என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம், பனமடங்கி, அத்தியூர் ஆகிய 3 இடங்களில் காளை விடும் விழா
Byமாலை மலர்15 Jan 2021 8:36 AM GMT (Updated: 15 Jan 2021 8:36 AM GMT)
பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 106-ம் ஆண்டு காளை விடும் திருவிழா இன்று நடந்தது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், கிருஷ்ணகிரி வாணியம்பாடி, காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர், வி.கோட்டா, பங்காரு பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
காலை விடும் வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.
காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஏராமான இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.
அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்ட காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித்தியாசமான பெயர்களை சூட்டி ஓடவிட்டனர்.
கொரோனா எக்ஸ்பிரஸ், நான் உன்னை காதலிக்கிறேன், மங்காத்தா, வர்தா புயல், தமிழ்நாடு போலீஸ், பில்லா, போலேரோ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. வித்தியாசமான பெயர்களில் காளைகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த ஆரவாரம் எழுந்தது.
பந்தய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்து சங்கீதா எக்ஸ்பிரஸ் என்ற காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 106-ம் ஆண்டு காளை விடும் திருவிழா இன்று நடந்தது.
இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், கிருஷ்ணகிரி வாணியம்பாடி, காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர், வி.கோட்டா, பங்காரு பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
காலை விடும் வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.
காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
ஏராமான இளைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.
அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்ட காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வித்தியாசமான பெயர்களை சூட்டி ஓடவிட்டனர்.
கொரோனா எக்ஸ்பிரஸ், நான் உன்னை காதலிக்கிறேன், மங்காத்தா, வர்தா புயல், தமிழ்நாடு போலீஸ், பில்லா, போலேரோ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. வித்தியாசமான பெயர்களில் காளைகள் அறிவிக்கப்பட்டபோது பலத்த ஆரவாரம் எழுந்தது.
பந்தய தூரத்தை 8.6 வினாடிகளில் கடந்து சங்கீதா எக்ஸ்பிரஸ் என்ற காளை முதல் பரிசை தட்டிச்சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X