என் மலர்
விருதுநகர்
- துபாயில் வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ. 30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (62). இவரது மருமகன் மணிவண்ணன். இவர் ஓசூரில் ஓட்டல் ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இந்த நிலையில் சுப்புராஜூக்கு மதுரை அழகப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி (60), கங்காதேவி (56), ஸ்ரீராம் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வெளிநாடுகளில் நண்பர்கள் உள்ளதாகவும், மருமகனுக்கு துபாய் ஓட்டலில் வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசைவார்த்தை கூறி நம்பவைத்துள்ளனர்.
அதன்பின்னர் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.30 லட்சம் தேவைப்படும் என்றும், உடனடியாக வேலை வாங்கிவிடலாம் என்றும் கூறியுள்ளனர். சுப்புராஜூம் அவர்களிடம் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை. இது குறித்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஐகோர்ட்டு உத்தரவுப் படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்புடைய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- வடமாநில தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு ராமுத் தாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமார் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று முத்துக்குமார் மது குடித்து விட்டு தகராறு செய்வதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள சங்கர்செவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தூக்குப்போட்டு ராமர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், நாரிபாரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (19). இவரும், இவரது சகோதரர் அசோக் குமாரும் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ராகுல் சொந்த ஊர் சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சகோதரர் அசோக் குமார் கொடுத்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து இவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் வழங்கினார்.
- பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலைக் கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணைவேந்தா் டாக்டா். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினா்கள் டாக்டா்.ஜி.சுவாமிநாதன், ஆலோ சகா் எஸ். ஞானசேகா், துணைவேந்தா். எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுகதேவன் முன்னிலை வகித்தனா்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ்ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு ரேங்க் எடுத்த மாணவா்களுக்கு பதக்கங்களையும், பொறியியல், வேளாண்மை, கட்டடவியல், கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை மாணவா்கள், வாய்பேசாத, காதுகேளாத மாணவா்கள் 13 போ், பி.எச்.டி. 84 உள்பட மொத்தம் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, கனடா ஸ்பாஸியல் டி.என்.ஏ. இன்பர்மடிக்ஸ் நிறுவன துணைத்தலைவா் சுதா்சன் கோபாலன், பெங்களுா் ஜென்பேக்ட் நிறுவன உதவி துணைத் தலைவா் கருணாகரன் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி பேசுகையில், கலசலிங்கம் பல்கலை கடந்த 38 வருடங்களாக, இளைஞா்களுக்கு தொழி ற்சாலை பயிற்சியுடன் இணைந்த கல்வியை வழங்கி மக்களுக்கும் நாட்டுக்கும் அா்த்தமான பங்களிப்பை செய்து வருகிறது.
மேலும் வாய்பேசாத, காது கேளாத மாணவா்களுக்கு பி.டெக்., பி.காம்., படிப்பை ஆசியாவிலேயே முதன்முதலாக தொடங்கி 2007 முதல் நடத்தி வருவது கண்டு பாராட்டுகின்றேன்.
பட்டமளிப்பு விழா என்பது ''கனவையும் உண்மை நிகழ்வையும் இணைக்கும் பாலம் ஆகும்". இந்த நேரத்தில் மாணவா்கள் கனவை நனவாக்க உறுதுணை செய்த இறைவ னையும் பெற்றோர்களையும், ஆசிரியா்களையும் நன்றி செலுத்த வேண்டும்.
''உலகமே ஒரு குடும்பம்" இதில் இந்தியா தனித்தி றமையில் நம்பிக்கையுடன் உலக நாடுகளுலெல்லாம் ஒருங்கிணைத்து, அமைதியை நிலைநாட்டி வருகிறது. இதனை பிரதமர் மோடி இளைஞா்களை, தங்கள் 25 வருட வாழ்வை நாட்டின் வளா்ச்சிக்கு முழுமனதுடன் உழைத்து, உலகலாவிய நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டம் பெற்ற மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இயக்குநா்கள், டீன்கள், துறைத்தலை வா்கள், பேரா சிரியா்கள், பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
- ராஜபாளையம் அன்னப்ப ராஜா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் பள்ளி செயலர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தை என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 1964-ம் ஆண்டில் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த மாணவர் முகுந்தராம்ராஜா வரவேற்று பேசினார்.
