என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
    • 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    டெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

    2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்குப் காமன்வெல்த் தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்தது.

    இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரம்மாண்ட விளையாட்டு தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • கரோலினா 2-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • உக்ரைன் வீராங்கனை போட்டியில் இருந்து விலகியதையடுத்து கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் லூசியா ப்ரோனெட்டி (இத்தாலி) மற்றும் ஜெலினா ஓஸ்டாபென்கோ லாட்வியா மோதினர். இந்த ஆட்டத்தில் லூசியா ப்ரோனெட்டி 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டங்களில் கரோலினா முச்சோவா (செக்), வர்வாரா கிராச்சேவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர். இதில் கரோலினா 2-6, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மற்றொரு ஆட்டங்களில் கோகோ காப் -டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா (உக்ரைன்) ஆகியோர் மோத இருந்த நிலையில் உக்ரைன் வீராங்கனை போட்டியில் இருந்து விலகியதையடுத்து கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • 3-வது சுற்றில் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பானிஷ்), ஹமாத் மெட்ஜெடோவிக் (செர்பியா) ஆகியோர் மோதினர்.
    • மற்ற ஆட்டங்களில் ஜிரி லெஹெக்கா (செக்), கரேன் கச்சனோவ் (ரஷ்யா), லூகா நார்டி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்களுக்கான 3-வது சுற்றில் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பானிஷ்), ஹமாத் மெட்ஜெடோவிக் (செர்பியா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அல்கராஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் ஜிரி லெஹெக்கா (செக்), கரேன் கச்சனோவ் (ரஷ்யா), லூகா நார்டி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

    • கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
    • ஐபிஎல் தொடரில் குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரூ.9¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய அவர் 9 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் அவர் 19-வது ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக சென்னை அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பாக 38 வயதான அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அளித்த விளக்கம் வருமாறு:-

    கடந்த ஐ.பி.எல். தொடரில் 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நான் எந்த ஐ.பி.எல். அணியிலும் இருந்தாலும், அந்த அணிக்காக எல்லா ஆட்டங்களிலும் ஆடியிருக்கிறேன். குறைவான ஆட்டங்களில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். அதனால் அணியில் எனது பங்களிப்பு என்ன? என்னை வைத்து உங்களது எதிர்கால திட்டமிடல் என்ன? என்பது குறித்து தெளிவுப்படுத்தும்படி ஐ.பி.எல். தொடரின் போதே அணி நிர்வாகத்திடம் கேட்டு விட்டேன்.

    சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு பரஸ்பர வர்த்தகம் அடிப்படையில் மாற வேண்டும் என்றால் சென்னையிடம் ரூ.18 கோடி கையிருப்பு இருக்க வேண்டும். அதன் பிறகு யாரை விடுவித்தால், அவரை எடுக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். நான் சென்னை அணியில் இருந்து விலகினால், அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் நான் வெளியேறினால் மட்டும் அது நடந்துவிடும் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வீரர் தனது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு ஆர்வம் உள்ளதா இல்லையா என்பதை அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க உரிமை உள்ளது. அது தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்துமாறு கேட்கலாம். தற்போது நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன். அணியில் எனது நிலை குறித்து தெளிவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

    மற்றபடி எனது கையில் எதுவும் இல்லை. நானும், சஞ்சு சாம்சனும் அணி மாறுகிறோம் என்று கூறவில்லை. இது சில இடங்களில் இருந்து கிளப்பிவிடப்பட்ட வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது. தொடரை வென்ற மகிழ்ச்சி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். வீரர்கள் அனைவரும் சுற்றிருந்த ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் அடித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது

    முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது. 

    • ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

    சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

    • இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த மைதானத்தில் போட்டியை நடத்த காவல்துறையின் அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. விதித்த காலக்கெடு கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக சின்னசாமி மைதானம் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை பி.சி.சி.ஐ. தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் கலின்ஸ்கயா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெண்டா அனிசிமோவா 3வது சுற்றுடன் வெளியேறினார்.

    அமெண்டா அனிசிமோவா விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் சிட்சிப்போஸ் - பெஞ்சமின் போன்சி மோதினார்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரெக்க வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் - பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சி உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். அடுத்த 2, 3-வது சுற்றை பெஞ்சமின் கைப்பற்றி அசத்தினார். இதனால் பெஞ்சமின் போன்சி 6-7 (4-7), 6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை எலிஸ் மெர்டென்ஸ் கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார்.
    • மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அயோய் இடோ (ஜப்பான்) ஆகியோர் மோதினர்.

    சின்சினாட்டி:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) மோதினர்.

    இதில் முதல் செட்டை எலிஸ் மெர்டென்ஸ் கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 3-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார். ரைபகினா இந்த ஆட்டத்தில் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அயோய் இடோ (ஜப்பான்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மேடிசன் 6-4, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இவர் 4-வது சுற்றில் மேடிசன் கீஸ் மற்றும் ரைபகினா மோத உள்ளார்.

    மற்ற ஆட்டங்களில் ஸ்வியாடெக் விளையாடமலே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஸ்வியாடெக்குக்கு எதிராக விளையாட கூடிய மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு வீராங்கனையான அன்னா கலின்ஸ்காயா (ரஷ்யா) 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 

    • களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள்.
    • கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம்.

    ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை.

    இம்முறை 2011 போல இந்திய மகளிர் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

    அந்த நிலையில் நேற்று மும்பையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 2011 உலகக் கோப்பையில் தான் வெளிப்புற சத்தங்களை காதில் வாங்காமல் உலகக் கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்று சச்சின் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சொன்னதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அதுவரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. நாங்கள் 28 வருடங்களாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்றோம். அப்போது நாங்கள் ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்தோம்.

    அப்போது எங்களிடம் வந்த சச்சின் மற்றும் கேரி, இங்கிருந்து நாம் கோப்பையை வெல்வதற்கான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக யாரும் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது. செய்தித்தாளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

    களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். களத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். சத்தங்களை நிறுத்தி கோப்பையை வெல்ல முயற்சியுங்கள் என்றும் சச்சின், கேரி சொன்னார்கள். கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம். அது வேலையும் செய்தது.

    என்று யுவராஜ் சிங் கூறினார்.

    ×