என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு
- காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமார் விலகி உள்ளார்.
- காயம் காரணமாக 4-வது போட்டியில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கு விலகியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4-வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் அவதியுறும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்