தலைமையாசிரியர் ரமேஷ், முன்னாள் மாணவர் சங்க செயலர் சஞ்சய் குமார்ராஜா, என்.ஏ.ராமச்சந்திரராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்களான சேலம் பெரியார் பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்து செழியன், ஐதராபாத் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபரட்டிரியின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராமகுரு, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன், கோவை அர்ஜூன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் டிரஸ்டி மற்றும் செயலர் சுரேஷ்குமார், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி மணிகண்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சமூக அக்கறைமிக்க வினாக்கள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் மகேஸ் நன்றி கூறினார். கூட்ட ஏற்பா டுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் தொடர்பு அலுவலர் இளைய பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- வெம்பக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
- இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை யூனியன் எதிர்கோட்டை கிராம நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
ஆலங்குளம் கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மருத்துவமனையில், அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். உயர்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் கலெக்டர் மருத்து வர்களை அறிவுறுத்தினார்.
கல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் லட்சியம் குறித்து கேட்டறிந்து, ஆசிரியர்களிடம் இடைநிற்றல் மாணவர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் பள்ளி கல்வியை தொடர தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
குண்டாயிருப்பு ஊராட்சியில் கனிமவள நிதி திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.128.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அலுவ லர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை வட்டம், மேட்டுக்காட்டில் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வரும் முதல்கட்ட அகழாய்வு குழிகளையும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, 2-ம் கட்ட அக ழாய்வு பணி நடைபெற இருக்கும் இடம் குறித்து கேட்டறிந்தார்.
வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான ஆதார் இணைப்பு, வேளாண் கணக்கெடுப்பு, இ-அடங்கல், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு, நீர்வரத்து, வரத்து கால்வாய், மதகுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பயன்பெறும் பாசன நிலங்கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிவகாசியில் 4 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவருக்கு 17 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டின் அருகிலேயே காளிராஜின் மாமனார் வீடு உள்ளது.
காளிராஜின் மகள் அங்கிருக்கும் தனது சித்தி ஆனந்த ஈஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த காளிராஜ் மகளை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது மகளையும், ஆனந்த ஈஸ்வரியையும் காணவில்லை. எங்கு சென்றார்கள்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மனைவி இசக்கியம்மாள் மற்றும் அவரது மகள் நாகஜோதியையும் காணவில்லை என தெரியவந்தது.
மேலும் விசாரித்தபோது இந்த 4 பேரும் அந்தப்பகு தியில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்ததாக தெரியவந்தது. ஆனால் இந்த 4 பேரும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.
இதையடுத்து பெண்கள் மாயமானது குறித்து காளிராஜ் மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர்கள் மனோஜ் (வயது24), வெங்கடேஷ் (40), குற்றாலகனி (27). இவர்கள் கும்பகோணத்தில் நடந்த நண்பரின் விசேஷ நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று நள்ளிரவு 3 பேரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை மனோஜ் ஓட்டி வந்தார்.
இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. லட்சுமியாபுரம் பகுதியில் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் சிக்கி படுகாய மடைந்த வெங்கடேஷ், குற்றாகனி ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொத்தடிமையாக இருந்த பீகார் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
- இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த கீழான் மறைநாடு கிராமத்தில் ஒரு தனியார் பேப்பர் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பேப்பர் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரீஷ் (வயது17), சுரேஷ்குமார் (13) ஆகிய 2 சிறுவர்கள் கொத்தடிமை குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
- கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கேரள விளையாட்டு ஆணையம் சார்பில், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை நீச்சல் வீரா் மற்றும் வீராங்கனைகள் 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றனா்.
