என் மலர்
விளையாட்டு
- டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
- இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச் சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19-ந்தேதி வரை நடைபெற்றன.
இப்போட்டிகளில் தமிழ் நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக "சிறந்த அட்டாக்கர் விருதை" வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் தமிழக வீரர் வி.சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கமாலினியின் இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
- தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது.
கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
- எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
- ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.
- கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
- தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை (9-ந்தேதி) நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி முதல் போட்டியில் விளையாடவில்லை. நாளைய ஆட்டத்துக்கு உடல் தகுதி பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. கோலி இடத்தில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதே போல கே.எல். ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் ரிஷப்பண்ட் இடம் பெறுவார்.
ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா அக்ஷர் படேல் ஆகியோர் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது.
இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்து விடும் ஏற்கனவே அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விட்டது. இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 108 ஆட்டத்தில் இந்தியா 59-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்) , ஜெய்ஸ் வால், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ரிஷப்பண்ட், ஹர் திக் பாண்ட்யா, அக் ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் , ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லிவிங்ஸ் டன், ஜேக்கப் பெதல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், சகீப் மக்மூத், ஜேமி சுமித், ஒவர்டன், ரேகான் அகமது, அட்கின்சன், மார்க் வுட்.
- 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எஸ்.ஏ.லீக் 20 ஓவர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. அது முடிந்ததும் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைவார்கள்.
முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. உள்ளூர் அணியான பாகிஸ்தானில் கேப்டன் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், சல்மான் ஆஹா, கம்ரான் குலாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், வில் யங், டேரில் மிட்செல் என திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 61-ல் பாகிஸ்தானும், 51-ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' யில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஸ்பெயினின் பெட்ரோ மார்டின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ் போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய சிட்டகாங் அணி 20 ஓவரில் 194 ரன்கள் குவித்தது.
- பர்வேஸ் ஹொசைன், கவாஜா நபே அரை சதம் அடித்தனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பார்ச்சுன் பாரிஷல், சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ச்சுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்டகாங் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
பர்வேஸ் ஹொசைன் 78 ரன்னும், கவாஜா நபே 66 ரன்னும், கிரஹாம் கிளர்க் 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ச்சுன் அணி களமிறங்கியது. கேப்டன் தமிம் இக்பால் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 46 ரன்னும், ஹ்ருடோய் 32 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பார்ச்சுன் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் பார்ச்சுன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.
- பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
- இதையடுத்து, 3வது முறையாக பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு பிபா தடை விதித்தது.
லாகூர்:
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த சிறப்பு குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா அறிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3-வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது.
பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என தெரிகிறது.
- முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
புலவாயோ:
ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம் அயர்லாந்து 2வது இன்னிங்சில் இதுவரை 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேடியா பெல்லூசி உடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 4-6, 2-6 என அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மேடியா பெல்லூசி அரையிறுதியில் இத்தாலி வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியது.
மும்பை:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது வந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாகவும், அதனை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சாம்பியன் டிராபியை இந்தியா வெல்லவில்லை எனில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார்.
- இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வாங்கி கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டு, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 முறை கோப்பையை தோனி வென்று கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி தொடர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தோனியின் ஆட்டத்தை கடைசியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டின் வெளிப்புறச் சுவரில் சில மாற்றங்களை தோனி செய்துள்ளார். வீடு அவரது கிரிக்கெட் பயணத்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவரில் அவரது ஜெர்சி நம்பரான 7 மற்றும் தோனி என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் சித்தரிப்பும் சுவரின் வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






