என் மலர்
நீங்கள் தேடியது "Manoj Tiwari"
- பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் இன்று தொகுதி பங்கீடு முடிவானது.
- ராகுலுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையில் தொகுதி பங்கீடு இன்று முடிவானது. டெல்லி, குஜராத், அரியானா, கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டன.
இந்நிலையில், டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதி பா.ஜ.க. எம்.பி.மனோஜ் திவாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருடனும் திருடனும் சகோதரர்களே என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே நடந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பேன் எனக்கூறி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது அவர்களின் காலடியில் விழுந்து கிடப்பதால் ஆம் ஆத்மி கட்சியினர் வருத்தம் அடைந்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, இன்று ராகுல் காந்தியுடன் கெஜ்ரிவால் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதால் காங்கிரஸ் கட்சியினரும் வருத்தத்தில் உள்ளனர்.
பா.ஜ.க.வும் நரேந்திர மோடியும் மக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளனர். இனி டெல்லி மக்கள் அனைத்தையும் முடிவுசெய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
- கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர்.
- காலிஸ், நரைன் மற்றும் நான் அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி. இவர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டியில் விளையாடி 1 அரைசதம் 1 சதம் விளாசியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் 98 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் 7 அரை சதம் அடித்துள்ளார்.
2012-ம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அணியில் மனோஜ் திவாரி இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களும் உழைத்தனர். ஆனால் பெருமையெல்லாம் கேப்டனான கவுதம் கம்பீருக்கு சென்றது என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். கவுதம் கம்பீர் தனியாக கொல்கத்தா அணியை வெல்ல அழைத்துச் செல்லவில்லை. காலிஸ், நரைன் மற்றும் நான் என அனைவரும் இந்த முயற்சிக்கு பங்களித்தோம்.
ஆனால் யார் அந்த பெருமையை ஏற்றுக்கொண்டார்கள்? கவுதம் கம்பீர் ஐபிஎல்-க்கு முன்பு ஒரு வலுவான பிஆர் அணியை நியமித்து, அனைத்து பெருமையும் அவருக்கே சேரும்படி செய்துவிட்டார்.
இவ்வாறு மனோஜ் கூறினார்.
- 2011-ல் சென்னையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார்.
- அந்த ஆட்டத்திற்குப் பிறகு பல மாதங்கள் அவர் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி லல்லண்டாப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
அப்போது இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோனி இருந்தார். கேப்டனின் திட்டப்படியே இந்திய அணி இயங்குகிறது.
கபில்தேவ் காலத்தில் அவர் நிகழ்ச்சியை நடத்தினார். சுனில் கவாஸ்கர் காலத்தில் அது அவரது அழைப்பு. முகமது அசாருதீன் பதவி காலத்திலும் அதுதான். அதன்பிறகு தாதா மற்றும் பலர். கண்டிப்பான நிர்வாகி வந்து ஒரு விதியை உருவாக்காத வரை இது தொடரும்.
சதம் அடித்த பிறகு 14 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன். ஒரு சதம் அடித்த பிறகு ஒரு வீரர் கைவிடப்பட்டால் வெளிப்படையான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனக்கு எந்தக் குறிப்பும் இல்லை.
அப்போது அணியில் இருந்த வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்ற டூரில் அவர்கள் ரன் எடுக்கவில்லை. இங்கு நான் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகும், பிளேயிங் லெவன் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போது கைவிடப்பட்ட வீரருக்கு போதிய பயிற்சி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
டெல்லியில் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்களும் வீடுகளும் கட்டப்பட்டு வருவதாகவும், முறையான அனுமதி பெறாமல் வீட்டிலேயே தொழில் செய்வதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து சுப்ரீம் கோர்ட் கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், டெல்லி நகராட்சி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தது, இதனையடுத்து உச்ச நீதிமன்றம் மீண்டும் டெல்லி நகராட்சியை எச்சரித்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், கோர்ட் அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது. இதனையடுத்து அங்கு அனுமதி பெறாத கட்டிடங்கள், வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கோகல்புரி பகுதியில் இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை டெல்லி பா.ஜ.க. தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி கடந்த வியாழக்கிழமை உடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று தாமாக முன்வந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் இதுபோல் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்தது ஏன்? என்று வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மனோஜ் திவாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு செய்த பின்னர் நேற்றும் கோகல்புரி பகுதிக்கு சென்ற மனோஜ் திவாரி இன்னொரு வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை உடைக்க முயன்றார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ManojTiwari #Delhisealingdrive #Gokalparisealbreaking






