என் மலர்
விளையாட்டு
- இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம்.
- நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம்.
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டி தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சயித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தை புறக்கணிப்பதாக போட்டி அமைப்பு குழுவினருக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சல்மான் பட் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய கிரிக்கெட் அணி) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில் கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 - 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்.
என்று சல்மான் பட் கூறினார்.
- முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
- இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பஷிருக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றுள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-
க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸ்மித், லியாம் டாசன், வோக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர்.
- 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி எதிர்வரும் ஜூலை 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து சக வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனக்குத் தெரிந்தவரை பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு பந்துவீசி வருகிறார். இருப்பினும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களுடைய திட்டத்தை எளிதாக வைத்துள்ளோம். என்று கூறினார்.
- டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம்.
- நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.
லண்டன்:
இந்திய டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலியின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றுவதை செய்வதை நிறுத்திவிட்டு, தனது இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டன் சுப்மன் கில் விஷயங்களைக் கையாளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த காலத்தில் விராட் கோலி செய்ததை அவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை.
அவர், "ஐபிஎல்-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, அவர் ஒரு ஆக்ரோஷமான மனநிலைக்குச் செல்வதையும், நடுவர்களுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். இது கில்லின் இயல்பு அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல.
ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும்போது ஆடியோவில் வரும் மொழி மற்றும் வார்த்தைகளில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இது ஒரு போக்காகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.
என்று மனோஜ் திவாரி கூறினார்.
- எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.
- இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
கராச்சி:
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கள் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி கூறியதாவது:-
தற்போதைய சூழலில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்தியாவில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்கும் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம். இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.
என தாரிக் புக்தி கூறினார்.
இந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதிப் போட்டியாக இருப்பதால், இது ஒரு முக்கியமான தொடர். ஹாக்கி உலகில் சக்திவாய்ந்த அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது.
- நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரை நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 4-வது போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இளம் வேகப்பந்து காம்போஜ் ஆடும் லெவனில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த போட்டியில் குல்தீப் களமிறங்குவாரா அல்லது காம்போஜ் களாமிறங்குவாரா அல்லது இருவருமே களமிறங்குவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமார் விலகி உள்ளார்.
- காயம் காரணமாக 4-வது போட்டியில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கு விலகியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்
- விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது.
- அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.
பர்மிங்காம்:
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.
முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும்.
இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்ளதான் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
- இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டது. இந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்சித் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி:-
ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.
- இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
- நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிரெட் லீ தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரெட் லீ கூறியதாவது:-
நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்.
என கூறினார்.
- இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
- 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் காயமடைந்தார்.
இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்
- அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும்.
- போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பீடே விளக்கம் அளித்துள்ளது.






