search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalasalingam"

    • கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் தேசிய மாநாடு நடந்தது.
    • மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு பர்மசூட்டிகல் சயின்சஸ் அறக்கட்டளை, இந்தியன் பர்மசூட்டிகல் அசோசியேசன்ஸ் தமிழ்நாடு மற்றும் டானிப்பா டிரஸ்ட் ஆதரவுடன் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் 2 நாள் தேசிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.அறிவழகி, செயலாளர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.

    மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் என்.சி. ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் ஆர்.இளங்கோ, தலைமை விருந்தினர்களாகவும், டானிப்பா டிரஸ்டின் செயலாளர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் ஆர்.இளங்கோ கவுரவ விருந்தினர்களாகவும் பங்கேற்று பேசினர்.

    ஜெனெக்சியா பயோசெர்வின் ஆராய்ச்சி விஞ்ஞானி முகேஷ் சுப்பிரமணியன், மைலான் லெபாரட்டரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி இணை இயக்குநர் பிரசாத் பழனிச்சாமி, ஐகாரஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் செல்வம், பார்மா கியூ.எஸ். எல்.எல்.பி-ன் குவாலிட்டி சிஸ்டெம்ஸ் அன்ட் ஆடிட் இயக்குநர் சிவக்குமார், ஈன்நெக்ஸ்ட் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர்-தலைவர் தட்சணா மூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    பார்ம் டி முதல் பேட்ச் மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ்களை முனைவர் க. ஸ்ரீதரன் வழங்கினார். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர் சாரங்கபாணி பங்கேற்று பேசினார்.

    மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அமைப்பு செயலாளர்-பேராசிரியர் எஸ்.ஆர். செந்தில் குமார் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கன்வீனர்-பேராசிரியர் அன்புராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
    • கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கேரள விளையாட்டு ஆணையம் சார்பில், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை நீச்சல் வீரா் மற்றும் வீராங்கனைகள் 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றனா்.

    விருதுநகா் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், கலசலிங்கம் மாணவா்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்று ஆண்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றனா்.

    தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த, மாநில ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    மதுரை, புளு ஒசன் ஸ்போர்ட்ஸ் ஏரியா சார்பில், நடந்த ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா். ஸ்ரீவில்லிபுத்துா் ஏகலைவன் கபடி குழுவினா் சார்பில், நடந்த மாநில கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    சிவகாசி சுப்ரீம் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா். கலசலிங்கம் பல்கலை பெண்கள் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    ஆலங்குளம் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா். சாத்தூர் இண்டியன் ஸ்டார் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில வாலிபால் போட்டியில் 2-ம் பரிசு ரூ.8ஆயிரம் பெற்று கோப்பையைப் பெற்றனா்.

    வெற்றி பெற்ற அணியினரை பல்கலைகழக வேந்தா் கே.ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுதேவன், மாணவா் நலத்துறை இயக்குநா் முத்துக்கண்ணன், உடற்கல்வி இயக்குநா்கள் எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளா் உதயகுமார் ஆகியோர் பாராட்டினா்.

    ×