விருதுநகா் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், கலசலிங்கம் மாணவா்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்று ஆண்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றனா்.
தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த, மாநில ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.
மதுரை, புளு ஒசன் ஸ்போர்ட்ஸ் ஏரியா சார்பில், நடந்த ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா். ஸ்ரீவில்லிபுத்துா் ஏகலைவன் கபடி குழுவினா் சார்பில், நடந்த மாநில கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.
சிவகாசி சுப்ரீம் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா். கலசலிங்கம் பல்கலை பெண்கள் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா்.
ஆலங்குளம் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா். சாத்தூர் இண்டியன் ஸ்டார் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில வாலிபால் போட்டியில் 2-ம் பரிசு ரூ.8ஆயிரம் பெற்று கோப்பையைப் பெற்றனா்.
வெற்றி பெற்ற அணியினரை பல்கலைகழக வேந்தா் கே.ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுதேவன், மாணவா் நலத்துறை இயக்குநா் முத்துக்கண்ணன், உடற்கல்வி இயக்குநா்கள் எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளா் உதயகுமார் ஆகியோர் பாராட்டினா்.
- ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டு கட்டிடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- கல்வி பயிலக்கூடிய மாணவர்களிடம் கல்வி கற்பிக்கப்படும் முறை, கல்வியின் தரம் குறித்து கலெக்டர் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் நல்லாங்குளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கே.செட்டிகுளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊரகவளர்ச்சித்துறை மூலம் சத்துணவு திட்டத்தின் கீழ் ரூ5.32லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வைப்ப றையுடன் கூடிய சமைய லறை கட்டிடத்தையும், பள்ளி கணித ஆய்வகங்க ளையும் ஆய்வு செய்து, அங்கு கல்வி பயிலக்கூடிய மாணவர்களிடம் கல்வி கற்பிக்கப்படும் முறை, கல்வியின் தரம் குறித்து கலெக்டர் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
செம்பட்டி ஊராட்சி பொய்யாங்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டு கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர், உதவிப்பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி "SKIMT MAGNATE 2023"-ஐ ஏற்பாடு செய்தது. இது மாணவர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறை யில் பங்கேற்கும் வகையில் கலப்பின முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்லூரிச்செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல சி.ஐ.ஐ. தலைவரும், பெனின்சுலார் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வா கப்பங்காளருமான ஜெய்சிங்வேர்கர் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், இன்று உலகம் பல நிலைத்தன்மை சிக்கல்களை எதிர்கொள்கிறது. நிலை யற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை, தெளிவின்மை ஆகியவற்றின் கருத்தை விரிவுப டுத்தினார்.
பங்கேற்பாளர்கள் மாற்றத்தை தழுவவும், நிச்சயமற்ற தன்மையை கண்காணிக்கவும், தெளிவாக தொடர்பு கொள்ளவும், சிக்கலான தன்மையைக் கடக்கமற்றும் தெளிவற்ற தகவலை புரிந்து கொள்ள சோதனைகளை செய்யவும்அறிவுறுத்தினார்.
வணிக வினாடி-வினா, வணிகத்திட்டம், சிறந்த மேலாளர், கார்ப்பரேட் நடை, விளம்பரச்செயல், காகிதவிளக்கக்காட்சி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் ேபான்றவை நடந்தன.
14 கல்லூரிகளை சேர்ந்த 249 மாணவ-மாணவிகள் பங்கேற்ற இந்த சந்திப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுநிலைப் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை யையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.
- அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும் தெரியவந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் மதுரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனை சோதனை செய்தனர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேசன் அரிசி இருந்தது.
வேனில் இருந்த 20 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் வேனில் வந்தவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும், அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேசன் அரிசியை சேகரித்து மதுரையில் உள்ள ஆலையில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ேரசன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.






