என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இதனால் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதில் மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த, மூவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு ₹30 லட்சம், இறந்த 2 பெண்களுக்கு தலா ₹20 லட்சம் என அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில இடங்களில் வீடுகளில் கழிவுகளையும் நேரடியாக பாதாள சாக்கடைகளில் அனுப்புவதாக புகார்கள் உள்ளது.

    கழிவிலிருந்து கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் உட்பட விஷ வாயு உற்பத்தியாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து அனுப்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் கனகன் ஏரிக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு உற்பத்தியாகி பாதாள சாக்கடை வழியாக வீடுகளில் உள்ள கழிவறைக்குள் புகுந்துள்ளது.

    இன்று காலை வழக்கம்போல ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவில் கழிவறைக்கு சென்றவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். 4-வது தெருவை சேர்ந்த செந்தாமரை(80) கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார். அவரின் மகள் காமாட்சி(45) தாய் விழுந்ததை கண்டு அவரை மீட்க சென்றார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி(28)யும் மயங்கி விழுந்தார். அதே தெருவில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி(16) அவரும் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.

    அதே பகுதியயை சேர்ந்த பாலகிருஷ்ணாவும் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் கழிவறையிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

    மூதாட்டி செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி, செல்வராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    விஷ வாயு தாக்கியதால் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, ஆரோக்கியதாஸ், பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விஷ வாயு பரவிய பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

    பாதாள சாக்கடை வழியாக விஷவாயு பரவியதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது. அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 10 தெருக்களில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேறினர். பாதிக்கப்பட்ட 4-வது தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முக கவசம் அணிந்துள்ளனர்.

    • ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    புதுச்சேரி:

    ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தேர்தல் உலகளாவிய முறையில் நடைபெறும். 2024 தேர்தல் களுக்காக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 720 இடங்களில் பிரான்சுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிரெஞ்சு எம்.பி.க்கள் உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெறுகிறது.

    ஆசியாவில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்த பிரெஞ்சு குடிமக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமையை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.

    இதன்படி கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 ஆயிரத்து 546 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் 2 சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒன்று என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 38 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்கின்றனர். புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வாக்கு சாவடியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.

    பிரான்சின் கான்சல் ஜெனரல் லிஸ் டால்போட் பாரே, புதுச்சேரியில் வாக்களித்தார். தொடர்ந்து அவர் வாக்களிக்கும் செயல் முறையையும் மேற்பார்வை யிட்டார். மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் தேர்தலுக்கான ஏற்பாடுளை செய்திருந்தது. 

    • மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
    • இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்கட்சிகளை மதிக்காத தன்மை, ஆணவப் போக்கு, தொழிலதிபர்களை மிரட்டுவது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்துவது, குடியுரிமை சட்டம், நீட் உட்பட மக்கள் விரும்பாத சட்டங்களை நிறைவேற்றியது ஆகியவற்றுக்கு பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    400 தொகுதிகளை பெறுவோம் என மார்தட்டிய பாஜனதா 240 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மாநில கட்சிகளை சமரசம் செய்து மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.

    பாஜகவுக்கும், மோடிக்கும் இது அவமானம். சிறந்த அரசியல்வாதி என்றால் பிரதமராக மோடி பதவி ஏற்கக்கூடாது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் நீண்ட அனுபவம் உள்ள அரசியல் தலைவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்.

    கூட்டணி கட்சிகளால் பாஜக ஆட்சி கவிழும். 5 ஆண்டு இந்த ஆட்சி நீடிக்காது. குறை பிரசவம்தான்.

    புதுவை மக்கள் காங்கிரசுக்கு பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை தந்துள்ளனர். பண பலம், அதிகார மீறல் ஆகியவற்றை தாண்டி தீர்ப்பை புதுவை மக்கள் வழங்கியுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், 22 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் 28 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார்.

    முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அமைச்சர்கள் நமச்சிவாயமும், லட்சுமிநாராயணனும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தோம். கார்களில் அமைச்சர்கள் வீதியுலா வந்தாலும், பொது மக்களை சந்திப்பது இல்லை.

    கிராமங்களுக்கும், பிற பிராந்தியங்களுக்கும் செல்வதில்லை. 2011-ல் கட்சி ஆரம்பிக்கும்போது கூறிய மாநில அந்தஸ்தை 300-க்கும் மேற்பட்ட முறை கூறினாலும், அதை பெறவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.

    இதற்கு பிறகும் ஆட்சியில் ரங்கசாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும்.

