என் மலர்
வேலூர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் சாலையோரம் டீக்கடை உள்ளது.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் இந்த டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்து, அங்கிருந்த 7 பேர் மீது மோதியது.
விபத்து ஏற்படுத்தியதும் மினி வேனில் இருந்த பாலூரை சேர்ந்த இளங்கோ என்ற டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
இந்த விபத்தில் ஏ. கஸ்பாவைச் சேர்ந்த மணி என்ற 7 வயது சிறுவன் மற்றும் பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது50) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கணேசன்(18), கோகுல் (16), ஜோசப் (55), வேண்டா (43), தினேஷ் (17) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்பூர் பி.கஸ்பாவை சேர்ந்த குமரன் மகன் தினேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.
எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் விற்பனை வருவாய் இலக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் மது வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது பானங்களை வாங்கினர். 3 மாவட்டங்களும் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை அளிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 111 கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் விற்பனை கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13-ந் தேதி ரூ.4 கோடியே 89 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியே 70 லட்சத்துக்கும், நேற்று முன்தினம் பொங்கல் அன்று வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.
மொத்தம் 2 நாட்களில் ரூ.19 கோடியே 68 லட்சத்துக்கு மது விற்பனையானது. இந்தாண்டு பீர் வகைகளை விட மது வகைகள் அதிகம் விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாக மேலாளர்கள் தெரிவித்தனர்.
வேலூர்:
ஆந்திர மாநில அரசு பஸ்கள் அனுமதியின்றி வேலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படுவதாக துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷூக்கு புகார்கள் சென்றது.
இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் அகியோர் கொண்ட குழுவினர் வேலூர் மக்கான் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி ஆந்திர மாநில 5 அரசு பஸ்கள் இயங்கியது தெரியவந்தது. பின்னர் 5 பஸ்களையும் பறிமுதல் செய்து, வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில போக்குவரத்து அதிகாரிகள், வேலூர் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பழிக்கு பழியாக நேற்று தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்களில் உரிமம் உள்ளதா என அந்த மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் குப்பம், பலமநேரி, சித்தூர், புத்தூர் ஆகிய இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் தமிழக போக்குவரத்து கழக வேலூர் மண்டலத்துக்குட்பட்ட 4 பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் என 17 தமிழக அரசு பஸ்களும், 7 தனியார் பஸ்களும் என 24 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் விரைவு பஸ்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட பஸ்கள் அங்குள்ள போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஆந்திர மாநில பதிவெண் கொண்டதாகும். அந்த வாகனங்களில் உரிமையாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அம்மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று இரவு வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆந்திர மாநில அரசு பஸ்கள் விடுவிக்கப்பட்டன.
மேலும் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசு பஸ்கள், ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆந்திர அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது.
அதற்கு பிறகும் தமிழக பஸ்கள் விடுவிக்கப்படவில்லை இதனால் மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
வேலூர் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் கூறுகையில், வேலூரில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.
உரிமம் அசல் இல்லை, ஓட்டுனர் உரிமம் அசல் இல்லை போன்ற சிறு, சிறு குறைகளை வைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஆவணங்களும் நம்மிடம் உள்ளது.
அவற்றை காண்பித்தபிறகும் பஸ்கள் இன்று காலை வரை விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல்விஷாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றார். தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 106-ம் ஆண்டு காளை விடும் திருவிழா இன்று நடந்தது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், கிருஷ்ணகிரி வாணியம்பாடி, காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர், வி.கோட்டா, பங்காரு பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
காலை விடும் வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.
காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஏராமான இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.
அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்ட காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித்தியாசமான பெயர்களை சூட்டி ஓடவிட்டனர்.
கொரோனா எக்ஸ்பிரஸ், நான் உன்னை காதலிக்கிறேன், மங்காத்தா, வர்தா புயல், தமிழ்நாடு போலீஸ், பில்லா, போலேரோ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. வித்தியாசமான பெயர்களில் காளைகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த ஆரவாரம் எழுந்தது.
பந்தய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்து சங்கீதா எக்ஸ்பிரஸ் என்ற காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.
வேலூர் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தொண்டர்களை சந்தித்தார்.
அஞ்சல்துறையின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்துவது என்பது பா.ஜ.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதாக உள்ளது.
சென்றமுறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தி திணிப்பு, சமஸ்கிருத அங்கீகாரம் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நியமித்தது ஆளுநர் தான். ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரின் பதவியை நீட்டித்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அவர்கள் எதையும் நிறைவேற்ற போவதில்லை.
தி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
நாங்கள் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியில் இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்து அதனை நிரூபித்துள்ளோம்.
தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து இப்போது எதையும் தெரிவிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் பாகாயம் இடையன்சாத்து கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அனிதா மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரின் தாயார் லட்சுமி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.






