என் மலர்
நீங்கள் தேடியது "PakvsWI"
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 294 ரன்கள் அடித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது
முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் 23 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் சல்மான் ஆஹர் 33 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 19 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் இலக்கை கடைசி பந்தில் எடுத்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 14 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.
- முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்திருந்தது.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.
முல்டன்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்நாட்டு அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் அடித்தார். கைல் மேயர்ஸ் 33 ரன்களும், கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்களும், வாசிம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