    மத்தியில் சில மாநிலங்களில் நாங்கள் கணித்த வெற்றி கிடைக்கவில்லை. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி இந்தியா கூட்டணி கட்சிகளின் காலம்தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
    • போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா, வெடிகுண்டு கலாச்சாரத்தால் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகூரில் உள்ள பழமையான மூல நாதர் கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுசுவரில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து சோதனை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டுள்ள நபர் வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாகூர் மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் செல்போனில் பரவும் வீடியோ வைத்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இதே போல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் வில்லியனூரில் வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும்.
    • கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 15 இடங்களில் போட்டியிட்டு, லாஸ்பேட்டை, மாகி ஆகிய 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும். ஆனால் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. 6 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

    இதனால் காங்கிரஸ், தி.மு.க. இடையே யார் பெரியவர்? என்ற மோதல் கூட அவ்வப்போதுநிகழ்ந்து வந்தது. இது புதுச்சேரி காங்கிரசாரிடையே மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன் படுத்திக்கொண்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசிலிருந்து பலரும் வெளியேறி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசுக்கு சென்றனர். இந்த அணியின் வெற்றிக்கும் உதவியாக இருந்தனர்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் காங்கிசுக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என்பதை வைத்திலிங்கத்தின் வெற்றி நிரூபித்துள்ளது.

    • ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர்.
    • என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    ஆட்சி அமைந்த நாளிலேயே முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து பெண்களை கவரும் வகையில் சிலிண்டருக்கு மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை, புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.

    இதனால் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு நற்பெயர்தான் இருந்தது. இந்த நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் முத்தியால்பேட்டையில் சிறுமி கஞ்சா போதையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இது புதுச்சேரி மக்கள டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர் கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

    புதிய ஆட்சி அமைந்தவுடன் ரெஸ்டோ பார் திறந்தது, கஞ்சா உட்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, நெரிசல் மிகுந்த நகரமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர் என காங்கிரஸ், தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

    மேலும் கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை புதிய அரசு மீண்டும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளை திறக்காத விவகாரத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றனர். பெண்கள் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதை விரும்பவில்லை.

    ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர். ஆனால் அதனை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. இதையே பிரசாரமாக காங்கிரஸ் பயன்படுத்தியது. மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், ரேசன் கடைகள் மூடிக்கிடக்க என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுதான் காரணம் எனக்கூறி பிரசாரம் செய்தார். இது காங்கிரசின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.

    • கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.
    • பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.

    கோவிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

    பின்னர் பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    108 தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

    இதன்பின் வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கோடை விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் புதுச்சேரியில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.

    • கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.
    • கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 1997-ம் ஆண்டு முதன் முதலில் அம்பாசிடர் கார் வாங்கினார்.

    வெள்ளை நிற அம்பாசிடர் காரை 20 ஆண்டுகள் வரை அவர் பயன்படுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கார் பழுதானதால் அதை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் ராசியான தனது காரை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார்.

    இதற்காக காரை தூத்துக்குடிக்கு அனுப்பி சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பித்தார். புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் கார் புதுச்சேரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் நிகழ்வுகளில் தனது விருப்பமான பழைய காரையே அவர் பயன்படுத்துகிறார்.

    இந்த நிலையில் இதை அறிந்த புதுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அந்த காரை பார்க்க விரும்பினார். அதையடுத்து நேற்று மாலை தனது அம்பாசிடர் காரில் ராஜ் நிவாஸ்க்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு சிறிது நேரம் கவர்னருடன் ஆலோசித்த ரங்கசாமி காரை பார்க்க கவர்னரை அழைத்து வந்தார்.

    காரை வந்து பார்த்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் காரை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.

    பின்னர் இருவரும் அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது. அங்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை இறக்கி விட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.

    இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு காரில் சென்றபோது புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது பற்றி பேசினோம். எனது மிக ராசியான வண்டியில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த, திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே ஒயிட் ஹவுஸ் காலனி உள்ளது. இங்கு தச்சுவேலை செய்யும் சிங்காரவேலு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 13), இவன் தனது நண்பர்களோடு வீட்டின் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மாலை வெகுநேரமாகியும் சந்தோஷ் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தோஷ் பெற்றோர்கள் அவனை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே சந்தோஷின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பின்னர் இது குறித்து நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் கழுத்து, கை, கால், மார்பு என 17 இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலை குறித்து, அவனுடன் விளையாடியவர்களுடனும், அப்பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் சந்தோசை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அதன்படி அந்த சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரத்தத்துடன் கத்தி ஒன்று கிடைத்தது. சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். ஆனால், அந்த குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    பக்கத்துவீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அங்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். இவர் தனது தாயாரின் உதவியுடன் சிறுவன் சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரை தேடி வருகின்றனர்.

    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எவ்வளவுதான் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் ஏமாறுவதை தடக்க முடியவில்லை.

    இதில் பெண் ஆசை காட்டி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. புதுச்சேரி கல்மண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க ஆன்லைனில் பெண்கள் விவரங்களை தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய நபர் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி அதில் தேவையான பெண்ணை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய மர்ம நபர் புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் அந்த பெண் இருப்பதாகவும் அங்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதை நம்பி அங்கு சென்ற வாலிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அந்த ஓட்டலில் அவர் தேடி வந்த பெண் இல்லை. இதனால்தான் மோசடி செய்யபட்டதை உணர்ந்த அந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×