல்லை.

    அப்போது அணியில் இருந்த வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்ற டூரில் அவர்கள் ரன் எடுக்கவில்லை. இங்கு நான் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகும், பிளேயிங் லெவன் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போது கைவிடப்பட்ட வீரருக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் ராக்கி பிளின்டாப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப்

    பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.

    • முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி தண்டர் 157 ரன்கள் எடுத்து வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடந்த சேலஞ்சர் சுற்று போட்டியில் சிட்னி தண்டர், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோர்டான் சில்க் 43 ரன்னும், துவார்ஷுயிஸ் 30 ரன்னும், ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி தண்டர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சிட்னி தண்டர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சாம் பில்லிங்ஸ் 29 பந்தில் 42 ரன் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    வரும் 27-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி, சக நாட்டின் கிம்பர்லி-ஜான் பாட்ரிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் 12 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முதல் டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே ரன்களை வாரி வழங்கிய கஸ் அட்கின்சனுக்கு இப்போட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதவிர்த்து இப்போட்டியின் 12-வது வீரராக ஜேமி ஸ்மித் பெயர் இடம்பிடித்துள்ளது.

    இங்கிலாந்து அணி:-

    பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட், ஜேமி ஸ்மித்(12ஆவது வீரர்).

    • ஐபிஎல் 2025 போட்டிக்காக தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாடா ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில், பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடப்பு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். சிஎஸ்கே அணி கடந்த 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளது.

    சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி, எதிர்வரும் ஐபிஎல் 2025 போட்டிக்கு தயாராகி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

    இந்நிலையில், வலைப்பயிற்சியின் போது எம்எஸ் தோனி செல்போன் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    தோனியின் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. ஆனால் செல்போன் உபயோகிப்பது தொடர்பான புகைப்படங்கள் வைரானது அரிதான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

    • ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் அரை சதமும் 2-வது இன்னிங்சில் சதமும் விளாசியுள்ளார்.

    ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

    அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார். அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லி அணி 94 ரன்களில் சுருண்டது.

    இதனால் 12 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக வென்ற சௌராஷ்ட்ரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் மும்பை- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், துபே, ரகானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அந்த அணியில் அதிக பட்சமாக ஷர்துல் தாகூர் அரை சதம் விளாசினார்.

    இதனால் மும்பை அணி 120 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை மீண்டும் தடுமாறியது. 54 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மும்பை 101 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஷர்துல் தாகூர் - தனுஷ் கோட்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் விளாசியும் தனுஷ் கோட்டியன் அரை சதம் விளாசியும் அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 274/7 என்ற நிலையில் உள்ளது.

    ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், துபே உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

    • இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    அதன்படி, 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய வீரர்கள் 3 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணி விவரம்:

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) , ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) , ரவீந்திர ஜடேஜா (இந்தியா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), மாட் ஹென்றி (நியூசிலாந்து). ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

    ×